ETV Bharat / city

உயர் தீவிர புயலானது ‘ஆம்பன்’ - மீனவர்களுக்கு எச்சரிக்கை!

author img

By

Published : May 18, 2020, 12:29 PM IST

Updated : May 18, 2020, 3:54 PM IST

சென்னை: வங்கக் கடல் பகுதியில் நிலைகொண்டிருந்த ஆம்பன் புயல் உயர் தீவிர புயலாக வலுப்பெற்றுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

cyclone
cyclone

தெற்கு வங்கக் கடல் பகுதியில் நேற்று (மே 17) மாலை நிலைகொண்டிருந்த ’ஆம்பன்’ அதி தீவிர புயல், வட திசையில் நகர்ந்து இன்று அதிகாலை 2:30 மணியளவில், உயர் தீவிர புயலாக வலுப்பெற்றுள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

“இதன் காரணமாக, இன்று மத்திய வங்கக்கடலின் தென் பகுதிகளில் கடும் சூறாவளிக் காற்று மணிக்கு 140-165 கி.மீ வேகம் வரையிலும், தெற்கு ஒடிசா கடல் பகுதிகளில் மணிக்கு 45-65 கி.மீ வேகம் வரையிலும் வீசக்கூடும். நாளை மத்திய வங்கக்கடலின் வடக்கு பகுதி பகுதிகளில் கடும் சூறாவளிக் காற்று மணிக்கு 170-200 கி.மீ வேகத்திலும், வடக்கு ஒடிசா மற்றும் மேற்கு வங்காள கடல் பகுதிகளில் மணிக்கு 45-65 கி.மீ வேகத்திலும் வீசக்கூடும். இந்த சூறாவளிக் காற்று மறுநாளும் (20/5/20) நீடிக்கும்.

இதனால், கடல் அதி சீற்றத்துடனும் காணப்படும் என்பதால், வரும் 20ஆம் தேதி வரை மீனவர்கள் யாரும் மேற்கூறிய பகுதிகளுக்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம்.

உயர் தீவிர புயலானது ‘ஆம்பன்’ - மீனவர்களுக்கு எச்சரிக்கை!

வட தமிழ்நாட்டில் அடுத்த இரண்டு நாட்களுக்கு அதிகபட்ச வெப்பநிலையை காட்டிலும் 2-3 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் உயர்ந்து காணப்படும். சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடனும், நகரின் ஒருசில இடங்களில் லேசான மழைக்கும் வாய்ப்புள்ளது“ என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க: காவிரி டெல்டா பாசனத்திற்கு காலதாமதமின்றி மேட்டூர் அணை திறக்க வேண்டும் - மு.க.ஸ்டாலின்

தெற்கு வங்கக் கடல் பகுதியில் நேற்று (மே 17) மாலை நிலைகொண்டிருந்த ’ஆம்பன்’ அதி தீவிர புயல், வட திசையில் நகர்ந்து இன்று அதிகாலை 2:30 மணியளவில், உயர் தீவிர புயலாக வலுப்பெற்றுள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

“இதன் காரணமாக, இன்று மத்திய வங்கக்கடலின் தென் பகுதிகளில் கடும் சூறாவளிக் காற்று மணிக்கு 140-165 கி.மீ வேகம் வரையிலும், தெற்கு ஒடிசா கடல் பகுதிகளில் மணிக்கு 45-65 கி.மீ வேகம் வரையிலும் வீசக்கூடும். நாளை மத்திய வங்கக்கடலின் வடக்கு பகுதி பகுதிகளில் கடும் சூறாவளிக் காற்று மணிக்கு 170-200 கி.மீ வேகத்திலும், வடக்கு ஒடிசா மற்றும் மேற்கு வங்காள கடல் பகுதிகளில் மணிக்கு 45-65 கி.மீ வேகத்திலும் வீசக்கூடும். இந்த சூறாவளிக் காற்று மறுநாளும் (20/5/20) நீடிக்கும்.

இதனால், கடல் அதி சீற்றத்துடனும் காணப்படும் என்பதால், வரும் 20ஆம் தேதி வரை மீனவர்கள் யாரும் மேற்கூறிய பகுதிகளுக்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம்.

உயர் தீவிர புயலானது ‘ஆம்பன்’ - மீனவர்களுக்கு எச்சரிக்கை!

வட தமிழ்நாட்டில் அடுத்த இரண்டு நாட்களுக்கு அதிகபட்ச வெப்பநிலையை காட்டிலும் 2-3 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் உயர்ந்து காணப்படும். சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடனும், நகரின் ஒருசில இடங்களில் லேசான மழைக்கும் வாய்ப்புள்ளது“ என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க: காவிரி டெல்டா பாசனத்திற்கு காலதாமதமின்றி மேட்டூர் அணை திறக்க வேண்டும் - மு.க.ஸ்டாலின்

Last Updated : May 18, 2020, 3:54 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.