ETV Bharat / city

தமிழ்நாட்டில் கனமழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்!

author img

By

Published : Sep 23, 2019, 5:25 PM IST

வங்கக்கடலில் நிலை கொண்டிருக்கும் மேலடுக்கு சுழற்சி, அடுத்த மூன்று நாள்களில் தமிழகத்தை நோக்கி நகர்வதால், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியின் பெரும்பாலான மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் தெரிவித்துள்ளார்.

chennai meteorological department director Puviyarasan

வங்கக்கடலில் மேலடுக்கு சுழற்சி நிலைக் கொண்டிருப்பதையொட்டி, சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார்.

chennai meteorological department director Puviyarasan
அப்போது பேசிய அவர் “வருகிற 25ஆம் தேதி கடலோர மற்றும் தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளது. கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, அரியலூர், பெரம்பலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், திண்டுக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம், மதுரை, புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை முதல் மிகக் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னையைப் பொருத்தவரையில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் அதிகபட்சமாக சிவகங்கை மாவட்டம் தேவக்கோட்டை, தருமபுரி மாவட்டம் பாலக்கோட்டில் 11 செ.மீ மழையும், கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளியில் 9 செ.மீ மழையும் பதிவாகியுள்ளது. வருகிற 24, 25 ஆகிய தேதிகளில் குமரி கடல், தென் தமிழ்நாடு கடலோரப் பகுதிகள் மற்றும் மாலத்தீவு பகுதிகளில் வலிமையான சூறைக்காற்று வீச வாய்ப்பிருப்பதால், அடுத்த இரண்டு நாட்களுக்கு மேற்கூறிய பகுதிகளுக்கு மீன்வர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என்றார்.













வங்கக்கடலில் மேலடுக்கு சுழற்சி நிலைக் கொண்டிருப்பதையொட்டி, சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார்.

chennai meteorological department director Puviyarasan
அப்போது பேசிய அவர் “வருகிற 25ஆம் தேதி கடலோர மற்றும் தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளது. கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, அரியலூர், பெரம்பலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், திண்டுக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம், மதுரை, புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை முதல் மிகக் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னையைப் பொருத்தவரையில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் அதிகபட்சமாக சிவகங்கை மாவட்டம் தேவக்கோட்டை, தருமபுரி மாவட்டம் பாலக்கோட்டில் 11 செ.மீ மழையும், கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளியில் 9 செ.மீ மழையும் பதிவாகியுள்ளது. வருகிற 24, 25 ஆகிய தேதிகளில் குமரி கடல், தென் தமிழ்நாடு கடலோரப் பகுதிகள் மற்றும் மாலத்தீவு பகுதிகளில் வலிமையான சூறைக்காற்று வீச வாய்ப்பிருப்பதால், அடுத்த இரண்டு நாட்களுக்கு மேற்கூறிய பகுதிகளுக்கு மீன்வர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என்றார்.













Intro:Body:வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், "வங்ககடலில் நிலைக் கொண்டிருக்கும் மேலடுக்கு சுழற்சியானது அடுத்த 3 நாள்களில் தமிழகத்தை நோக்கி நகர்வதால் தமிழகம் மற்றும் புதுவையில் பெரும்பாலான மாவட்டங்களில் மிதமான மழைக்கும் வடதமிழக மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமானது முதல் மிக கனமான மழைக்கும் வாய்ப்புள்ளது.

கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, அரியலூர், பெரம்பலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், திண்டுக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், மதுரை, புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

வரும் 25 ஆம் தேதி கடலோர மாவட்டங்கள் மற்றும் தென் மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளது.

சென்னையை பொருத்தவரையில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.

கடந்த 24 மணிநேரத்தில் மழையின் அளவு அதிகபட்சமாக சிவகங்கை மாவட்டம் தேவக்கோட்டை, தருமபுரி மாவட்டம் பாலக்கோட்டில் 11 செ.மீ மழையும் கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளியில் 9 செ.மீ மழையும் பதிவாகியுள்ளது.

வரும் 24, 25 ஆகிய தேதிகளில் குமரிக் கடல், தென் தமிழக கடலோர பகுதிகள் மற்றும் மாலத்தீவு பகுதிகளில் வலிமையான சூறைக்காற்று வீச வாய்ப்பிருப்பதால் அடுத்த 2 நாள்களுக்கு மேற்கூறிய பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கப்படுகிறார்கள்" என்று தெரிவித்தார். Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.