கர்நாடகாவில் கனமழையால் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. பெல்காம் மாவட்டத்தில் பெய்துவரும் கனமழையால் மாலாபிரபா ஆறு பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால், கடக் (Gadag) மாவட்டத்தில் உள்ள மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு இடம்பெயர்ந்துவருகின்றனர். இந்நிலையில் கர்நாடக அணைகளிலிருந்து தமிழ்நாட்டிற்கு 1.02 லட்சம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
கபினி அணையிலிருந்து காவிரி ஆற்றில் 90 ஆயிரம் கனஅடி தண்ணீரும், தாரகா அணையிலிருந்து வினாடிக்கு 12,000 கனஅடி தண்ணீரும் திறக்கப்பட்டுள்ளது .