ETV Bharat / city

போலி ஆவணங்கள் மூலம் சொத்துக்களை அபகரிக்க உதவிய சார்பதிவாளர் மீது வழக்கு

author img

By

Published : Dec 27, 2021, 11:37 AM IST

போலி ஆவணங்கள் மூலம் சொத்துக்களை அபகரிக்க உதவிய கூடுவாஞ்சேரி சார்பதிவாளர் உள்ளிட்ட 5 பேர் மீது லஞ்ச ஒழிப்புத்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

போலி ஆவணங்கள்
போலி ஆவணங்கள்

சென்னை: ராமநாதபுரத்தைச் சேர்ந்தவர் மீரா மைதீன். தொழிலதிபரான இவர், மலேசியாவில் ஹோட்டல் உள்ளிட்டவை நடத்தி வருகிறார். இந்நிலையில் 1982 ஆம் ஆண்டு விஜிபி கோல்டன் பீச் பகுதியில் 5 கிரவுண்ட் நிலம் வாங்கியுள்ளார்.

இந்த நிலத்தை சென்னையில் வாங்கிய பிறகு தொடர்ந்து, அதை கண்காணிக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. கடந்த 2009 ஆம் ஆண்டு தொழிலதிபர் மீரா மைதீன் உயிரிழந்தார்.

இதனையடுத்து மலேசிய அரசு அவர் இறந்ததாக கொடுத்த சான்றிதழ் அடிப்படையில், அவரது மனைவி மற்றும் மகள்களுக்கு சென்னையில் வாங்கப்பட்ட சொத்துகள் மாற்றப்பட்டன.

குறிப்பிட்ட நீலாங்கரை சார்பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்ட 5 கிரவுண்ட் மற்றும் 2,388 சதுர அடி கொண்ட சொத்தை பராமரிப்பதற்காக, ராமநாதபுரத்தில் உள்ள மீரா மைதீன் தந்தை முகமது இஸ்மாயிலுக்கு பொது அதிகாரம் வழங்கியுள்ளனர்.

இது தொடர்பாக மலேசியாவில் இருக்கும் மீரா மைதீன் மனைவி மற்றும் மகள்களுக்கு தெரியவந்துள்ளது. எனவே இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த 2018 ஆம் ஆண்டு நீலாங்கரை சார்பதிவாளர் அலுவலகத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

போலி ஆவணங்களை தயாரித்த சார்பதிவாளர்

இதனை சாதகமாக பயன்படுத்தி கொண்ட நீலாங்கரை சார் பதிவாளர் ஆக இருந்த ஆறுமுக நவராஜ், ஹாசன் முகமது, நிஹாரா ஜமால், பைரோஸ் பானு ஜமால், மற்றும் சரவணன் ஆகியோர் கூட்டாக சேர்ந்து 4.33 கோடி ரூபாய்க்கு போலி ஆவணங்களை தயாரித்து சொத்துக்களை அபகரித்தது லஞ்ச ஒழிப்புத்துறையினருக்கு விசாரணையில் தெரியவந்தது.

மேலும் நீலாங்கரை சார் பதிவாளர் ஆக இருந்து, தற்போது கூடுவாஞ்சேரி சார் பதிவாளர் ஆகப் பணிபுரியும் ஆறுமுக நவராஜ் மற்றும் ஹாசன் முகமது, நிஹாரா ஜமால், பைரோஸ் பானு ஜமால், மற்றும் சரவணன் ஆகியோர் மீது லஞ்ச ஒழிப்புத்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அதிலும் குறிப்பாக சார்பதிவாளரான ஆறுமுக நவராஜ் 2017 ஆம் ஆண்டு முதல் 2019ஆம் ஆண்டு வரை நீலாங்கரை சார்பு ஆய்வாளராக பணிபுரிந்துள்ளார்.

இது குறித்து லஞ்ச ஒழிப்புத்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: cloth bag campaign: மஞ்சப்பை விழிப்புணர்வு

சென்னை: ராமநாதபுரத்தைச் சேர்ந்தவர் மீரா மைதீன். தொழிலதிபரான இவர், மலேசியாவில் ஹோட்டல் உள்ளிட்டவை நடத்தி வருகிறார். இந்நிலையில் 1982 ஆம் ஆண்டு விஜிபி கோல்டன் பீச் பகுதியில் 5 கிரவுண்ட் நிலம் வாங்கியுள்ளார்.

இந்த நிலத்தை சென்னையில் வாங்கிய பிறகு தொடர்ந்து, அதை கண்காணிக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. கடந்த 2009 ஆம் ஆண்டு தொழிலதிபர் மீரா மைதீன் உயிரிழந்தார்.

இதனையடுத்து மலேசிய அரசு அவர் இறந்ததாக கொடுத்த சான்றிதழ் அடிப்படையில், அவரது மனைவி மற்றும் மகள்களுக்கு சென்னையில் வாங்கப்பட்ட சொத்துகள் மாற்றப்பட்டன.

குறிப்பிட்ட நீலாங்கரை சார்பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்ட 5 கிரவுண்ட் மற்றும் 2,388 சதுர அடி கொண்ட சொத்தை பராமரிப்பதற்காக, ராமநாதபுரத்தில் உள்ள மீரா மைதீன் தந்தை முகமது இஸ்மாயிலுக்கு பொது அதிகாரம் வழங்கியுள்ளனர்.

இது தொடர்பாக மலேசியாவில் இருக்கும் மீரா மைதீன் மனைவி மற்றும் மகள்களுக்கு தெரியவந்துள்ளது. எனவே இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த 2018 ஆம் ஆண்டு நீலாங்கரை சார்பதிவாளர் அலுவலகத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

போலி ஆவணங்களை தயாரித்த சார்பதிவாளர்

இதனை சாதகமாக பயன்படுத்தி கொண்ட நீலாங்கரை சார் பதிவாளர் ஆக இருந்த ஆறுமுக நவராஜ், ஹாசன் முகமது, நிஹாரா ஜமால், பைரோஸ் பானு ஜமால், மற்றும் சரவணன் ஆகியோர் கூட்டாக சேர்ந்து 4.33 கோடி ரூபாய்க்கு போலி ஆவணங்களை தயாரித்து சொத்துக்களை அபகரித்தது லஞ்ச ஒழிப்புத்துறையினருக்கு விசாரணையில் தெரியவந்தது.

மேலும் நீலாங்கரை சார் பதிவாளர் ஆக இருந்து, தற்போது கூடுவாஞ்சேரி சார் பதிவாளர் ஆகப் பணிபுரியும் ஆறுமுக நவராஜ் மற்றும் ஹாசன் முகமது, நிஹாரா ஜமால், பைரோஸ் பானு ஜமால், மற்றும் சரவணன் ஆகியோர் மீது லஞ்ச ஒழிப்புத்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அதிலும் குறிப்பாக சார்பதிவாளரான ஆறுமுக நவராஜ் 2017 ஆம் ஆண்டு முதல் 2019ஆம் ஆண்டு வரை நீலாங்கரை சார்பு ஆய்வாளராக பணிபுரிந்துள்ளார்.

இது குறித்து லஞ்ச ஒழிப்புத்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: cloth bag campaign: மஞ்சப்பை விழிப்புணர்வு

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.