ETV Bharat / city

முதலமைச்சர் பழனிசாமி தலைமையில் அமைச்சரவை கூட்டம்!

author img

By

Published : Feb 13, 2021, 5:40 PM IST

சென்னை: இடைக்கால நிதி நிலை அறிக்கை தாக்கல் செய்யப்படவுள்ள நிலையில் தமிழக அமைச்சரவை கூட்டம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று நடைபெற்றது.

meeting
meeting

சட்டப்பேரவையில் துணை முதலமைச்சரும் நிதி அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் இடைக்கால நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்யவுள்ளார். இதற்கான தேதி விரைவில் அறிவிக்கப்படவுள்ளது. இந்நிலையில் தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் இன்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது.

நிதிநிலையில் இடம்பெறக் கூடிய புதிய திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடு, சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் தேர்தலுக்கான நிதி ஒதுக்கீடு ஆகியவை குறித்து இக்கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. மேலும் புதிதாக அறிவிக்கப்படவுள்ள நலத் திட்டங்கள் குறித்தும் இந்தக் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

சட்டப்பேரவையில் துணை முதலமைச்சரும் நிதி அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் இடைக்கால நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்யவுள்ளார். இதற்கான தேதி விரைவில் அறிவிக்கப்படவுள்ளது. இந்நிலையில் தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் இன்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது.

நிதிநிலையில் இடம்பெறக் கூடிய புதிய திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடு, சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் தேர்தலுக்கான நிதி ஒதுக்கீடு ஆகியவை குறித்து இக்கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. மேலும் புதிதாக அறிவிக்கப்படவுள்ள நலத் திட்டங்கள் குறித்தும் இந்தக் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதையும் படிங்க: தமிழ்நாட்டிற்கு புயல் நிவாரண நிதியாக ரூ.286.91 கோடி ஒதுக்கீடு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.