சென்னை: கோயம்பேடு சீமாத்தமன் நகரை சேர்ந்தவர் தினேஷ்(41). இவர் கோயம்பேடு சின்மயா நகரில் குளோபல் நெட் பிரௌசிங் சென்டர் வைத்து நடத்தி வருகிறார். இவருக்கு இரு பிள்ளைகள் உள்ளனர்.
நேற்று முன்தினம் ஜனவரி 9 ஆம் தேதி, மனைவி மற்றும் பிள்ளைகளை வீட்டின் படுக்கையறையில் சென்று உறங்கிய பொது தினேஷ் ஹாலிலேயே உறங்கி உள்ளார். பின்னர், நேற்று அதிகாலை அவரது மனைவி அறையிலிருந்து வெளியே வந்த போது, தினேஷ் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
இதனையடுத்து உடனடியாக கோயம்பேடு காவல் நிலையத்திற்குத் தகவல் அளித்தனர். புகாரின் பேரில் காவல்துறை சம்பவ இடத்திற்கு வந்து பிரேதத்தை கைப்பற்றி கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர், காவல்துறை நடத்திய விசாரணையில், தினேஷ் தற்கொலை கடிதம் ஒன்றை எழுதி வைத்துள்ளது தெரியவந்தது.
![தற்கொலை எதற்கும் தீர்வல்ல! சிந்தித்து செயல்படுங்கள்..](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/14152248_djklhj.jpg)
கடன் தொல்லை
அந்த கடிதத்தில் 'தான் பலரிடம் ரூ.10 லட்சம் அளவில் பணம் வாங்கியதாகவும், அதை வேறு நபர்களுக்கு கடனாகக் கொடுத்ததாகவும், அந்த பணம் திரும்பி வரவில்லை என குறிப்பிட்டுள்ளார். மேலும், யாருக்கெல்லாம் தினேஷ் பணம் கொடுத்துள்ளார்? யாரெல்லாம் தினேஷுக்கு பணம் கொடுத்து உள்ளார்கள் என்பதை எழுதி வைத்துவிட்டு, என் மரணத்திற்கு யாரும் காரணம் இல்லை!' எனவும் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
![ஆன்லைன் ரம்மி விளையாட்டால் தற்கொலை செய்து கொண்டவர்.](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-che-01a-gamblingsuicide-script-7202290_10012022153938_1001f_1641809378_340.jpg)