ETV Bharat / city

ஸ்கிம்மர் மூலம் ஏடிஎம் திருட்டில் ஈடுபட்ட கொள்ளைக் கும்பல்: முக்கிய குற்றவாளி கைது!

author img

By

Published : Dec 2, 2019, 11:05 PM IST

சென்னை: நாடு முழுவதும் ஏடிஎம்களில் ஸ்கிம்மர் பொருத்தி பணத்தை கொள்ளையடித்த கும்பலைச் சேர்ந்த முக்கிய குற்றவாளியை சென்னை தனிப்படை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

Atm skimmer theft main acquit arrested
Atm skimmer theft main acquit arrested

சென்னை சேப்பாக்கத்திலுள்ள தனியார் விடுதியில், பிப்ரவரி 10ஆம் தேதி கொல்கத்தா சைபர் கிரைம் காவல் துரையினர் அதிரடி சோதனை மேற்கொண்டனர். இச்சோதனையில் ஏடிஎம் கொள்ளையில் தொடர்புடையவர்கள் என்று கூறி, ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த மூன்று பேரை அவர்கள் கைது செய்தனர்.

பின்னர் அவர்களை திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் வைத்து விசாரணை செய்தனர். கொல்கத்தா காவல் துறையினர் நடத்திய விசாரணையில், அவர்கள் நாடு முழுவதும் உள்ள 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏடிஎம்களில் பணப்பரிவர்த்தனையில் ஈடுபடும் வாடிக்கையாளர்களின் ரகசிய தகவல்களைத் திருடி, பண மோசடி செய்யும் கும்பலைச் சேர்ந்தவர்கள் என தெரியவந்தது.

மேலும் ஸ்கிம்மர், ரகசிய படக்கருவிகளை வைத்து வாடிக்கையாளர்களின் பணத்தை கொள்ளையடித்திருப்பதும் அம்பலமானது. இந்த வழக்கில் பிடிபட்டவர்களில் பாஸ்கர் என்ற முக்கிய குற்றவாளி, விசாரணையின்போது திருவல்லிக்கேணியிலிருந்து தப்பிச் சென்றுள்ளார். இதனையடுத்து திருவெல்லிக்கேணி காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து அவரைத் தீவிரமாக தேடி வந்தனர்.

ரசாயனம் தடவிய பழங்கள்; ஒரு டன் சிக்கியது!

தனிப்படையினரும் மேற்கு வங்கம் சென்று தேடுதலில் ஈடுபட்டனர். கைபேசியின் சமிக்ஞைகள், கைது செய்யப்பட்ட கூட்டாளிகள் கொடுத்த தகவல் ஆகியவற்றின் அடிப்படையில் நீண்ட காலமாக பாஸ்கரை கண்காணித்து வந்துள்ளனர். இவ்வேளையில், நேற்று தப்பிச் சென்ற பாஸ்கரை மேற்கு வங்கத்தில் வைத்து, சென்னை தனிப்படை காவல் துறையினர் சுற்றி வளைத்து கைது செய்துள்ளனர்.

தமிழ்நாட்டில் எத்தனை ஏடிஎம்களில் ஸ்கிம்மர் இயந்திரங்கள் பொருத்திக் கொள்ளையடித்துள்ளார்கள் என தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

பெண் மீது இயக்குனர் பி.வாசு புகார்.!

சென்னை சேப்பாக்கத்திலுள்ள தனியார் விடுதியில், பிப்ரவரி 10ஆம் தேதி கொல்கத்தா சைபர் கிரைம் காவல் துரையினர் அதிரடி சோதனை மேற்கொண்டனர். இச்சோதனையில் ஏடிஎம் கொள்ளையில் தொடர்புடையவர்கள் என்று கூறி, ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த மூன்று பேரை அவர்கள் கைது செய்தனர்.

பின்னர் அவர்களை திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் வைத்து விசாரணை செய்தனர். கொல்கத்தா காவல் துறையினர் நடத்திய விசாரணையில், அவர்கள் நாடு முழுவதும் உள்ள 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏடிஎம்களில் பணப்பரிவர்த்தனையில் ஈடுபடும் வாடிக்கையாளர்களின் ரகசிய தகவல்களைத் திருடி, பண மோசடி செய்யும் கும்பலைச் சேர்ந்தவர்கள் என தெரியவந்தது.

மேலும் ஸ்கிம்மர், ரகசிய படக்கருவிகளை வைத்து வாடிக்கையாளர்களின் பணத்தை கொள்ளையடித்திருப்பதும் அம்பலமானது. இந்த வழக்கில் பிடிபட்டவர்களில் பாஸ்கர் என்ற முக்கிய குற்றவாளி, விசாரணையின்போது திருவல்லிக்கேணியிலிருந்து தப்பிச் சென்றுள்ளார். இதனையடுத்து திருவெல்லிக்கேணி காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து அவரைத் தீவிரமாக தேடி வந்தனர்.

ரசாயனம் தடவிய பழங்கள்; ஒரு டன் சிக்கியது!

தனிப்படையினரும் மேற்கு வங்கம் சென்று தேடுதலில் ஈடுபட்டனர். கைபேசியின் சமிக்ஞைகள், கைது செய்யப்பட்ட கூட்டாளிகள் கொடுத்த தகவல் ஆகியவற்றின் அடிப்படையில் நீண்ட காலமாக பாஸ்கரை கண்காணித்து வந்துள்ளனர். இவ்வேளையில், நேற்று தப்பிச் சென்ற பாஸ்கரை மேற்கு வங்கத்தில் வைத்து, சென்னை தனிப்படை காவல் துறையினர் சுற்றி வளைத்து கைது செய்துள்ளனர்.

தமிழ்நாட்டில் எத்தனை ஏடிஎம்களில் ஸ்கிம்மர் இயந்திரங்கள் பொருத்திக் கொள்ளையடித்துள்ளார்கள் என தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

பெண் மீது இயக்குனர் பி.வாசு புகார்.!

Intro:Body:நாடு முழுவதும் ஏ.டி.எம்மில் ஸ்கிம்மர் பொருத்தி பணத்தை கொள்ளையடித்த கும்பல் சென்னையில் கைது செய்யப்பட்ட போது,தப்பி சென்ற முக்கிய குற்றவாளியை சென்னை தனிப்படை போலிசார் கைது செய்துள்ளனர்



சென்னை சேப்பாக்கத்தில் உள்ள தனியார் ஓட்டலில் கடந்த பிப்ரவரி 10 ஆம் தேதி கொல்கத்தா சைபர் கிரைம்
போலீசார் அதிரடியாக சோதனை நடத்தினர் இந்த சோதனையில் ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த மூன்று பேரை அவர்கள் கைது செய்தனர்

பின்னர் அவர்களை திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் வைத்து விசாரணை செய்தனர். கொல்கத்தா போலீசார் நடத்திய விசாரணையில்
நாடு முழுவதும் உள்ள 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏடிஎம்களில் பணப்பரிவர்த்தனையில் ஈடுபடும் வாடிக்கையாளர்களின் ரகசிய தகவல்களை திருடி பண மோசடி செய்யும் கும்பல் என தெரியவந்துள்ளது.ஸ்கிம்மர் மற்றும் ரகசிய கேமராக்கள் வைத்து வாடிக்கையாளர்களின் பணத்தை கொள்ளையடித்திருப்பது தெரிய வந்துள்ளது.இந்த வழக்கில் பிடிப்பட்டவர்களில் பாஸ்கர் என்ற முக்கிய குற்றவாளி விசாரணையின் போது திருவல்லிக்கேணியில் இருந்து தப்பி சென்றுள்ளார். இதனையடுத்து திருவெல்லிக்கேணி போலிசார் வழக்கு பதிவு செய்து தீவிரமாக தேடி வந்தனர்.தனிப்படை ஒன்று மேற்கு வங்காளம் சென்று தேடுதலில் ஈடுபட்டனர்.செல்போன் சிக்னல்கள் மற்றும் கைது செய்யப்பட்ட கூட்டாளிகள் கொடுத்த தகவலின் அடிப்படையில் நீண்ட காலமாக கண்காணித்து வந்துள்ளனர்.இதனையடுத்து நேற்று மேற்கு வங்காளத்தில் தப்பி சென்ற பாஸ்கரை சென்னை தனிப்படை போலிசார் சுற்றி வளைத்து கைது செய்துள்ளனர். தமிழகத்தில் எத்தனை ஏ.டி எம் களில் ஸ்கிம்மர் மிஷின்கள் பொருத்தி கொள்ளையடித்துள்ளார்கள் என விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.