ETV Bharat / city

'நான்தான் ஜெயலலிதாவின் சகோதரர்...' 83 வயதில் சொத்தில் பங்கு கேட்கும் மைசூர் முதியவர்!

author img

By

Published : Jul 10, 2022, 11:21 AM IST

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் தந்தை ஜெயராமின் மகன் என கூறி, ஜெயலலிதாவின் சொத்துகளில் பாதி பங்கை தனக்கு வழங்க கோரி மைசூரை சேர்ந்த முதியவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

Petition on MHC to Claim Brother of Jayalalitha
Petition on MHC to Claim Brother of Jayalalitha

சென்னை: மறைந்த தமிழ்நாடு முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதாவின் சகோதரர் என கூறி, கர்நாடகா மைசூருவில் உள்ள வியாசராபுரத்தை சேர்ந்த வாசுதேவன் (83) என்பவர் தாக்கல் சென்னை உயர் நீதிமன்றித்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அதில், "ஜெயலலிதாவின் தந்தையான ஆர்.ஜெயராம்தான், தனக்கும் தந்தை. ஜெயராமின் முதல் மனைவி ஜெ.ஜெயம்மா. அவர்களின் ஒரே வாரிசு நான் மட்டுமே.

தந்தை ஜெயராம் இரண்டாவதாக வேதவல்லி என்கிற வேதம்மாவை திருமணம் செய்து கொண்டதன் மூலம்தான், ஜெயக்குமாரும், ஜெயலலிதாவும் பிறந்தனர். அந்த வகையில் ஜெயலலிதா, ஜெயக்குமார் ஆகியோர் எனது சகோதர, சகோதரி.

1950ஆம் ஆண்டில் ஜீவனாம்சம் கேட்டு மைசூரு நீதிமன்றத்தில் எனது தாய் ஜெயம்மா வழக்கு தொடர்ந்தபோது, அந்த வழக்கில் தந்தையின் இரண்டாவது மனைவி வேதவல்லி, ஜெயக்குமார், ஜெயலலிதா ஆகியோர் எதிர்மனுதாரர்களாக சேர்க்கப்பட்டு இருந்தனர். பின்னர், இந்த வழக்கு சமரசத்தில் முடிந்துவிட்டது.

ஜெயலலிதா இறப்பதற்கு முன்பே ஜெயக்குமார் இறந்துவிட்டார். அதனால் இன்றைய தினத்தில் சகோதரர் என்ற முறையில் ஜெயலலிதாவின் நேரடி வாரிசு நான்தான். எனவே, ஜெயலலிதாவின் சொத்துகளில் 50 சதவீதத்தை எனக்கு தர வேண்டும். ஜெ.தீபா, ஜெ.தீபக் ஆகியோர் மட்டுமே ஜெயலலிதாவின் வாரிகள் என்று 2020ஆம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த தீர்ப்பில் திருத்தம் செய்ய வேண்டும்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதே, கர்நாடக மாநிலத்தை சேர்ந்த அம்ருதா என்பவர் நடிகர் ஷோபன்பாபுவிற்கும், ஜெயலலிதாவிற்கும் பிறந்த மகள் என வழக்கு தொடர்ந்திருந்த நிலையில், அது பொய் வழக்கு எனக் கூறி 2018ஆம் ஆண்டு உயர் நீதிமன்றம் அவ்வழக்கை தள்ளுபடி செய்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: பெங்களூரு கருவூலத்தில் ஜெயலலிதா சொத்துகள்: ஏலம் விட கோரிக்கை

சென்னை: மறைந்த தமிழ்நாடு முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதாவின் சகோதரர் என கூறி, கர்நாடகா மைசூருவில் உள்ள வியாசராபுரத்தை சேர்ந்த வாசுதேவன் (83) என்பவர் தாக்கல் சென்னை உயர் நீதிமன்றித்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அதில், "ஜெயலலிதாவின் தந்தையான ஆர்.ஜெயராம்தான், தனக்கும் தந்தை. ஜெயராமின் முதல் மனைவி ஜெ.ஜெயம்மா. அவர்களின் ஒரே வாரிசு நான் மட்டுமே.

தந்தை ஜெயராம் இரண்டாவதாக வேதவல்லி என்கிற வேதம்மாவை திருமணம் செய்து கொண்டதன் மூலம்தான், ஜெயக்குமாரும், ஜெயலலிதாவும் பிறந்தனர். அந்த வகையில் ஜெயலலிதா, ஜெயக்குமார் ஆகியோர் எனது சகோதர, சகோதரி.

1950ஆம் ஆண்டில் ஜீவனாம்சம் கேட்டு மைசூரு நீதிமன்றத்தில் எனது தாய் ஜெயம்மா வழக்கு தொடர்ந்தபோது, அந்த வழக்கில் தந்தையின் இரண்டாவது மனைவி வேதவல்லி, ஜெயக்குமார், ஜெயலலிதா ஆகியோர் எதிர்மனுதாரர்களாக சேர்க்கப்பட்டு இருந்தனர். பின்னர், இந்த வழக்கு சமரசத்தில் முடிந்துவிட்டது.

ஜெயலலிதா இறப்பதற்கு முன்பே ஜெயக்குமார் இறந்துவிட்டார். அதனால் இன்றைய தினத்தில் சகோதரர் என்ற முறையில் ஜெயலலிதாவின் நேரடி வாரிசு நான்தான். எனவே, ஜெயலலிதாவின் சொத்துகளில் 50 சதவீதத்தை எனக்கு தர வேண்டும். ஜெ.தீபா, ஜெ.தீபக் ஆகியோர் மட்டுமே ஜெயலலிதாவின் வாரிகள் என்று 2020ஆம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த தீர்ப்பில் திருத்தம் செய்ய வேண்டும்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதே, கர்நாடக மாநிலத்தை சேர்ந்த அம்ருதா என்பவர் நடிகர் ஷோபன்பாபுவிற்கும், ஜெயலலிதாவிற்கும் பிறந்த மகள் என வழக்கு தொடர்ந்திருந்த நிலையில், அது பொய் வழக்கு எனக் கூறி 2018ஆம் ஆண்டு உயர் நீதிமன்றம் அவ்வழக்கை தள்ளுபடி செய்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: பெங்களூரு கருவூலத்தில் ஜெயலலிதா சொத்துகள்: ஏலம் விட கோரிக்கை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.