ETV Bharat / city

பலத்துறைக்கு ரூ. 6,408 கோடி ஒதுக்கீடு - துணை முதலமைச்சர் அறிவி்ப்பு

author img

By

Published : Mar 23, 2020, 2:27 PM IST

சென்னை: பலத்துறைக்கு 6,408 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

ops
ops

தமிழ்நாடு சட்டப்பேரவையில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், துணை நிதிநிலை சட்ட மசோதாவை தாக்கல் செய்து பேசியதாவது,

"பலத்துறைக்கு 6,408 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் தகவல் தொடர்பு தொழில்நுட்ப முயற்சிகளை மேற்கொள்ள 231 கோடியே 7 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இடைநிலை கல்வி மேம்பாட்டு திட்டத்தைச் செயல்படுத்துவதற்காக 160 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் வழங்க 123 கோடி ரூபாய் ஒதுக்கீடு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

கடலோர பேரிடர் ஆபத்துக் குறைப்புத் திட்டத்தின் கீழ் நெகிழ்திறன் சூறாவளி மின் வலையமைப்புகளை நிறுவுவதற்காக 113 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. வெள்ளத்தடுப்பு பணிகளை மேற்கொள்ளவும், அரசு கட்டடங்களை பழுதுபார்த்து சீரமைக்க 193 கோடி ரூபாய் ஒதுக்கீடும், பல்வேறு அரசு மருத்துவமனைகளுக்கு மருந்துகள் கொள்முதல் செய்வதற்காக 166 கோடி ஒதுக்கீடும் செய்யப்பட்டுள்ளன.

ஐந்து புதிய மாவட்டங்களை உருவாக்கவும், இதர மாவட்ட நிர்வாக செலவுகளுக்காக 252 கோடி ரூபாயும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதுடன், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சிப்பணிகள் திட்டத்தை செயல்படுத்த 198 கோடி ரூபாய் ஒதுக்கீடும், கரோனா வைரஸ் தொற்றுநோய் தாக்குதலை கட்டுப்படுத்த, முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள 60 கோடி ஒதுக்கீடும் செய்யப்பட்டுள்ளது.

அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் ஊழியர்கள், ஓய்வூதியதாரர்களின் சம்பளம் மற்றும் ஓய்வூதியத்துக்கான செலவினத்துக்கு 188 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த தொகைக்கான நிதி ஒதுக்க் சட்ட முன்வடிவு பேரவையில் நிறைவேற்றப்பட்டு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது", என்றார்.

இதையும் படிங்க: ஒரு உயிர் இழப்புகூட நடக்கவிட மாட்டோம் - முதலமைச்சர் பழனிசாமி உறுதி

தமிழ்நாடு சட்டப்பேரவையில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், துணை நிதிநிலை சட்ட மசோதாவை தாக்கல் செய்து பேசியதாவது,

"பலத்துறைக்கு 6,408 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் தகவல் தொடர்பு தொழில்நுட்ப முயற்சிகளை மேற்கொள்ள 231 கோடியே 7 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இடைநிலை கல்வி மேம்பாட்டு திட்டத்தைச் செயல்படுத்துவதற்காக 160 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் வழங்க 123 கோடி ரூபாய் ஒதுக்கீடு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

கடலோர பேரிடர் ஆபத்துக் குறைப்புத் திட்டத்தின் கீழ் நெகிழ்திறன் சூறாவளி மின் வலையமைப்புகளை நிறுவுவதற்காக 113 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. வெள்ளத்தடுப்பு பணிகளை மேற்கொள்ளவும், அரசு கட்டடங்களை பழுதுபார்த்து சீரமைக்க 193 கோடி ரூபாய் ஒதுக்கீடும், பல்வேறு அரசு மருத்துவமனைகளுக்கு மருந்துகள் கொள்முதல் செய்வதற்காக 166 கோடி ஒதுக்கீடும் செய்யப்பட்டுள்ளன.

ஐந்து புதிய மாவட்டங்களை உருவாக்கவும், இதர மாவட்ட நிர்வாக செலவுகளுக்காக 252 கோடி ரூபாயும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதுடன், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சிப்பணிகள் திட்டத்தை செயல்படுத்த 198 கோடி ரூபாய் ஒதுக்கீடும், கரோனா வைரஸ் தொற்றுநோய் தாக்குதலை கட்டுப்படுத்த, முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள 60 கோடி ஒதுக்கீடும் செய்யப்பட்டுள்ளது.

அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் ஊழியர்கள், ஓய்வூதியதாரர்களின் சம்பளம் மற்றும் ஓய்வூதியத்துக்கான செலவினத்துக்கு 188 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த தொகைக்கான நிதி ஒதுக்க் சட்ட முன்வடிவு பேரவையில் நிறைவேற்றப்பட்டு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது", என்றார்.

இதையும் படிங்க: ஒரு உயிர் இழப்புகூட நடக்கவிட மாட்டோம் - முதலமைச்சர் பழனிசாமி உறுதி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.