ETV Bharat / city

மாலை 5 மணி செய்திச்சுருக்கம் Top 10 News @ 5PM

author img

By

Published : Oct 13, 2021, 5:17 PM IST

ஈடிவி பாரத்தின் மாலை 5 மணி செய்திச்சுருக்கம்..

5PM
5PM

1.நீட் தேர்வு விலக்கு: ஒடிசா முதலமைச்சரை நேரில் சந்தித்த கனிமொழி!

நீட் தேர்வு விலக்கு தொடர்பாக ஒடிசா மாநில முதலமைச்சர் நவீன் பட்நாயக்கை, திமுக மக்களவை உறுப்பினரும், மகளிர் அணி செயலாளருமான கனிமொழி நேரில் சந்தித்துபேசினார். அப்போது, முதலமைச்சர் ஸ்டாலினின் நீட் தேர்வு விலக்கு தொடர்பாக தமிழ்நாடு அரசால் நிறைவேற்றபட்ட தீர்மானங்கள் அடங்கிய கடிதத்தை நவீன் பட்நாயக்கிடம் வழங்கினார்.

2.24 மணி நேரத்தில் எட்டு மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

நீலகிரி, கோயம்புத்தூர், ஈரோடு, சேலம், கடலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று (அக். 13) கனமழைக்கு வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

3.நிலக்கோட்டை மலர்ச்சந்தையில் ஒரே நாளில் 200 டன் பூக்கள் விற்பனை; விவசாயிகள் மகிழ்ச்சி

திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை மலர்ச்சந்தையில் பண்டிகையை முன்னிட்டு இன்று(அக்.13) ஒரே நாளில் 200 டன் மலர்கள் விற்பனையானதால், விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

4.நீட் விலக்கு விவகாரம்: ஆளுநரைச் சந்திக்கும் ஸ்டாலின்

தமிழ்நாட்டிற்கு நீட் விலக்கு வழங்குவது தொடர்பாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (அக். 13) ஆளுநர் ஆர்.என். ரவியை சந்திக்க உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

5.உயிருக்கு ஆபத்தான நிலையில் காதல் மனைவி - மீட்டுத் தரக்கோரி எஸ்.பி.-யிடம் புகாரளித்த கணவன்

ஈரோட்டில் கணவன் கண் முன்னே காதல் மனைவியை இழுத்துச் சென்ற அவரது பெற்றோர் குறித்தும், உயிருக்கு ஆபத்தான நிலையில் இருக்கும் மனைவியை மீட்டுத் தரக்கோரியும் காதல் கணவர் காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்துள்ளார்.

6.லக்கிம்பூர் விவகாரம்: குடியரசுத் தலைவரைச் சந்தித்த காங்கிரஸ் குழு

உத்தரப் பிரதேச மாநிலம் லக்கிம்பூரில் விவசாயிகள் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோர் அடங்கிய ஐவர் குழு, குடியரசுத் தலைவரை இன்று (அக். 13) சந்தித்தது.

7.நாட்டில் புதிதாக 15,823 பேருக்கு கரோனா; 226 பேர் உயிரிழப்பு

நாட்டில் புதிதாக 15 ஆயிரத்து 823 நபர்களுக்கு புதிதாக கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இரண்டு லட்சத்து ஏழாயிரத்து 198 நபர்கள் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர்

8.ஒப்பந்தப்புள்ளி முறைகேடு வழக்கில் அரசியல் - நீதிமன்றத்தில் முன்னாள் அமைச்சர் வாதம்

மாறியுள்ள அரசியல் சூழ்நிலையை சாதகமாக்கி, முடிந்து போன ஒப்பந்தப்புள்ளி ஒதுக்கீட்டு வழக்கு விசாரணையை மீண்டும் தொடங்க முடியாது என முன்னாள் அமைச்சர் வேலுமணி சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

9.நாட்டின் உள்கட்டமைப்பு, பொருளாதாரத்தை மேம்படுத்தும் மாபெரும் திட்டம்: தொடங்கிவைத்த மோடி

நாட்டின் உள்கட்டமைப்பு, பொருளாதார மேம்பாடு ஆகியவற்றை மேம்படுத்த உதவும் கதி சக்தி எனப்படும் சிறப்புத் திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கிவைத்தார்.

10.நெடுமுடி வேணு குறித்து நினைவோடையை பகிர்ந்த மம்முட்டி

நடிகர் நெடுமுடி வேணு மறைவிற்கு இரங்கல் தெரிவித்து மம்முட்டி அஞ்சலி குறிப்பொன்றை எழுதியுள்ளார்.

1.நீட் தேர்வு விலக்கு: ஒடிசா முதலமைச்சரை நேரில் சந்தித்த கனிமொழி!

நீட் தேர்வு விலக்கு தொடர்பாக ஒடிசா மாநில முதலமைச்சர் நவீன் பட்நாயக்கை, திமுக மக்களவை உறுப்பினரும், மகளிர் அணி செயலாளருமான கனிமொழி நேரில் சந்தித்துபேசினார். அப்போது, முதலமைச்சர் ஸ்டாலினின் நீட் தேர்வு விலக்கு தொடர்பாக தமிழ்நாடு அரசால் நிறைவேற்றபட்ட தீர்மானங்கள் அடங்கிய கடிதத்தை நவீன் பட்நாயக்கிடம் வழங்கினார்.

2.24 மணி நேரத்தில் எட்டு மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

நீலகிரி, கோயம்புத்தூர், ஈரோடு, சேலம், கடலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று (அக். 13) கனமழைக்கு வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

3.நிலக்கோட்டை மலர்ச்சந்தையில் ஒரே நாளில் 200 டன் பூக்கள் விற்பனை; விவசாயிகள் மகிழ்ச்சி

திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை மலர்ச்சந்தையில் பண்டிகையை முன்னிட்டு இன்று(அக்.13) ஒரே நாளில் 200 டன் மலர்கள் விற்பனையானதால், விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

4.நீட் விலக்கு விவகாரம்: ஆளுநரைச் சந்திக்கும் ஸ்டாலின்

தமிழ்நாட்டிற்கு நீட் விலக்கு வழங்குவது தொடர்பாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (அக். 13) ஆளுநர் ஆர்.என். ரவியை சந்திக்க உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

5.உயிருக்கு ஆபத்தான நிலையில் காதல் மனைவி - மீட்டுத் தரக்கோரி எஸ்.பி.-யிடம் புகாரளித்த கணவன்

ஈரோட்டில் கணவன் கண் முன்னே காதல் மனைவியை இழுத்துச் சென்ற அவரது பெற்றோர் குறித்தும், உயிருக்கு ஆபத்தான நிலையில் இருக்கும் மனைவியை மீட்டுத் தரக்கோரியும் காதல் கணவர் காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்துள்ளார்.

6.லக்கிம்பூர் விவகாரம்: குடியரசுத் தலைவரைச் சந்தித்த காங்கிரஸ் குழு

உத்தரப் பிரதேச மாநிலம் லக்கிம்பூரில் விவசாயிகள் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோர் அடங்கிய ஐவர் குழு, குடியரசுத் தலைவரை இன்று (அக். 13) சந்தித்தது.

7.நாட்டில் புதிதாக 15,823 பேருக்கு கரோனா; 226 பேர் உயிரிழப்பு

நாட்டில் புதிதாக 15 ஆயிரத்து 823 நபர்களுக்கு புதிதாக கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இரண்டு லட்சத்து ஏழாயிரத்து 198 நபர்கள் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர்

8.ஒப்பந்தப்புள்ளி முறைகேடு வழக்கில் அரசியல் - நீதிமன்றத்தில் முன்னாள் அமைச்சர் வாதம்

மாறியுள்ள அரசியல் சூழ்நிலையை சாதகமாக்கி, முடிந்து போன ஒப்பந்தப்புள்ளி ஒதுக்கீட்டு வழக்கு விசாரணையை மீண்டும் தொடங்க முடியாது என முன்னாள் அமைச்சர் வேலுமணி சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

9.நாட்டின் உள்கட்டமைப்பு, பொருளாதாரத்தை மேம்படுத்தும் மாபெரும் திட்டம்: தொடங்கிவைத்த மோடி

நாட்டின் உள்கட்டமைப்பு, பொருளாதார மேம்பாடு ஆகியவற்றை மேம்படுத்த உதவும் கதி சக்தி எனப்படும் சிறப்புத் திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கிவைத்தார்.

10.நெடுமுடி வேணு குறித்து நினைவோடையை பகிர்ந்த மம்முட்டி

நடிகர் நெடுமுடி வேணு மறைவிற்கு இரங்கல் தெரிவித்து மம்முட்டி அஞ்சலி குறிப்பொன்றை எழுதியுள்ளார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.