ETV Bharat / city

ரூ.3 கோடி மதிப்புள்ள 500 கிலோ கஞ்சா பறிமுதல்

author img

By

Published : Oct 6, 2020, 8:10 PM IST

திருவள்ளூர்: ஆந்திராவிலிருந்து டேங்கர் லாரியில் கடத்திவரப்பட்ட 3 கோடி ரூபாய் மதிப்புள்ள 500 கிலோ கஞ்சாவை பறிமுதல்செய்த தனிப்படை காவல் துறையினர் இருவரை கைதுசெய்துள்ளனர்.

seized
seized

ஆந்திராவிலிருந்து டேங்கர் லாரி ஒன்றில் கஞ்சா கடத்திவரப்படுவதாக, மாதவரம் காவல் துணை ஆணையர் பாலகிருஷ்ணனுக்கு கிடைத்த ரகசிய தகவலின்பேரில், பாடியநல்லூர் மேம்பாலத்தில் தனிப்படை காவல் துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது, ஆந்திராவிலிருந்து சென்னைக்கு தார் ஏற்றிவந்த டேங்கர் லாரியை சோதனை செய்ததில், அதில் பண்டல் பண்டலாக 500 கிலோ கஞ்சா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

பின்னர் கஞ்சாவைப் பறிமுதல்செய்து செங்குன்றம் காவல் நிலையம் கொண்டுசென்ற தனிப்படையினர், ஆந்திராவைச் சேர்ந்த ஓட்டுநர் சச்சின் நாராயணன் (35), செனாய் நகரைச் சேர்ந்த சுந்தர் (50) ஆகிய இருவரைப் பிடித்து விசாரித்ததில், விசாகப்பட்டினத்திலிருந்து திருச்சிக்கு கஞ்சா எடுத்துச் சென்றதாகத் தெரிவித்தனர்.

டேங்கர் லாரியில் 500 கிலோ கஞ்சா கடத்தல்

இதையடுத்து இருவரையும் கைதுசெய்த காவல் துறையினர் அவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். கடத்தப்பட்ட கஞ்சாவின் மதிப்பு சுமார் 3 கோடி ரூபாய் இருக்கும் எனக் கூறப்படுகிறது.

இதையும் படிங்க: மனைவி பிரிந்து சென்ற சோகத்தில் கணவன் தற்கொலை!

ஆந்திராவிலிருந்து டேங்கர் லாரி ஒன்றில் கஞ்சா கடத்திவரப்படுவதாக, மாதவரம் காவல் துணை ஆணையர் பாலகிருஷ்ணனுக்கு கிடைத்த ரகசிய தகவலின்பேரில், பாடியநல்லூர் மேம்பாலத்தில் தனிப்படை காவல் துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது, ஆந்திராவிலிருந்து சென்னைக்கு தார் ஏற்றிவந்த டேங்கர் லாரியை சோதனை செய்ததில், அதில் பண்டல் பண்டலாக 500 கிலோ கஞ்சா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

பின்னர் கஞ்சாவைப் பறிமுதல்செய்து செங்குன்றம் காவல் நிலையம் கொண்டுசென்ற தனிப்படையினர், ஆந்திராவைச் சேர்ந்த ஓட்டுநர் சச்சின் நாராயணன் (35), செனாய் நகரைச் சேர்ந்த சுந்தர் (50) ஆகிய இருவரைப் பிடித்து விசாரித்ததில், விசாகப்பட்டினத்திலிருந்து திருச்சிக்கு கஞ்சா எடுத்துச் சென்றதாகத் தெரிவித்தனர்.

டேங்கர் லாரியில் 500 கிலோ கஞ்சா கடத்தல்

இதையடுத்து இருவரையும் கைதுசெய்த காவல் துறையினர் அவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். கடத்தப்பட்ட கஞ்சாவின் மதிப்பு சுமார் 3 கோடி ரூபாய் இருக்கும் எனக் கூறப்படுகிறது.

இதையும் படிங்க: மனைவி பிரிந்து சென்ற சோகத்தில் கணவன் தற்கொலை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.