ETV Bharat / city

கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேர 3,43,586 மாணவர்கள் விண்ணப்பம்

author img

By

Published : Jul 5, 2022, 7:33 PM IST

கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேர 3,43,586 மாணவர்கள் விண்ணப்பம் செய்துள்ளனர்.

விண்ணப்பம்
விண்ணப்பம்

சென்னை: இது குறித்து கல்லூரிக் கல்வி இயக்குநர் கூறும்போது, "தமிழ்நாட்டில் உள்ள 163 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் உள்ள இளநிலை பட்டப்படிப்பு முதலாமாண்டு மாணவர்கள் சேர்க்கைக்கான (2022-23) விண்ணப்பங்களை http://www.tngasa.in/ அல்லது http://www.tngasa.org/ என்ற இணையதள முகவரிகளில் ஜூன் 22 ஆம் தேதி முதல் ஜூலை 7 ஆம் தேதி வரையில் பதிவு செய்யலாம்.

இணையதளம் மூலமாக விண்ணப்பிக்க முடியாத மாணவர்கள் கல்லூரி உதவி மையங்கள் மூலம் விண்ணப்பிக்க வசதி செய்யப்பட்டுள்ளது. அனைத்து மையங்களிலும் கரோனா பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

விண்ணப்பக் கட்டணமாக 50 ரூபாய் செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி பிரிவினர் விண்ணப்பக் கட்டணம் செலுத்த தேவையில்லை. பதிவு கட்டணம் மட்டும் 2 ரூபாய் செலுத்தினால் போதுமானது. மேலும் ஜூன் 5 ஆம் தேதி மாலை 2 மணி வரையிலும் 3,43,586 மாணவர்கள் விண்ணப்பம் செய்துள்ளனர். அவர்களில் 2,82,430 மாணவர்கள் விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்துள்ளனர்.

2,50,181 மாணவர்கள் விண்ணப்பக் கட்டணங்களை செலுத்தியுள்ளனர். விண்ணப்பக் கட்டணங்களை ஆன்லைன் மூலமாக செலுத்தலாம். ஆன்லைன் மூலம் செலுத்த முடியாதவர்கள் சேவை மையங்களில் டிடியாக அளிக்கலாம். மாணவர்கள் சேர்க்கை குறித்த வழிகாட்டுதல் மற்றும் விவரங்கள் அனைத்தும் இணையதளத்தில் வெளியிடப்படும். மேலும் 044 28260098, 28271911 என்ற எண்ணிலும் தொடர்புக் கொள்ளலாம்" என அவர் கூறியுள்ளார்.

இதையும் படிங்க: சமூக நீதிக் கொள்கை எல்லா இடங்களிலும் செழித்து வருகிறது: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு

சென்னை: இது குறித்து கல்லூரிக் கல்வி இயக்குநர் கூறும்போது, "தமிழ்நாட்டில் உள்ள 163 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் உள்ள இளநிலை பட்டப்படிப்பு முதலாமாண்டு மாணவர்கள் சேர்க்கைக்கான (2022-23) விண்ணப்பங்களை http://www.tngasa.in/ அல்லது http://www.tngasa.org/ என்ற இணையதள முகவரிகளில் ஜூன் 22 ஆம் தேதி முதல் ஜூலை 7 ஆம் தேதி வரையில் பதிவு செய்யலாம்.

இணையதளம் மூலமாக விண்ணப்பிக்க முடியாத மாணவர்கள் கல்லூரி உதவி மையங்கள் மூலம் விண்ணப்பிக்க வசதி செய்யப்பட்டுள்ளது. அனைத்து மையங்களிலும் கரோனா பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

விண்ணப்பக் கட்டணமாக 50 ரூபாய் செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி பிரிவினர் விண்ணப்பக் கட்டணம் செலுத்த தேவையில்லை. பதிவு கட்டணம் மட்டும் 2 ரூபாய் செலுத்தினால் போதுமானது. மேலும் ஜூன் 5 ஆம் தேதி மாலை 2 மணி வரையிலும் 3,43,586 மாணவர்கள் விண்ணப்பம் செய்துள்ளனர். அவர்களில் 2,82,430 மாணவர்கள் விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்துள்ளனர்.

2,50,181 மாணவர்கள் விண்ணப்பக் கட்டணங்களை செலுத்தியுள்ளனர். விண்ணப்பக் கட்டணங்களை ஆன்லைன் மூலமாக செலுத்தலாம். ஆன்லைன் மூலம் செலுத்த முடியாதவர்கள் சேவை மையங்களில் டிடியாக அளிக்கலாம். மாணவர்கள் சேர்க்கை குறித்த வழிகாட்டுதல் மற்றும் விவரங்கள் அனைத்தும் இணையதளத்தில் வெளியிடப்படும். மேலும் 044 28260098, 28271911 என்ற எண்ணிலும் தொடர்புக் கொள்ளலாம்" என அவர் கூறியுள்ளார்.

இதையும் படிங்க: சமூக நீதிக் கொள்கை எல்லா இடங்களிலும் செழித்து வருகிறது: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.