ETV Bharat / city

3000 கிலோ ஹெராயின் விவகாரம்: விசாரணையைத் தொடங்கிய காவல் துறை

author img

By

Published : Sep 22, 2021, 2:26 PM IST

Updated : Sep 23, 2021, 12:06 PM IST

குஜராத்தில் 3000 கிலோ ஹெராயின் பறிமுதல்செய்யப்பட்ட விவகாரத்தில் தமிழ்நாடு காவல் துறை விசாரணையைத் தொடங்கியுள்ளது.

3000 கிலோ ஹெராயின் விவகாரம்
3000 கிலோ ஹெராயின் விவகாரம்

குஜராத் துறைமுகத்தில் கப்பல் வழியாக போதைப்பொருள் கடத்தப்படுவதாகக் கிடைத்த தகவலின் அடிப்படையில் மத்திய வருவாய் நுண்ணறிவுப் பிரிவினர் சோதனை நடத்தினர். சோதனையில் இரண்டு பெட்டகங்களில் முகப்பவுடர் என்ற பெயரில் 3000 கிலோ அளவில் பொருள்கள் இருந்தன.

சந்தேகமடைந்த வருவாய் நுண்ணறிவுப் பிரிவினர் கைப்பற்றி ஆய்வுக்குள்படுத்தியபோது விலையுயர்ந்த போதைப்பொருளான ஹெராயின் எனக் கண்டுபிடிக்கப்பட்டது. இதன் மதிப்பு 21 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் அதிகமாக இருந்தது.

இதையடுத்து அந்த போதைப்பொருளை அனுப்பிய நபர்கள் யார் என விசாரணை நடத்தியபோது விஜயவாடாவில் இயங்கிவரும் நிறுவனத்தின் பெயரில் ஆப்கானிஸ்தானிலிருந்து குஜராஜ் முந்த்ரா துறைமுகத்திற்கு வந்தது தெரியவந்தது.

மேலும் போதைப்பொருளை டெல்லிக்கு கடத்த முற்பட்டதும் தெரியவந்தது. இதனையடுத்து சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் ஜிஎஸ்டி பெயரை வைத்து விசாரித்தபோது சென்னையைச் சேர்ந்த தம்பதியான மச்சாவரம் சுதாகர்-வைசாலி ஆகியோர் நிறுவனத்தை நடத்திவந்தது தெரியவந்தது.

இதையடுத்து சென்னை கொலப்பாக்கத்தில் வைசாலியின் தந்தையான கோவிந்தராஜு தராகா வீட்டில் பதுங்கியிருந்த இருவரையும் கைதுசெய்தனர். இதனையடுத்து குஜராத் முந்த்ரா நீதிமன்றத்தில் தம்பதியை முன்னிறுத்தி 10 நாள்கள் போலீஸ் காவலில் எடுத்து வருவாய் நுண்ணறிவுப் பிரிவினர் விசாரணை நடத்தினர்.

ஆப்கானிஸ்தானிலிருந்து போதைப்பொருள்கள் கடத்திவருவதால் தாலிபானுக்குச் தொடர்பு இருப்பதாகத் தகவல் வெளியாகி உள்ளது. இது தொடர்பாக சென்னை, கோயம்புத்தூர், டெல்லி, அகமதாபாத் உள்ளிட்ட இடங்களில் வருவாய் நுண்ணறிவுப் பிரிவினர் சோதனை நடத்தி முக்கிய ஆவணங்களைப் பறிமுதல்செய்தனர்.

இந்த நிலையில் 3000 கிலோ ஹெராயின் பறிமுதல்செய்த விவகாரத்தில் தமிழ்நாடு காவல் துறை விசாரணையைத் தொடங்கியுள்ளது. குறிப்பாக போதைப்பொருள் புலனாய்வுப் பிரிவு காவல் துறையினர் சென்னை கொலப்பாக்கத்தில் தம்பதி தங்கி போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டுவந்ததால் வேறு யாருக்கெல்லாம் தொடர்புள்ளது என விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.

குறிப்பாக இந்தத் தம்பதி இயக்கிவந்த ஆஷி டிரேடர்ஸ் நிறுவனம் சென்னை ஈக்காட்டுத்தாங்கலில் இருப்பதாகத் தகவல் வெளியாகியிருப்பதால் தமிழ்நாட்டில் போதைப்பொருள் கடத்தலில் ஏதும் ஈடுபட்டார்களா என்கிற அடிப்படையில் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

மேலும் வருவாய் நுண்ணறிவுப் பிரிவு அலுவலர்களிடம் சென்னையில் கைதுசெய்யப்பட்டவர்களின் தகவல்களையும், அவர்கள் தொடர்பான ஆவணங்களையும் பெறவும் தமிழ்நாடு காவல் துறையினர் திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் இது தொடர்பாக தமிழ்நாடு, சென்னை காவல் துறையினர் வருவாய் நுண்ணறிவு இயக்குநரக சென்னை மண்டல அலுவலகத்தைத் தொடர்புகொண்டு கேட்டபோது பெரிய அளவில் கடத்தல் நடந்திருப்பதால் டெல்லி உயர் அலுவலர்கள் அனுமதி இல்லாமல் எந்தவித தகவலையும் அளிக்க முடியாது எனச் சென்னை மண்டல அலுவலர்கள் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.

இதையும் படிங்க: அதிர்ந்து போன அதிகாரிகள்: ரூ. 21 ஆயிரம் கோடி மதிப்புள்ள ஹெராயின் பறிமுதல்

குஜராத் துறைமுகத்தில் கப்பல் வழியாக போதைப்பொருள் கடத்தப்படுவதாகக் கிடைத்த தகவலின் அடிப்படையில் மத்திய வருவாய் நுண்ணறிவுப் பிரிவினர் சோதனை நடத்தினர். சோதனையில் இரண்டு பெட்டகங்களில் முகப்பவுடர் என்ற பெயரில் 3000 கிலோ அளவில் பொருள்கள் இருந்தன.

சந்தேகமடைந்த வருவாய் நுண்ணறிவுப் பிரிவினர் கைப்பற்றி ஆய்வுக்குள்படுத்தியபோது விலையுயர்ந்த போதைப்பொருளான ஹெராயின் எனக் கண்டுபிடிக்கப்பட்டது. இதன் மதிப்பு 21 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் அதிகமாக இருந்தது.

இதையடுத்து அந்த போதைப்பொருளை அனுப்பிய நபர்கள் யார் என விசாரணை நடத்தியபோது விஜயவாடாவில் இயங்கிவரும் நிறுவனத்தின் பெயரில் ஆப்கானிஸ்தானிலிருந்து குஜராஜ் முந்த்ரா துறைமுகத்திற்கு வந்தது தெரியவந்தது.

மேலும் போதைப்பொருளை டெல்லிக்கு கடத்த முற்பட்டதும் தெரியவந்தது. இதனையடுத்து சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் ஜிஎஸ்டி பெயரை வைத்து விசாரித்தபோது சென்னையைச் சேர்ந்த தம்பதியான மச்சாவரம் சுதாகர்-வைசாலி ஆகியோர் நிறுவனத்தை நடத்திவந்தது தெரியவந்தது.

இதையடுத்து சென்னை கொலப்பாக்கத்தில் வைசாலியின் தந்தையான கோவிந்தராஜு தராகா வீட்டில் பதுங்கியிருந்த இருவரையும் கைதுசெய்தனர். இதனையடுத்து குஜராத் முந்த்ரா நீதிமன்றத்தில் தம்பதியை முன்னிறுத்தி 10 நாள்கள் போலீஸ் காவலில் எடுத்து வருவாய் நுண்ணறிவுப் பிரிவினர் விசாரணை நடத்தினர்.

ஆப்கானிஸ்தானிலிருந்து போதைப்பொருள்கள் கடத்திவருவதால் தாலிபானுக்குச் தொடர்பு இருப்பதாகத் தகவல் வெளியாகி உள்ளது. இது தொடர்பாக சென்னை, கோயம்புத்தூர், டெல்லி, அகமதாபாத் உள்ளிட்ட இடங்களில் வருவாய் நுண்ணறிவுப் பிரிவினர் சோதனை நடத்தி முக்கிய ஆவணங்களைப் பறிமுதல்செய்தனர்.

இந்த நிலையில் 3000 கிலோ ஹெராயின் பறிமுதல்செய்த விவகாரத்தில் தமிழ்நாடு காவல் துறை விசாரணையைத் தொடங்கியுள்ளது. குறிப்பாக போதைப்பொருள் புலனாய்வுப் பிரிவு காவல் துறையினர் சென்னை கொலப்பாக்கத்தில் தம்பதி தங்கி போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டுவந்ததால் வேறு யாருக்கெல்லாம் தொடர்புள்ளது என விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.

குறிப்பாக இந்தத் தம்பதி இயக்கிவந்த ஆஷி டிரேடர்ஸ் நிறுவனம் சென்னை ஈக்காட்டுத்தாங்கலில் இருப்பதாகத் தகவல் வெளியாகியிருப்பதால் தமிழ்நாட்டில் போதைப்பொருள் கடத்தலில் ஏதும் ஈடுபட்டார்களா என்கிற அடிப்படையில் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

மேலும் வருவாய் நுண்ணறிவுப் பிரிவு அலுவலர்களிடம் சென்னையில் கைதுசெய்யப்பட்டவர்களின் தகவல்களையும், அவர்கள் தொடர்பான ஆவணங்களையும் பெறவும் தமிழ்நாடு காவல் துறையினர் திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் இது தொடர்பாக தமிழ்நாடு, சென்னை காவல் துறையினர் வருவாய் நுண்ணறிவு இயக்குநரக சென்னை மண்டல அலுவலகத்தைத் தொடர்புகொண்டு கேட்டபோது பெரிய அளவில் கடத்தல் நடந்திருப்பதால் டெல்லி உயர் அலுவலர்கள் அனுமதி இல்லாமல் எந்தவித தகவலையும் அளிக்க முடியாது எனச் சென்னை மண்டல அலுவலர்கள் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.

இதையும் படிங்க: அதிர்ந்து போன அதிகாரிகள்: ரூ. 21 ஆயிரம் கோடி மதிப்புள்ள ஹெராயின் பறிமுதல்

Last Updated : Sep 23, 2021, 12:06 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.