ETV Bharat / city

'அயன்' பட பாணியில் கடத்தல் - ரூ.2.5 கோடி மதிப்பிலான போதை மாத்திரைகள், பவுடா் பறிமுதல்!

சென்னை: சென்னையிலிருந்து ஆஸ்திரேலியாவிற்கு சரக்கு விமானத்தில் கடத்த முயன்ற சுமாா் ரூ.2.5 கோடி மதிப்பிலான 24 கிலோ எபிட்டிரீன் என்ற போதை மாத்திரைகள், போதை பவுடர் ஆகியவை விமான நிலைய சரக்குப்பகுதியில் பறிமுதல்செய்யப்பட்டன.

author img

By

Published : Feb 5, 2021, 1:55 PM IST

Updated : Feb 5, 2021, 10:57 PM IST

drug seizure
drug seizure

சென்னையிலிருந்து சிங்கப்பூா் வழியாக ஆஸ்திரேலியா செல்லும் சரக்கு விமானம் நேற்று (பிப். 4) இரவு சென்னை பழைய விமான நிலையத்திலிருந்து புறப்படத் தயாரானது. அதில் ஏற்றவந்த பாா்சல்களை சென்னை விமான நிலைய சுங்கத் துறையினர் பரிசோதித்து அனுப்பிக்கொண்டிருந்தனா்.

அப்போது ஆஸ்திரேலியாவிற்கு அனுப்புவதற்காக 3 அட்டைப்பெட்டி பாா்சல்கள் வந்திருந்தன. அதில் தலைவலி போன்ற வலி நிவாரணி மாத்திரைகள் இருப்பதாகக் குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால் சுங்கத் துறையினருக்குச் சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து அட்டைப்பெட்டிகளைத் திறந்து பாா்த்து சோதனையிட்டனா். அட்டைப்பெட்டிகளின் மேல்பகுதியில் மட்டுமே வலி நிவாரணி மாத்திரைகள் இருந்தன. உள்ளே பாா்சல், பாா்சலாக எபிட்டிரீன் என்ற ஒருவகை போதை மாத்திரைகள், போதை பவுடா்கள் இருந்தன. இதையடுத்து அவற்றை அலுவலர்கள் பறிமுதல்செய்தனா்.

சென்னை
சரக்குவிமானத்தில் கடத்த முயன்ற சுமாா் ரூ.2.5 கோடி மதிப்புடைய 27 கிலோ எபிட்டிரீன் என்ற போதை பொருள்கள்

இந்தப் போதை மாத்திரை, பவுடா் சுமாா் 24 கிலோ இருந்தன. அதன் மதிப்பு சுமாா் ரூ.2.5 கோடி ஆகும். போதை மாத்திரைகள், பவுடரை பரிசோதனைக்காக ஆய்வுக்கூடத்திற்கு அனுப்பியுள்ளனா். ஆய்வின் முடிவில்தான் எந்த வகையான போதை மாத்திரை, பவுடா் என்பதும் அதன் முழு மதிப்பு எவ்வளவு? என்ற விவரங்கள் தெரியவரும்.

சென்னை
போதை மாத்திரைகள்

இதற்கிடையே சுங்கத்துறையினா், இது சம்பந்தமாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அட்டைப்பெட்டிகளில் இருந்த முகவரி, போன் நம்பா்கள் போலியானவை என்று தெரிவந்துள்ள நிலையில், அவைகளை எந்த ஏஜென்சி பதிவு செய்து அனுப்பியது என்று விசாரணை மேற்கொண்டனர்.

சென்னை
ரூ.2.5 கோடி மதிப்புடைய 27 கிலோ எபிட்டிரீன் என்ற போதை மாத்திரைகள் மற்றும் போதை பவுடா்

அத்தோடு அந்த ஏஜென்சி பதிவு அலுவலகத்தில் உள்ள ரகசிய கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகியுள்ள காட்சிகளை ஆய்வு செய்ததில், சுங்க இலாக அதிகாரிகள் போதை பொருள் கொண்ட பார்சலை ஆஸ்திரேலியாவுக்கு அனுப்பிய ஏற்றுமதி நிறுவனத்தை சேர்ந்த விவேகானந்தன்(43) என்பவரை கைது செய்தனர்.

சென்னை
எபிட்டிரீன் என்ற போதை மாத்திரைகள் மற்றும் போதை பவுடா்

அவரிடம் போதை பொருள் கொண்ட பார்சல்களை அனுப்பியது யார் என விசாரித்து வருகின்றனர். ஒரே பார்சலில் பெரும் அளவில் போதை பவுடர் கடத்த முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

சூர்யா நடித்த அயன் படத்தில் சாமி சிலைகளில் போதை பவுடரை தடவி கடத்தலில் ஈடுபட முயற்சிக்கும் காட்சிகள் காட்டப்பட்டிருக்கும். அதேபோல் கிரைண்டரில் வைத்து போதை மாத்திரை மற்றும் பவுடர் கடந்த முயன்ற சம்பவம் வெளிவந்துள்ளது.

கிரைண்டரில் வைத்து கடத்தப்பட்ட போதை பவுடர்

இதையும் படிங்க: 'எழுவர் விடுதலையில் மத்திய அரசின் அஞ்சல்காரராகச் செயல்படும் ஆளுநர்!'

சென்னையிலிருந்து சிங்கப்பூா் வழியாக ஆஸ்திரேலியா செல்லும் சரக்கு விமானம் நேற்று (பிப். 4) இரவு சென்னை பழைய விமான நிலையத்திலிருந்து புறப்படத் தயாரானது. அதில் ஏற்றவந்த பாா்சல்களை சென்னை விமான நிலைய சுங்கத் துறையினர் பரிசோதித்து அனுப்பிக்கொண்டிருந்தனா்.

அப்போது ஆஸ்திரேலியாவிற்கு அனுப்புவதற்காக 3 அட்டைப்பெட்டி பாா்சல்கள் வந்திருந்தன. அதில் தலைவலி போன்ற வலி நிவாரணி மாத்திரைகள் இருப்பதாகக் குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால் சுங்கத் துறையினருக்குச் சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து அட்டைப்பெட்டிகளைத் திறந்து பாா்த்து சோதனையிட்டனா். அட்டைப்பெட்டிகளின் மேல்பகுதியில் மட்டுமே வலி நிவாரணி மாத்திரைகள் இருந்தன. உள்ளே பாா்சல், பாா்சலாக எபிட்டிரீன் என்ற ஒருவகை போதை மாத்திரைகள், போதை பவுடா்கள் இருந்தன. இதையடுத்து அவற்றை அலுவலர்கள் பறிமுதல்செய்தனா்.

சென்னை
சரக்குவிமானத்தில் கடத்த முயன்ற சுமாா் ரூ.2.5 கோடி மதிப்புடைய 27 கிலோ எபிட்டிரீன் என்ற போதை பொருள்கள்

இந்தப் போதை மாத்திரை, பவுடா் சுமாா் 24 கிலோ இருந்தன. அதன் மதிப்பு சுமாா் ரூ.2.5 கோடி ஆகும். போதை மாத்திரைகள், பவுடரை பரிசோதனைக்காக ஆய்வுக்கூடத்திற்கு அனுப்பியுள்ளனா். ஆய்வின் முடிவில்தான் எந்த வகையான போதை மாத்திரை, பவுடா் என்பதும் அதன் முழு மதிப்பு எவ்வளவு? என்ற விவரங்கள் தெரியவரும்.

சென்னை
போதை மாத்திரைகள்

இதற்கிடையே சுங்கத்துறையினா், இது சம்பந்தமாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அட்டைப்பெட்டிகளில் இருந்த முகவரி, போன் நம்பா்கள் போலியானவை என்று தெரிவந்துள்ள நிலையில், அவைகளை எந்த ஏஜென்சி பதிவு செய்து அனுப்பியது என்று விசாரணை மேற்கொண்டனர்.

சென்னை
ரூ.2.5 கோடி மதிப்புடைய 27 கிலோ எபிட்டிரீன் என்ற போதை மாத்திரைகள் மற்றும் போதை பவுடா்

அத்தோடு அந்த ஏஜென்சி பதிவு அலுவலகத்தில் உள்ள ரகசிய கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகியுள்ள காட்சிகளை ஆய்வு செய்ததில், சுங்க இலாக அதிகாரிகள் போதை பொருள் கொண்ட பார்சலை ஆஸ்திரேலியாவுக்கு அனுப்பிய ஏற்றுமதி நிறுவனத்தை சேர்ந்த விவேகானந்தன்(43) என்பவரை கைது செய்தனர்.

சென்னை
எபிட்டிரீன் என்ற போதை மாத்திரைகள் மற்றும் போதை பவுடா்

அவரிடம் போதை பொருள் கொண்ட பார்சல்களை அனுப்பியது யார் என விசாரித்து வருகின்றனர். ஒரே பார்சலில் பெரும் அளவில் போதை பவுடர் கடத்த முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

சூர்யா நடித்த அயன் படத்தில் சாமி சிலைகளில் போதை பவுடரை தடவி கடத்தலில் ஈடுபட முயற்சிக்கும் காட்சிகள் காட்டப்பட்டிருக்கும். அதேபோல் கிரைண்டரில் வைத்து போதை மாத்திரை மற்றும் பவுடர் கடந்த முயன்ற சம்பவம் வெளிவந்துள்ளது.

கிரைண்டரில் வைத்து கடத்தப்பட்ட போதை பவுடர்

இதையும் படிங்க: 'எழுவர் விடுதலையில் மத்திய அரசின் அஞ்சல்காரராகச் செயல்படும் ஆளுநர்!'

Last Updated : Feb 5, 2021, 10:57 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.