ETV Bharat / city

கரோனா தடுப்புப் பணிக்கு 25 ஆளில்லா விமானம்!

author img

By

Published : Apr 10, 2020, 1:01 PM IST

சென்னை: அண்ணா பல்கலைக்கழக வானூர்தி துறை புதிதாக 25 ஆளில்லா விமானங்களை தயாரிக்க வேண்டும் என, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

கரோனா தடுப்பு பணிக்கு 25 ஆளில்லா விமானம்
கரோனா தடுப்பு பணிக்கு 25 ஆளில்லா விமானம்

அண்ணா பல்கலைக்கழகத்தில் வானூர்தி துறை மூலம் ஆளில்லா விமானங்கள் தயார் செய்யப்பட்டு, பேரிடர் காலங்களில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. தமிழ்நாடு பேரிடர் மேலாண்மை நிறுவனத்துடன் இணைந்து, அண்ணா பல்கலைகழகத்தின் வானூர்தி துறை செயல்பட்டு வருகிறது.

கரோனா வைரஸ் தொற்று முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வரும்நிலையில், வைரஸ் தொற்று உள்ள பகுதிகளிலும், குறுகியப் பகுதிகளிலும் ஆளில்லா விமானம் மூலம் கிருமி நாசினி தெளிக்கப்பட்டுவருகிறது. தற்போது நான்கு ஆளில்லா விமானங்கள் மட்டுமே உள்ளதால் அதனை கூடுதலாக உருவாக்குவதற்கு அரசு உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து அண்ணா பல்கலைக்கழகத்தின் வானூர்தி துறை தலைவர் செந்தில்குமார் கூறியதாவது:

அண்ணா பல்கலைக்கழகத்தின் மூலம் தயார் செய்யப்பட்ட ஆளில்லா விமானங்களைப் பயன்படுத்தி கரோனா வைரஸ் தொற்றுத் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, பெருநகர சென்னை மாநகராட்சியுடன் இணைந்து, கடந்த 12 நாட்களாகக் கிருமிநாசினிகள் தெளித்து வருகின்றோம்.

இது வெளிநாட்டிலும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. அண்ணா பல்கலைக்கழகத்தின் 4 ஆளில்லா விமானங்கள் மூலம் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு, பாதுகாக்கப்பட்ட பகுதிகளில் 40 லட்சம் சதுர கிலோ மீட்டர் பரப்பளவிற்கு கிருமி நாசினிகளை தெளித்துள்ளோம்.

அதேபோல் கோயம்பேடு உள்ளிட்ட முக்கியப் பகுதிகளிலும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு உள்ளது. இதன் பணிகள் சிறப்பாக இருப்பதால், தமிழ்நாடு அரசு 5 கோடி நிதி ஒதுக்கீடு செய்து 25 புதிய ஆளில்லா விமானங்களை தயார் செய்ய உத்தரவிட்டுள்ளது.

கரோனா தடுப்புப் பணிக்கு 25 ஆளில்லா விமானம்!

அதனை விரைந்து செய்து, மற்ற பகுதிகளிலும் கிருமிநாசினி தெளிக்கும் நடவடிக்கையில் ஈடுபடுத்த உள்ளோம். மேலும் தீயணைப்புப் பணியிலும் ஆளில்லா விமானங்களைப் பயன்படுத்துவது குறித்தும் ஆலோசித்து வருகிறோம். மிகவும் குறுகலானப் பகுதிகளில் ஆளில்லா விமானத்தைப் பயன்படுத்தி தீயை அணைக்க முடியும் என தெரிவித்தார்.

இதையும் படிங்க:கவலை வேண்டாம் கரோனா உங்கள் வேலையை பறித்துவிடாது!

அண்ணா பல்கலைக்கழகத்தில் வானூர்தி துறை மூலம் ஆளில்லா விமானங்கள் தயார் செய்யப்பட்டு, பேரிடர் காலங்களில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. தமிழ்நாடு பேரிடர் மேலாண்மை நிறுவனத்துடன் இணைந்து, அண்ணா பல்கலைகழகத்தின் வானூர்தி துறை செயல்பட்டு வருகிறது.

கரோனா வைரஸ் தொற்று முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வரும்நிலையில், வைரஸ் தொற்று உள்ள பகுதிகளிலும், குறுகியப் பகுதிகளிலும் ஆளில்லா விமானம் மூலம் கிருமி நாசினி தெளிக்கப்பட்டுவருகிறது. தற்போது நான்கு ஆளில்லா விமானங்கள் மட்டுமே உள்ளதால் அதனை கூடுதலாக உருவாக்குவதற்கு அரசு உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து அண்ணா பல்கலைக்கழகத்தின் வானூர்தி துறை தலைவர் செந்தில்குமார் கூறியதாவது:

அண்ணா பல்கலைக்கழகத்தின் மூலம் தயார் செய்யப்பட்ட ஆளில்லா விமானங்களைப் பயன்படுத்தி கரோனா வைரஸ் தொற்றுத் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, பெருநகர சென்னை மாநகராட்சியுடன் இணைந்து, கடந்த 12 நாட்களாகக் கிருமிநாசினிகள் தெளித்து வருகின்றோம்.

இது வெளிநாட்டிலும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. அண்ணா பல்கலைக்கழகத்தின் 4 ஆளில்லா விமானங்கள் மூலம் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு, பாதுகாக்கப்பட்ட பகுதிகளில் 40 லட்சம் சதுர கிலோ மீட்டர் பரப்பளவிற்கு கிருமி நாசினிகளை தெளித்துள்ளோம்.

அதேபோல் கோயம்பேடு உள்ளிட்ட முக்கியப் பகுதிகளிலும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு உள்ளது. இதன் பணிகள் சிறப்பாக இருப்பதால், தமிழ்நாடு அரசு 5 கோடி நிதி ஒதுக்கீடு செய்து 25 புதிய ஆளில்லா விமானங்களை தயார் செய்ய உத்தரவிட்டுள்ளது.

கரோனா தடுப்புப் பணிக்கு 25 ஆளில்லா விமானம்!

அதனை விரைந்து செய்து, மற்ற பகுதிகளிலும் கிருமிநாசினி தெளிக்கும் நடவடிக்கையில் ஈடுபடுத்த உள்ளோம். மேலும் தீயணைப்புப் பணியிலும் ஆளில்லா விமானங்களைப் பயன்படுத்துவது குறித்தும் ஆலோசித்து வருகிறோம். மிகவும் குறுகலானப் பகுதிகளில் ஆளில்லா விமானத்தைப் பயன்படுத்தி தீயை அணைக்க முடியும் என தெரிவித்தார்.

இதையும் படிங்க:கவலை வேண்டாம் கரோனா உங்கள் வேலையை பறித்துவிடாது!

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.