ETV Bharat / city

180 காலாவதி குடிதண்ணீர் கேன்கள் பறிமுதல்! உணவுப் பாதுகாப்புத் துறை அதிரடி - food security department

சென்னை: மக்களுக்கு விநியோகம் செய்யப்படவிருந்த 180 காலாவதியான குடிதண்ணீர் கேன்களை, உணவு பாதுகாப்புத் துறை அலுவலர்கள் பறிமுதல் செய்துள்ளனர்.

180 காலாவதியான குடிதண்ணீர் கேன்கள்-உணவு பாதுகாப்புத்துறை அதிரடி
author img

By

Published : May 8, 2019, 1:21 PM IST

சென்னையில் கடும் குடிதண்ணீர் தட்டுப்பாடு நிலவிவரும் நிலையில், வெளி மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு தரமற்ற, காலாவதியான தண்ணீர் கேன்கள், விற்பனைக்கு வருவதாக உணவுப் பாதுகாப்புத் துறை அலுவலர்களுக்கு தகவல் வந்தது.

இந்தத் தகவலின் அடிப்படையில், இன்று காலை முதற்கட்டமாக, கோயம்பேடு ரோகிணி திரையரங்கு அருகே ஏழு மினி வேன்களில் கொண்டுவரப்பட்ட தண்ணீர் கேன்களை சோதனை அலுவலர்கள் செய்தனர். அதில், 680 கேன்களில் 180 காலாவதி, தரமற்ற தண்ணீர் கேன்கள் என கண்டறியப்பட்டது.

180 காலாவதியான குடிதண்ணீர் கேன்கள்-உணவுப் பாதுகாப்புத் துறை அதிரடி

மேலும் 200-க்கும் மேற்பட்ட கேன்களில் போலியான தண்ணீர் நிறுவன லேபிள்கள் ஒட்டப்பட்டிருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து காலாவதி, தரமற்ற தண்ணீர் கேன்களுடன் அவை கொண்டுவரப்பட்ட வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் விசாரணைக்காக உணவுப் பாதுகாப்புத் துறை அலுவலத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டது.

சென்னையில் கடும் குடிதண்ணீர் தட்டுப்பாடு நிலவிவரும் நிலையில், வெளி மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு தரமற்ற, காலாவதியான தண்ணீர் கேன்கள், விற்பனைக்கு வருவதாக உணவுப் பாதுகாப்புத் துறை அலுவலர்களுக்கு தகவல் வந்தது.

இந்தத் தகவலின் அடிப்படையில், இன்று காலை முதற்கட்டமாக, கோயம்பேடு ரோகிணி திரையரங்கு அருகே ஏழு மினி வேன்களில் கொண்டுவரப்பட்ட தண்ணீர் கேன்களை சோதனை அலுவலர்கள் செய்தனர். அதில், 680 கேன்களில் 180 காலாவதி, தரமற்ற தண்ணீர் கேன்கள் என கண்டறியப்பட்டது.

180 காலாவதியான குடிதண்ணீர் கேன்கள்-உணவுப் பாதுகாப்புத் துறை அதிரடி

மேலும் 200-க்கும் மேற்பட்ட கேன்களில் போலியான தண்ணீர் நிறுவன லேபிள்கள் ஒட்டப்பட்டிருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து காலாவதி, தரமற்ற தண்ணீர் கேன்களுடன் அவை கொண்டுவரப்பட்ட வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் விசாரணைக்காக உணவுப் பாதுகாப்புத் துறை அலுவலத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டது.

சென்னையில் கடும் தண்ணீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இந்த நிலையில் வெளி மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு தரமற்ற மற்றும் காலாவதியான தண்ணீர் அடைக்கப்பட்ட கேன்கள் சென்னைக்கு விற்பனைக்கு வருவதாக உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைக்கப் பெற்றது.

இதன் அடிப்படையில் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் கோயம்பேடு ரோகிணி தியேட்டர் அருகே இன்று காலை தண்ணீர் கேன் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது 7 மினி வேன்களில் கொண்டுவரப்பட்ட தண்ணீர் கேன்களை சோதனை செய்தனர்.

சோதனை செய்யப்பட்ட 680 கேன்களில் 180 கேன்கள் காலாவதி மற்றும் தரமற்ற தண்ணீர் கேன்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் 200 க்கும் மேற்பட்ட தண்ணீர் கேன்களில் போலியான தண்ணீர் நிறுவன லேபிள்கள் ஒட்டப்பட்டிருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் உணவு பாதுகாப்பு துறை அலுவலகத்திற்கு விசாரணைக்காக கொண்டு செல்லப்பட்டுள்ளது.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.