ETV Bharat / city

16ஆவது சட்டப்பேரவை கூட்டத்தொடரின் இறுதி நாள்: இதுவரையில் நடந்தது என்ன?

author img

By

Published : Jun 24, 2021, 8:00 AM IST

நான்காவது நாளாக இன்று நடைபெறும் சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில், ஆளுநரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உரையாற்றுகிறார்.

முதலாவது கூட்டத்தொடரின் இறுதி நாள்
முதலாவது கூட்டத்தொடரின் இறுதி நாள்

சென்னை: தமிழ்நாடு 16ஆவது சட்டப்பேரவையின் முதலாவது கூட்டத்தொடர், நான்காவது நாளாக இன்று நடைபெறுகிறது. கரோனா பரவல் காரணமாக, சென்னை - கலைவாணர் அரங்கில் நடைபெறும் இக்கூட்டத்தொடரை, மரபுப்படி ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் உரையாற்றி தொடங்கி வைத்தார்.

முதலாவது நாளும் முக்கிய அம்சங்களும்:

ஆளுநர் தனது முதல் நாள் உரையில், நீட், வேளாண் திருத்தச் சட்டங்களை ரத்துசெய்தல், தமிழ் வழியில் பயின்றவர்களுக்கு முன்னுரிமை, இலங்கை அகதிகளுக்கு இந்தியக் குடியுரிமை, நிதித் துறை வல்லுநர்கள் அடங்கிய குழு, 15 நாள்களில் ஸ்மார்ட் கார்டு எனப் பல்வேறு முக்கிய அம்சங்களை அறிவித்தார். 'மாநிலங்களுக்கு சுயாட்சி' என்கிற இலக்கினை அடைய அரசு உறுதியாக உள்ளது என்றும் தெரிவித்தார்.

ஆளுநர் உரையின் முக்கிய அம்சங்கள்
ஆளுநர் உரையின் முக்கிய அம்சங்கள்

இரண்டாவது நாளில் இரங்கல் தீர்மானம்:

இரண்டாவது நாள் கூட்டத்தொடரில் மறைந்த நடிகர் விவேக், எழுத்தாளர் கி.ராஜநாராயணன், துளசி அய்யா வாண்டையார், டி.எம்.காளியண்ணன் உள்ளிட்டோருக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. புதிய வேளாண் திருத்தச் சட்டங்கள், குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக வரும் பட்ஜெட் கூட்டத்தொடரில் தீர்மானம் நிறைவேற்றப்படும் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சட்டப்பேரவையில் உறுதிபடத் தெரிவித்தார்.

இரங்கல் தீர்மானம்
இரங்கல் தீர்மானம்

'ஓஎன்ஜிசி-க்கு அனுமதி அளிக்கமாட்டோம்':

சட்டப்பேரவையில், தமிழ்நாட்டில் வெளி மாநிலத்தவர்களுக்கு வேலை வழங்கப்பட்டது குறித்து ஆய்வு நடத்தப்படும் என்று நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தகவல் தெரிவித்தார்.

அரியலூர், கடலூரில் எண்ணெய்க் கிணறுகள் அமைக்க ஒன்றிய அரசிடம் ஓஎன்ஜிசி அளித்த விண்ணப்பம் தமிழ்நாடு அரசால் நிராகரிக்கப்படும் என அமைச்சர் தங்கம் தென்னரசு உறுதிபடத் தெரிவித்தார்.

சட்டப்பேரவை கூட்டத்தொடர்
சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் ஆளுநர்

காரசார விவாதத்துடன் மூன்றாவது நாள்:

மூன்றாவது நாளாக நேற்று நடைபெற்ற கூட்டத்தொடரில், சட்டப்பேரவையில் காரசார விவாதம் நடைபெற்றது.

நீட் தேர்வு விவகாரத்தில் நீதிமன்றத்தை அணுகுவோம் என முதலமைச்சர் தெரிவித்தார். தமிழ்நாட்டிற்கு நீட் தேர்விலிருந்து விலக்கு பெற அரசுக்கு உறுதுணையாக இருப்போம் என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி உறுதியளித்தார்.

சட்டத்திற்கு உட்பட்டு நீட் தேர்வுக்கு தமிழ்நாடு அரசு விலக்கு கோரினால், அதற்கு ஆதரவு தெரிவிப்போம் என பாஜக சட்டப்பேரவைக்குழுத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.

கலைவாணர் அரங்கம்
கலைவாணர் அரங்கம்

விவாதத்திற்கு வழிவகுத்த 'ஒன்றியம்'

' 'ஒன்றியம்' என்ற வார்த்தையில் கூட்டாட்சி தத்துவம் அடங்கியுள்ளது; அதைத் தான் இனி எப்போதும் பயன்படுத்துவோம்' என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

இதற்கு 'இந்தியாவில் இருந்து பிரிந்ததுதான் மாநிலங்கள்' என நயினார் நாகேந்திரன் கூற 'இந்தியாவில் இருந்து மாநிலங்கள் பிரியவில்லை. எல்லா மாநிலங்களும் ஒன்றிணைந்து உருவாகியதுதான் இந்தியா’ என அமைச்சர் பொன்முடி தெரிவித்தார்.

இதைத்தொடர்ந்து நான்காவது நாளாக இன்று நடைபெறும் இறுதிக் கூட்டத்தில் ஆளுநரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உரையாற்றுகிறார்.

இதையும் படிங்க; காவலர் தாக்கி உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிவாரணம்

சென்னை: தமிழ்நாடு 16ஆவது சட்டப்பேரவையின் முதலாவது கூட்டத்தொடர், நான்காவது நாளாக இன்று நடைபெறுகிறது. கரோனா பரவல் காரணமாக, சென்னை - கலைவாணர் அரங்கில் நடைபெறும் இக்கூட்டத்தொடரை, மரபுப்படி ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் உரையாற்றி தொடங்கி வைத்தார்.

முதலாவது நாளும் முக்கிய அம்சங்களும்:

ஆளுநர் தனது முதல் நாள் உரையில், நீட், வேளாண் திருத்தச் சட்டங்களை ரத்துசெய்தல், தமிழ் வழியில் பயின்றவர்களுக்கு முன்னுரிமை, இலங்கை அகதிகளுக்கு இந்தியக் குடியுரிமை, நிதித் துறை வல்லுநர்கள் அடங்கிய குழு, 15 நாள்களில் ஸ்மார்ட் கார்டு எனப் பல்வேறு முக்கிய அம்சங்களை அறிவித்தார். 'மாநிலங்களுக்கு சுயாட்சி' என்கிற இலக்கினை அடைய அரசு உறுதியாக உள்ளது என்றும் தெரிவித்தார்.

ஆளுநர் உரையின் முக்கிய அம்சங்கள்
ஆளுநர் உரையின் முக்கிய அம்சங்கள்

இரண்டாவது நாளில் இரங்கல் தீர்மானம்:

இரண்டாவது நாள் கூட்டத்தொடரில் மறைந்த நடிகர் விவேக், எழுத்தாளர் கி.ராஜநாராயணன், துளசி அய்யா வாண்டையார், டி.எம்.காளியண்ணன் உள்ளிட்டோருக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. புதிய வேளாண் திருத்தச் சட்டங்கள், குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக வரும் பட்ஜெட் கூட்டத்தொடரில் தீர்மானம் நிறைவேற்றப்படும் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சட்டப்பேரவையில் உறுதிபடத் தெரிவித்தார்.

இரங்கல் தீர்மானம்
இரங்கல் தீர்மானம்

'ஓஎன்ஜிசி-க்கு அனுமதி அளிக்கமாட்டோம்':

சட்டப்பேரவையில், தமிழ்நாட்டில் வெளி மாநிலத்தவர்களுக்கு வேலை வழங்கப்பட்டது குறித்து ஆய்வு நடத்தப்படும் என்று நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தகவல் தெரிவித்தார்.

அரியலூர், கடலூரில் எண்ணெய்க் கிணறுகள் அமைக்க ஒன்றிய அரசிடம் ஓஎன்ஜிசி அளித்த விண்ணப்பம் தமிழ்நாடு அரசால் நிராகரிக்கப்படும் என அமைச்சர் தங்கம் தென்னரசு உறுதிபடத் தெரிவித்தார்.

சட்டப்பேரவை கூட்டத்தொடர்
சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் ஆளுநர்

காரசார விவாதத்துடன் மூன்றாவது நாள்:

மூன்றாவது நாளாக நேற்று நடைபெற்ற கூட்டத்தொடரில், சட்டப்பேரவையில் காரசார விவாதம் நடைபெற்றது.

நீட் தேர்வு விவகாரத்தில் நீதிமன்றத்தை அணுகுவோம் என முதலமைச்சர் தெரிவித்தார். தமிழ்நாட்டிற்கு நீட் தேர்விலிருந்து விலக்கு பெற அரசுக்கு உறுதுணையாக இருப்போம் என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி உறுதியளித்தார்.

சட்டத்திற்கு உட்பட்டு நீட் தேர்வுக்கு தமிழ்நாடு அரசு விலக்கு கோரினால், அதற்கு ஆதரவு தெரிவிப்போம் என பாஜக சட்டப்பேரவைக்குழுத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.

கலைவாணர் அரங்கம்
கலைவாணர் அரங்கம்

விவாதத்திற்கு வழிவகுத்த 'ஒன்றியம்'

' 'ஒன்றியம்' என்ற வார்த்தையில் கூட்டாட்சி தத்துவம் அடங்கியுள்ளது; அதைத் தான் இனி எப்போதும் பயன்படுத்துவோம்' என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

இதற்கு 'இந்தியாவில் இருந்து பிரிந்ததுதான் மாநிலங்கள்' என நயினார் நாகேந்திரன் கூற 'இந்தியாவில் இருந்து மாநிலங்கள் பிரியவில்லை. எல்லா மாநிலங்களும் ஒன்றிணைந்து உருவாகியதுதான் இந்தியா’ என அமைச்சர் பொன்முடி தெரிவித்தார்.

இதைத்தொடர்ந்து நான்காவது நாளாக இன்று நடைபெறும் இறுதிக் கூட்டத்தில் ஆளுநரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உரையாற்றுகிறார்.

இதையும் படிங்க; காவலர் தாக்கி உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிவாரணம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.