ETV Bharat / business

இரண்டு நாள் சரிவுக்கு பின் ஏற்றத்தில் நிறைவடைந்த இந்திய பங்குச் சந்தை

author img

By

Published : Jul 1, 2020, 6:46 PM IST

தொடர்ந்து இரண்டு நாள்களாக சரிவைச் சந்தித்துவந்த இந்திய பங்குச் சந்தை, சர்வதேச பங்குச் சந்தைகளின் எதிரொலியாக இன்று ஏற்றம் கண்டுள்ளது.

Indian stock exchange
Indian stock exchange

சர்வதே பங்குச் சந்தை எதிரொலியாக மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் நேற்றைவிட 193 புள்ளிகள் உயர்ந்து இன்றைய வர்த்தகத்தை தொடங்கியது.

இன்று நாள் முழுவதும் பங்குச் சந்தை ஏற்றத்திலேயே வர்த்தகமானது. இன்றைய வர்த்தக நாள் இறுதியில் மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 498.65 புள்ளிகள் (1.43 விழுக்காடு) அதிகரித்து 35,414.45 புள்ளிகளிலும், தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 127.95 புள்ளிகள் (1.24 விழுக்காடு) அதிகரித்து 10,430.05 புள்ளிகளிலும் வர்த்தகத்தை நிறைவு செய்தன.

ஏற்றம், இறக்கம் கண்ட பங்குகள்

அதிகபட்சமாக ஆக்சிஸ் வங்கியின் பங்குகள் ஆறு விழுக்காடு வரை ஏற்றம் கண்டது. அதேபோல் பஜாஜ், ஹெச்.டி.எஃப்.சி, பஜாஜ் பைனானஸ், ஐ.டி.சி, இண்டஸ்இண்ட் வங்கி, எஸ்பிஐ, ஐசிஐசிஐ வங்கி, உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் உயர்வடைந்தன.

மறுபுறம், என்டிபிசி, நெஸ்லே இந்தியா, எல் & டி, எம் & எம் மற்றும் ஓஎன்ஜிசி உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் ஏற்றம் கண்டன.

சர்வதேச பங்குச் சந்தை

ஹாங்காங், ஷாங்காய் பங்குச் சந்தைகள் ஏற்றத்திலும், டோக்கியோ, சியோல் பங்குச் சந்தைகள் இறக்கத்திலும் தங்கள் வர்த்தகத்தை நிறைவு செய்தன. ஐரோப்பிய பங்குச் சந்தைகளும் தற்போது ஏற்றம் கண்டே வர்த்தகமாகிவருகிறது.

இரண்டு நாள் சரிவுக்கு பின் ஏற்றத்தில் நிறைவடைந்த இந்திய பங்குச் சந்தை

கச்சா எண்ணெய் விலை

சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை 2.67 விழுக்காடு அதிகரித்து, பேரல் ஒன்று 42.37 அமெரிக்க டாலர்களுக்கு வர்த்தகமாகி வருகிறது.

இந்திய ரூபாய் மதிப்பு

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஒன்பது பைசா குறைந்து 75.60 ரூபாய்க்கு வர்த்தகமானது.

இதையும் படிங்க: கோவிட் - 19 காலத்தில் கிரெடிட் கார்டு பயன்படுத்தும் வழிமுறைகள் - ஒருபார்வை

சர்வதே பங்குச் சந்தை எதிரொலியாக மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் நேற்றைவிட 193 புள்ளிகள் உயர்ந்து இன்றைய வர்த்தகத்தை தொடங்கியது.

இன்று நாள் முழுவதும் பங்குச் சந்தை ஏற்றத்திலேயே வர்த்தகமானது. இன்றைய வர்த்தக நாள் இறுதியில் மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 498.65 புள்ளிகள் (1.43 விழுக்காடு) அதிகரித்து 35,414.45 புள்ளிகளிலும், தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 127.95 புள்ளிகள் (1.24 விழுக்காடு) அதிகரித்து 10,430.05 புள்ளிகளிலும் வர்த்தகத்தை நிறைவு செய்தன.

ஏற்றம், இறக்கம் கண்ட பங்குகள்

அதிகபட்சமாக ஆக்சிஸ் வங்கியின் பங்குகள் ஆறு விழுக்காடு வரை ஏற்றம் கண்டது. அதேபோல் பஜாஜ், ஹெச்.டி.எஃப்.சி, பஜாஜ் பைனானஸ், ஐ.டி.சி, இண்டஸ்இண்ட் வங்கி, எஸ்பிஐ, ஐசிஐசிஐ வங்கி, உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் உயர்வடைந்தன.

மறுபுறம், என்டிபிசி, நெஸ்லே இந்தியா, எல் & டி, எம் & எம் மற்றும் ஓஎன்ஜிசி உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் ஏற்றம் கண்டன.

சர்வதேச பங்குச் சந்தை

ஹாங்காங், ஷாங்காய் பங்குச் சந்தைகள் ஏற்றத்திலும், டோக்கியோ, சியோல் பங்குச் சந்தைகள் இறக்கத்திலும் தங்கள் வர்த்தகத்தை நிறைவு செய்தன. ஐரோப்பிய பங்குச் சந்தைகளும் தற்போது ஏற்றம் கண்டே வர்த்தகமாகிவருகிறது.

இரண்டு நாள் சரிவுக்கு பின் ஏற்றத்தில் நிறைவடைந்த இந்திய பங்குச் சந்தை

கச்சா எண்ணெய் விலை

சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை 2.67 விழுக்காடு அதிகரித்து, பேரல் ஒன்று 42.37 அமெரிக்க டாலர்களுக்கு வர்த்தகமாகி வருகிறது.

இந்திய ரூபாய் மதிப்பு

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஒன்பது பைசா குறைந்து 75.60 ரூபாய்க்கு வர்த்தகமானது.

இதையும் படிங்க: கோவிட் - 19 காலத்தில் கிரெடிட் கார்டு பயன்படுத்தும் வழிமுறைகள் - ஒருபார்வை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.