ETV Bharat / business

கரோனா தடுப்புமருந்து குறித்த நல்ல செய்தி வந்தும் சரியும் ஆசிய பங்குச்சந்தை: காரணம் என்ன?

author img

By

Published : Nov 12, 2020, 6:14 PM IST

டெல்லி: ஃபைஸர் நிறுவனத்தின் கரோனா தடுப்பு மருந்து குறித்த நேர்மறையான தகவல் வெளியான பின்னரும் இந்திய ஆசிய பங்குச்சந்தைகள் இன்று சரிவைச் சந்தித்துள்ளது.

Asian shares
Asian shares

ஃபைஸர் நிறுவனத்தின் கரோனா தடுப்பு மருந்து கிட்டத்தட்ட வெற்றியடையும் நிலையில் உள்ளதாக அறிவிப்பு வெளியானதிலிருந்து சர்வதேச பங்குச்சந்தைகள் பெரியளவில் ஏற்றம் கண்டு வர்த்தகமானது.

இந்நிலையில், கரோனா தடுப்பு மருந்துக்கு விரைவில் ஒப்புதல் வழங்கப்பட்டாலும்கூட, விநியோகச் சங்கிலியில் உள்ள சிக்கல் காரணமாக தடுப்பு மருந்து புழக்கத்திற்கு வர சில மாதங்கள் வரை ஆகும் என்று வல்லுநர்கள் தெரிவித்தனர். இதன் காரணமாக டோக்கியோ தவிர பெரும்பாலான ஆசிய பங்குச்சந்தைகள் இன்று சரிவைச் சந்தித்தன.

அதேபோல நியூயார்க் மாகாணத்தில் கரோனா காரணமாக மீண்டும் கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டவுடனேயே அமெரிக்காவின் டவ் ஜோன்ஸ் பங்குச்சந்தை குறியீட்டு எண் சரிய தொடங்கியது.

அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோ பைடனின் வெற்றி உறுதி செய்யப்பட்டுள்ளபோதும் கரோனா தடுப்பு மருந்து குறித்த அறிவிப்பால் பங்குச்சந்தை சரிவின் பாதையில் தள்ளப்பட்டுள்ளது. இருப்பினும், இந்தாண்டு இறுதிவரை சர்வதேச பங்குச்சந்தை உயரும் என்றே துறை சார்ந்த வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

மறுபுறம் கச்சா எண்ணெய் விலை 19 விழுக்காடு அதிகரித்து பேரல் ஒன்று 41.64 டாலர்களுக்கு வர்த்தகமானது.

இதையும் படிங்க: மினுமினுக்க தொடங்கும் தீபாவளி!

ஃபைஸர் நிறுவனத்தின் கரோனா தடுப்பு மருந்து கிட்டத்தட்ட வெற்றியடையும் நிலையில் உள்ளதாக அறிவிப்பு வெளியானதிலிருந்து சர்வதேச பங்குச்சந்தைகள் பெரியளவில் ஏற்றம் கண்டு வர்த்தகமானது.

இந்நிலையில், கரோனா தடுப்பு மருந்துக்கு விரைவில் ஒப்புதல் வழங்கப்பட்டாலும்கூட, விநியோகச் சங்கிலியில் உள்ள சிக்கல் காரணமாக தடுப்பு மருந்து புழக்கத்திற்கு வர சில மாதங்கள் வரை ஆகும் என்று வல்லுநர்கள் தெரிவித்தனர். இதன் காரணமாக டோக்கியோ தவிர பெரும்பாலான ஆசிய பங்குச்சந்தைகள் இன்று சரிவைச் சந்தித்தன.

அதேபோல நியூயார்க் மாகாணத்தில் கரோனா காரணமாக மீண்டும் கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டவுடனேயே அமெரிக்காவின் டவ் ஜோன்ஸ் பங்குச்சந்தை குறியீட்டு எண் சரிய தொடங்கியது.

அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோ பைடனின் வெற்றி உறுதி செய்யப்பட்டுள்ளபோதும் கரோனா தடுப்பு மருந்து குறித்த அறிவிப்பால் பங்குச்சந்தை சரிவின் பாதையில் தள்ளப்பட்டுள்ளது. இருப்பினும், இந்தாண்டு இறுதிவரை சர்வதேச பங்குச்சந்தை உயரும் என்றே துறை சார்ந்த வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

மறுபுறம் கச்சா எண்ணெய் விலை 19 விழுக்காடு அதிகரித்து பேரல் ஒன்று 41.64 டாலர்களுக்கு வர்த்தகமானது.

இதையும் படிங்க: மினுமினுக்க தொடங்கும் தீபாவளி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.