ETV Bharat / business

15ஆவது நிதிக்குழு அறிக்கை குடியரசுத் தலைவரிடம் ஒப்படைப்பு - 15th finance commission NK singh

டெல்லி: 2020-21ஆம் ஆண்டுக்கான 15ஆவது நிதிக்குழு அறிக்கையை நிதிக்குழுத் தலைவர் என்.கே. சிங் குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்திடம் சமர்ப்பித்தார்.

15th finance commission
15th finance commission
author img

By

Published : Dec 5, 2019, 5:32 PM IST

நாட்டின் 15ஆவது நிதிக்குழு பொருளாதார நிபுணர் என்.கே. சிங் தலைமையில் அமைக்கப்பட்டது. இக்குழுவின் செயலராக அரவிந்த் மேத்தாவும், குழுவின் உறுப்பினர்களாக அஜய் நாராயண் ஜா, அசோக் லஹிரி, ரமேஷ் சந்த், அனூப் சிங் ஆகியோர் சேர்க்கப்பட்டனர்.

2020-21ஆம் ஆண்டுக்கான நாட்டின் நிதிக்கொள்கை குறித்து வரைவைத் தயார் செய்த இக்குழு, அதன் அறிக்கையை நிதிக்குழுத் தலைவர் என்.கே. சிங் மூலம் தொகுப்பாக குடியரசுத் தலைவரிடம் சமர்ப்பித்துள்ளது.

15ஆவது நிதிக்குழுவானது இந்திய அரசியல் சாசன சட்டப்பிரிவு 280இன் கீழ் குடியரசுத் தலைவரால், 2017ஆம் ஆண்டு நவம்பர் 27ஆம் தேதி நிறுவப்பட்டது. இக்குழு 1ஆவது ஏப்ரல் 2020ஆம் ஆண்டு தொடங்கி 31ஆவது மார்ச் 2025ஆம் ஆண்டு வரை, நாட்டின் நிதிக்கொள்கை குறித்த வரைவைத் தயார் செய்யவுள்ளது. அதன் முதற்கட்ட அறிக்கையானது குடியரசுத் தலைவரிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. விரைவில் குடியரசுத் தலைவரின் ஒப்புதலுடன் இந்த அறிக்கை அமல்படுத்தப்படும்.

இதையும் படிங்க: ரன் கோயல் ரன்; கலாய் வாங்கிய ரயில்வே துறை அமைச்சர்!

நாட்டின் 15ஆவது நிதிக்குழு பொருளாதார நிபுணர் என்.கே. சிங் தலைமையில் அமைக்கப்பட்டது. இக்குழுவின் செயலராக அரவிந்த் மேத்தாவும், குழுவின் உறுப்பினர்களாக அஜய் நாராயண் ஜா, அசோக் லஹிரி, ரமேஷ் சந்த், அனூப் சிங் ஆகியோர் சேர்க்கப்பட்டனர்.

2020-21ஆம் ஆண்டுக்கான நாட்டின் நிதிக்கொள்கை குறித்து வரைவைத் தயார் செய்த இக்குழு, அதன் அறிக்கையை நிதிக்குழுத் தலைவர் என்.கே. சிங் மூலம் தொகுப்பாக குடியரசுத் தலைவரிடம் சமர்ப்பித்துள்ளது.

15ஆவது நிதிக்குழுவானது இந்திய அரசியல் சாசன சட்டப்பிரிவு 280இன் கீழ் குடியரசுத் தலைவரால், 2017ஆம் ஆண்டு நவம்பர் 27ஆம் தேதி நிறுவப்பட்டது. இக்குழு 1ஆவது ஏப்ரல் 2020ஆம் ஆண்டு தொடங்கி 31ஆவது மார்ச் 2025ஆம் ஆண்டு வரை, நாட்டின் நிதிக்கொள்கை குறித்த வரைவைத் தயார் செய்யவுள்ளது. அதன் முதற்கட்ட அறிக்கையானது குடியரசுத் தலைவரிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. விரைவில் குடியரசுத் தலைவரின் ஒப்புதலுடன் இந்த அறிக்கை அமல்படுத்தப்படும்.

இதையும் படிங்க: ரன் கோயல் ரன்; கலாய் வாங்கிய ரயில்வே துறை அமைச்சர்!

Intro:Body:
சிக்கலில் ஆர்பிஐ...மீண்டும் வட்டி விகிதங்கள் குறைக்கப்படுமா?

சென்னை:

ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் தலைமையிலான பணக் கொள்கைக் குழு இன்று வங்கிகளுக்கு வழங்கப்படும் அடிப்படை வட்டி விகிதங்களை அறிவிக்கிறது.


நாட்டின் ஒட்டுமொத்த உள்நாட்டு வளர்ச்சி 6 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு சரிவடைந்துள்ளது. இந்த நிதியாண்டின் வளர்ச்சி 5 சதவிகிதத்திற்கும் குறைவாக இருக்கும் என அஞ்சப்படுகிறது. நவம்பர் மாதத்தில் எட்டு முக்கியத் துறைகளின் வளர்ச்சி சரிவடைந்துள்ளது, அரசின் வரி வருவாய் குறைந்து வருகிறது, மாநிலங்களுக்கான ஜிஎஸ்டி வரி இழப்பீட்டுத் தொகையை வழங்க மத்திய அரசு காலம் தாழ்த்தி வருகிறது. பல்வேறு பொருளாதார குறியீடுகளும் கவலை அளிக்கும் விதமாக உள்ளன. நாட்டின் வளர்ச்சி குறைந்து வருகிறதே தவிர, ரெசஷன் என்று அழைக்கப்படும் மந்த நிலை ஏற்படவில்லை என நாடாளுமன்றத்தில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். வளர்ச்சியை ஊக்குவிக்க மத்திய அரசு அறிவிக்கும் திட்டங்களும் பெரிய அளவில் பயனளிக்கவில்லை. இந்த நிலையில், ரிசர்வ் வங்கி பணக் கொள்கை குழுக் கூட்டம் இன்று (டிசம்பர் 5) வங்கிகளுக்கு வழங்கும் அடிப்படை வட்டி விகிதங்கள் அறிவிக்கிறது. தற்போது வங்கிகள் வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் கடன்களுக்கான வட்டி விகிதத்தை ரெப்போ வட்டி விகிதத்தோடு இணைப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளதால், அவை உடனடியாக மக்கள் மத்தியில் தாக்கத்தை ஏற்படுத்தும் என கூறப்படுகிறது. ரெப்போ வட்டி குறைக்கப்பட்டால் வீடு, வாகனம், தனிநபர் கடன்களுக்கான வட்டி குறையும். ரிசர்வ் வங்கி ஆளுநராக சக்திகாந்த தாஸ் பொறுபேற்றதில் இருந்து இதுவரை ரிசர்வ் வங்கி 135 புள்ளிகள் வரை ரெப்போ வட்டி விகிதத்தைக் குறைத்துள்ளது. இந்த முறையும் 25 புள்ளிகள் வரை வட்டி விகிதங்கள் குறைக்கப்படும் என நிபுணர்கள் கருதுகின்றனர். ஆனால் இது சவால் நிறைந்த பணியாகவே இருக்கும். கடந்த காலங்களில் பண வீக்கம் குறைவாக இருந்ததால் வளர்ச்சியை ஊக்குவிப்பது மட்டுமே ரிசர்வ் வங்கியின் நோக்கமாக இருந்தது. ஆனால் கடந்த அக்டோபர் மாதத்தில், நாட்டின் நுகர்வோர் விலை குறியீட்டின் அடிப்படையிலான பண வீக்கம் 4.62 சதவிகிதமாக அதிகரித்துள்ளது. பண வீக்கம் 4 சதவிகித்தை தாண்டிக் கூடாது என ரிசர்வ் வங்கி இலக்கு நிர்ணயித்துள்ளது. உணவுப் பொருட்களின் விலை உயர்ந்ததே பண வீக்கம் அதிகரித்ததற்கு முக்கிய காரணம். செப்டம்பர் மாதம் 4.70 சதவிகிதமாக இருந்த உணவுப் பொருட்களின் பண வீக்கம், அக்டோபர் மாதத்தில் 6.92 சதவிகிதமாக உயர்ந்துள்ளது. தொடர்ந்து வெங்கயாம் உள்ளிட்ட காய்கறிகளின் விலை கடுமையாக உயர்ந்து வருவதால் பண வீக்கம் மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், வளர்ச்சி கடுமையாக குறைந்துள்ள நேரத்தில் அதனை ஊக்குவிப்பதோடு நாட்டில் விலைவாசி அதிகரிக்காமலும் பார்த்துக்கொள்ளும் கடமை ரிசர்வ் வங்கிக்கு உள்ளது. ஆனால் தற்போது ஏற்பட்டுள்ள வளர்ச்சி குறைவு சுழற்சி முறையாலான பிரச்னை அல்ல என்றும், இது அமைப்பு ரீதியானது என்றும் பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றனர். இது தொடர்பாக கருத்து தெரிவித்த பொருளாதார நிபுணர் அனில் சூது, "வளர்ச்சியை ஊக்குவிக்க ரிசர்வ் வங்கி வட்டி விகிதங்களைக் குறைப்பது தீர்வாகாது. நாட்டில் தற்போது தேவை குறைந்துள்ள நிலையில் அதனை ஊக்குவிக்கவே அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். நாட்டில் தேவை அதிகரித்தால்தான் நிதி ஆதாரத்திற்கான தேவை அதிகரிக்கும், ஆனால் தற்போது மக்கள் தங்களது செலவுகளையும், முதலீட்டையும் குறைத்து வரும் வேளையில் வட்டி வகித குறைப்பு நடவடிக்கை பலனளிக்காது" என்றார்.Conclusion:use file photo

Economist Anil sood interview has been sent already. Use the second portion of the interview.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.