ETV Bharat / business

சரக்கு விமானங்கள் மூலம் அதிக லாபம் ஈட்டிய இண்டிகோ!

author img

By

Published : Sep 11, 2020, 3:19 PM IST

டெல்லி: ஊரடங்கு காலத்தில் சரக்கு விமான சேவை மூலம் இண்டிகோ நிறுவனம் அதிக லாபத்தை ஈட்டியுள்ளதாக தெரிவித்துள்ளது.

Indigo with cargo flights earns more profit
Indigo with cargo flights earns more profit

கோவிட்-19 பரவலைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் மார்ச் இறுதி வாரத்தில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதன் காரணமாக மார்ச் இறுதி வாரத்தில் பயணிகள் விமான சேவையை அனைத்து விமான நிறுவனங்களும் நிறுத்திக்கொண்டன.

ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து மே மாதம் இறுதி வாரம் முதல் உள்ளூர் விமான சேவை தொடங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கடந்த ஏப்ரல் 18ஆம் தேதி முதல் செப்டம்பர் 7ஆம் தேதி வரை 1,700-க்கும் மேற்பட்ட சரக்கு விமானங்களை இயக்கியுள்ளதாக இண்டிகோ நிறுவனம் அறிவித்துள்ளது.

இது குறித்து இண்டிகோ நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "கரோனா காலத்தில் கிர்கிஸ்தான், எகிப்து, உஸ்பெகிஸ்தான் உள்பட 21 இடங்களுக்கு இயக்கப்பட்டன. ஒட்டுமொத்தமாகப் பார்த்தோம் என்றால் கடந்தாண்டுடன் ஒப்பிடுகையில் இந்தாண்டு 32 விழுக்காடு மட்டுமே விமான சேவைகள் இயக்கப்பட்டன" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இது தொடர்பாக இண்டிகோ நிறுவனத்தின் சிஇஓ ரோன்ஜோய் தத்தா வெளியிட்டுள்ள அறிக்கையில், "இந்த ஆண்டு கோவிட்-19 காரணமாக அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு எங்கள் வணிகத்திற்கு ஒரு சவாலாக அமைந்தது.

இந்தக் காலகட்டத்தில் சரக்கு விமானங்களின் சேவை அதிகரித்தன. உள்நாட்டு, சர்வதேச விமான நிலையங்களுக்கு, சரக்குகளைப் பாதுகாப்பான முறையில் இயக்கினோம்" என்று தெரிவித்துள்ளார்.

சரக்கு விமானங்கள் மட்டும் இயக்கப்பட்டபோதும் கடந்தாண்டுடன் ஒப்பிடுகையில் அதிக லாபத்தை இண்டிகோ ஈட்டியுள்ளதாக இண்டிகோ தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க: நடப்பு நிதியாண்டில் ஜிடிபி 9 விழுக்காடு சரிவைச் சந்திக்கும் - கிரிசில் அமைப்பு தகவல்

கோவிட்-19 பரவலைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் மார்ச் இறுதி வாரத்தில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதன் காரணமாக மார்ச் இறுதி வாரத்தில் பயணிகள் விமான சேவையை அனைத்து விமான நிறுவனங்களும் நிறுத்திக்கொண்டன.

ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து மே மாதம் இறுதி வாரம் முதல் உள்ளூர் விமான சேவை தொடங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கடந்த ஏப்ரல் 18ஆம் தேதி முதல் செப்டம்பர் 7ஆம் தேதி வரை 1,700-க்கும் மேற்பட்ட சரக்கு விமானங்களை இயக்கியுள்ளதாக இண்டிகோ நிறுவனம் அறிவித்துள்ளது.

இது குறித்து இண்டிகோ நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "கரோனா காலத்தில் கிர்கிஸ்தான், எகிப்து, உஸ்பெகிஸ்தான் உள்பட 21 இடங்களுக்கு இயக்கப்பட்டன. ஒட்டுமொத்தமாகப் பார்த்தோம் என்றால் கடந்தாண்டுடன் ஒப்பிடுகையில் இந்தாண்டு 32 விழுக்காடு மட்டுமே விமான சேவைகள் இயக்கப்பட்டன" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இது தொடர்பாக இண்டிகோ நிறுவனத்தின் சிஇஓ ரோன்ஜோய் தத்தா வெளியிட்டுள்ள அறிக்கையில், "இந்த ஆண்டு கோவிட்-19 காரணமாக அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு எங்கள் வணிகத்திற்கு ஒரு சவாலாக அமைந்தது.

இந்தக் காலகட்டத்தில் சரக்கு விமானங்களின் சேவை அதிகரித்தன. உள்நாட்டு, சர்வதேச விமான நிலையங்களுக்கு, சரக்குகளைப் பாதுகாப்பான முறையில் இயக்கினோம்" என்று தெரிவித்துள்ளார்.

சரக்கு விமானங்கள் மட்டும் இயக்கப்பட்டபோதும் கடந்தாண்டுடன் ஒப்பிடுகையில் அதிக லாபத்தை இண்டிகோ ஈட்டியுள்ளதாக இண்டிகோ தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க: நடப்பு நிதியாண்டில் ஜிடிபி 9 விழுக்காடு சரிவைச் சந்திக்கும் - கிரிசில் அமைப்பு தகவல்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.