ETV Bharat / briefs

வாடகை தகராறில் வீட்டின் உரிமையாளரைக் கொலை செய்த இளைஞர் கைது!

author img

By

Published : Aug 4, 2020, 6:08 PM IST

புதுச்சேரி: வீட்டு வாடகை கேட்ட வீட்டு உரிமையாளரை கத்தியால் குத்திக் கொலை செய்த இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Youth arrested for killing house owner in rent dispute
Youth arrested for killing house owner in rent dispute

புதுச்சேரி லாஸ்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் புருஷோத்தமன். பாக்கு உடையான்பேட்டையிலிருந்து விமான நிலையம் செல்லும் ஜீவா காலனி பகுதி வரை,புருஷோத்தமனுக்கு ஐந்து வீடுகள் சொந்தமாக இருந்துள்ளது.

புருஷோத்தமனின் வீட்டில் குடியிருப்பவர், அருண். புதுச்சேரி பெரிய மார்க்கெட் பகுதியில் உள்ள கோழி இறைச்சிக் கடையில் வேலை செய்து வருகிறார். அருணும் அவரது மனைவியும் ஒரு குடியிருப்பில் வசித்து வந்த நிலையில் கடந்த மூன்று மாதங்களாக வாடகை தரவில்லை என்று கூறப்படுகிறது.

முன்தொகை தீர்ந்த பிறகும் மூன்று மாதங்களாக வாடகை தராததால் புருஷோத்தமனுக்கும் அருணுக்கும் அடிக்கடி தகராறு இருந்துள்ளது.

இந்நிலையில், நேற்று(ஆகஸ்ட் 3) குடிநீர் குழாயை புருஷோத்தமன் அடைத்துள்ளதாகவும்; அதனால், அருணுக்கும் புருஷோத்தமனுக்கும் தகராறு ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. அப்போது, ஆத்திரமடைந்த அருண் புருஷோத்தமனை கத்தியால் பலமாக வயிற்றில் குத்தியுள்ளார். இதில், பலத்த காயமடைந்த புருஷோத்தமனை அக்கம் பக்கத்தினர் மீட்டு அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இதையடுத்து, அவர் மருத்துவமனையில் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். பின்னர் இதுகுறித்து தன்வந்திரி காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து அருணை கைது செய்தனர்.

புதுச்சேரி லாஸ்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் புருஷோத்தமன். பாக்கு உடையான்பேட்டையிலிருந்து விமான நிலையம் செல்லும் ஜீவா காலனி பகுதி வரை,புருஷோத்தமனுக்கு ஐந்து வீடுகள் சொந்தமாக இருந்துள்ளது.

புருஷோத்தமனின் வீட்டில் குடியிருப்பவர், அருண். புதுச்சேரி பெரிய மார்க்கெட் பகுதியில் உள்ள கோழி இறைச்சிக் கடையில் வேலை செய்து வருகிறார். அருணும் அவரது மனைவியும் ஒரு குடியிருப்பில் வசித்து வந்த நிலையில் கடந்த மூன்று மாதங்களாக வாடகை தரவில்லை என்று கூறப்படுகிறது.

முன்தொகை தீர்ந்த பிறகும் மூன்று மாதங்களாக வாடகை தராததால் புருஷோத்தமனுக்கும் அருணுக்கும் அடிக்கடி தகராறு இருந்துள்ளது.

இந்நிலையில், நேற்று(ஆகஸ்ட் 3) குடிநீர் குழாயை புருஷோத்தமன் அடைத்துள்ளதாகவும்; அதனால், அருணுக்கும் புருஷோத்தமனுக்கும் தகராறு ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. அப்போது, ஆத்திரமடைந்த அருண் புருஷோத்தமனை கத்தியால் பலமாக வயிற்றில் குத்தியுள்ளார். இதில், பலத்த காயமடைந்த புருஷோத்தமனை அக்கம் பக்கத்தினர் மீட்டு அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இதையடுத்து, அவர் மருத்துவமனையில் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். பின்னர் இதுகுறித்து தன்வந்திரி காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து அருணை கைது செய்தனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.