ETV Bharat / briefs

நீரில் மூழ்கி இரண்டு சிறுவர்கள் பலி! - செங்கல் சூளை

கடலூர்: பண்ருட்டி அருகே செங்கல் சூளையின் பள்ளத்தில் தேங்கி நின்ற நீரில் மூழ்கி இரண்டு சிறுவர்கள் உயிரிழந்தனர்.

two children death near panruti
two children death near panruti
author img

By

Published : Jul 19, 2020, 11:41 PM IST

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த மாளிகைமேடு புதுக்காலனி பகுதியை சேர்ந்தவர் சிவக்குமார். இவருடைய மகன் ஆதித்யா (10) மற்றும் மாரியம்மன் கோயில் தெருவை சேர்ந்த சக்திவேல் என்பவரின் மகன் பாரதி (6). இவர்கள் இருவரும் தனது அத்தை சுமதியுடன் ஆடு மேய்க்கும்போது உடன் சென்றுள்ளனர்.

எஸ்.கே.பாளையம் அருகே உள்ள செங்கல் சூளையில் சுமதி ஆடு மேய்த்துக்கொண்டிருந்தபோது, சிறுவர்கள் இருவரும் செங்கல் சூளையில் உள்ள பள்ளத்தில் தேங்கி நின்ற நீரில் மூழ்கியுள்ளனர். சிறுவர்களின் அலறல் சத்தம் கேட்ட அக்கம்பக்கத்தினர் அவர்களை மீட்டு கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் பின்பு அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் அவர்கள் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இச்சம்பவம் குறித்து பண்ருட்டி காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த மாளிகைமேடு புதுக்காலனி பகுதியை சேர்ந்தவர் சிவக்குமார். இவருடைய மகன் ஆதித்யா (10) மற்றும் மாரியம்மன் கோயில் தெருவை சேர்ந்த சக்திவேல் என்பவரின் மகன் பாரதி (6). இவர்கள் இருவரும் தனது அத்தை சுமதியுடன் ஆடு மேய்க்கும்போது உடன் சென்றுள்ளனர்.

எஸ்.கே.பாளையம் அருகே உள்ள செங்கல் சூளையில் சுமதி ஆடு மேய்த்துக்கொண்டிருந்தபோது, சிறுவர்கள் இருவரும் செங்கல் சூளையில் உள்ள பள்ளத்தில் தேங்கி நின்ற நீரில் மூழ்கியுள்ளனர். சிறுவர்களின் அலறல் சத்தம் கேட்ட அக்கம்பக்கத்தினர் அவர்களை மீட்டு கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் பின்பு அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் அவர்கள் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இச்சம்பவம் குறித்து பண்ருட்டி காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.