ETV Bharat / briefs

காவலர்கள், கைதிகளுக்கு முகக்கவசம் வழங்கப்பட்டுள்ளதா? தமிழ்நாடு அரசுக்கு உயர்நீதிமன்றம் கேள்வி

author img

By

Published : Jun 26, 2020, 1:56 PM IST

சென்னை: கரோனா தொற்றிலிருந்து பாதுகாக்க காவல் துறை அலுவலர்கள், சிறைத்துறை அலுவலர்கள், கைதிகளுக்கு முகக்கவசம், கையுறை, கிருமி நாசினி உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளதா? என விரிவான அறிக்கை தாக்கல் செய்ய தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

காவலர்கள் மற்றும் கைதிகளுக்கு முகக் கவசம், கையுறை, கிருமி நாசினி வழங்கப்பட்டுள்ளதா..- சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி
காவலர்கள் மற்றும் கைதிகளுக்கு முகக் கவசம், கையுறை, கிருமி நாசினி வழங்கப்பட்டுள்ளதா..- சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி

சென்னை தாம்பரத்தைச் சேர்ந்த வாராகி என்பவர் தாக்கல் செய்த பொதுநல மனுவில், கரோனா பரவலை தடுக்கும் பணிகளில் முன்னணியில் இருந்து இரவு- பகலாக பணியாற்றும் காவல் துறையினருக்கு போதுமான பாதுகாப்பு வசதிகள் வழங்கப்படவில்லை. கரோனா பாதிப்புக்குள்ளாகும் காவல்துறை மற்றும் சிறைத் துறையினரின் எண்ணிக்கை தினந்தோறும் அதிகரித்து வருகிறது.

கடந்த மே மாதம் சென்னை புழல் மத்திய சிறையில் இருந்து பல்வேறு சிறைகளுக்கு மாற்றப்பட்ட 19 கைதிகளில் 9 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆகவே புழல் சிறையில் கரோனா தொற்று தாக்கம் இருப்பது உறுதியாகியுள்ளது.

ஆனால் இதுநாள் வரை அங்குள்ள சிறை கைதிகளுக்கு சோதனைகளும் நடத்தப்படவில்லை. தடுப்பு நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை” என கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் சுப்பையா, கிருஷ்ணன் ராமசாமி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, சிறைத்துறை அலுவலர்கள், காவல் துறையினர், கைதிகளுக்கு ஏற்கனவே முகக்கவசம், கையுறைகள், கிருமி நாசினிகள் வழங்கப்பட்டு வருகிறது. இதுசம்பந்தமாக விரிவான அறிக்கை தாக்கல் செய்ய இருப்பதாக தமிழ்நாடு அரசுத்தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், இது சம்பந்தமாக இரண்டு வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை தள்ளிவைத்தனர்.

இதையும் படிங்க: #Say_No_To_Drug: சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு தினம் காணொலி வெளியீடு!

சென்னை தாம்பரத்தைச் சேர்ந்த வாராகி என்பவர் தாக்கல் செய்த பொதுநல மனுவில், கரோனா பரவலை தடுக்கும் பணிகளில் முன்னணியில் இருந்து இரவு- பகலாக பணியாற்றும் காவல் துறையினருக்கு போதுமான பாதுகாப்பு வசதிகள் வழங்கப்படவில்லை. கரோனா பாதிப்புக்குள்ளாகும் காவல்துறை மற்றும் சிறைத் துறையினரின் எண்ணிக்கை தினந்தோறும் அதிகரித்து வருகிறது.

கடந்த மே மாதம் சென்னை புழல் மத்திய சிறையில் இருந்து பல்வேறு சிறைகளுக்கு மாற்றப்பட்ட 19 கைதிகளில் 9 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆகவே புழல் சிறையில் கரோனா தொற்று தாக்கம் இருப்பது உறுதியாகியுள்ளது.

ஆனால் இதுநாள் வரை அங்குள்ள சிறை கைதிகளுக்கு சோதனைகளும் நடத்தப்படவில்லை. தடுப்பு நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை” என கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் சுப்பையா, கிருஷ்ணன் ராமசாமி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, சிறைத்துறை அலுவலர்கள், காவல் துறையினர், கைதிகளுக்கு ஏற்கனவே முகக்கவசம், கையுறைகள், கிருமி நாசினிகள் வழங்கப்பட்டு வருகிறது. இதுசம்பந்தமாக விரிவான அறிக்கை தாக்கல் செய்ய இருப்பதாக தமிழ்நாடு அரசுத்தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், இது சம்பந்தமாக இரண்டு வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை தள்ளிவைத்தனர்.

இதையும் படிங்க: #Say_No_To_Drug: சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு தினம் காணொலி வெளியீடு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.