ETV Bharat / briefs

திருமணம் செய்து வைக்காததால் தந்தையை கொன்ற மகன்

author img

By

Published : Jul 1, 2020, 3:15 PM IST

அரியலூர்: தனக்கு திருமணம் செய்து வைக்காததால் சொந்த தந்தையை மகன் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Son who killed his father
Son who killed his father

அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அருகே கொங்குநாட்டில் குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் சக்கரவர்த்தி(65), இவருக்கு மூன்று மகன்கள், இரண்டு மகள்கள் உள்ளனர். மூத்த மகனுக்கும், இரண்டு மகள்களுக்கும் திருமணம் செய்து வைத்துள்ளார்.

இந்நிலையில் மூத்த மகனுக்கும், அடுத்த இரண்டு மகன்களுக்கும் திருமணம் செய்து வைக்க சக்கரவர்த்தியால் முடியவில்லை. மூன்றாவது மகன் கலியமூர்த்தி இவர் வெல்டிங் வேலை, கூலித்தொழில் செய்து வருகின்றார். கிடைக்கும் பணத்தை அவ்வப்போது குடித்து செலவு செய்து தந்தையிடம் தகராறு செய்வது வழக்கமாக இருந்துள்ளது.

பின்னர் நேற்று(ஜூன் 30) இரவு வீட்டிற்கு வெளியே உள்ள திண்ணையில் தந்தை சக்கரவர்த்தி படுத்திருந்தார். அவரிடம் கலியமூர்த்தி மது போதையில் தகராறு செய்துள்ளார். இருவருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டபோது அருகில் கிடந்த மண் வெட்டியை எடுத்து சக்கரவர்த்தியை கலியமூர்த்தி தாக்கியுள்ளார்.

இதில் படுகாயமடைந்த சக்கரவர்த்தி அதே இடத்திலேயே இறந்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல் துறையினர் கலியமூர்த்தி கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் தந்தையை மகனே கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அருகே கொங்குநாட்டில் குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் சக்கரவர்த்தி(65), இவருக்கு மூன்று மகன்கள், இரண்டு மகள்கள் உள்ளனர். மூத்த மகனுக்கும், இரண்டு மகள்களுக்கும் திருமணம் செய்து வைத்துள்ளார்.

இந்நிலையில் மூத்த மகனுக்கும், அடுத்த இரண்டு மகன்களுக்கும் திருமணம் செய்து வைக்க சக்கரவர்த்தியால் முடியவில்லை. மூன்றாவது மகன் கலியமூர்த்தி இவர் வெல்டிங் வேலை, கூலித்தொழில் செய்து வருகின்றார். கிடைக்கும் பணத்தை அவ்வப்போது குடித்து செலவு செய்து தந்தையிடம் தகராறு செய்வது வழக்கமாக இருந்துள்ளது.

பின்னர் நேற்று(ஜூன் 30) இரவு வீட்டிற்கு வெளியே உள்ள திண்ணையில் தந்தை சக்கரவர்த்தி படுத்திருந்தார். அவரிடம் கலியமூர்த்தி மது போதையில் தகராறு செய்துள்ளார். இருவருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டபோது அருகில் கிடந்த மண் வெட்டியை எடுத்து சக்கரவர்த்தியை கலியமூர்த்தி தாக்கியுள்ளார்.

இதில் படுகாயமடைந்த சக்கரவர்த்தி அதே இடத்திலேயே இறந்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல் துறையினர் கலியமூர்த்தி கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் தந்தையை மகனே கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.