ETV Bharat / briefs

மருத்துவரின் இருசக்கர வாகனத்தில் பாம்பு புகுந்ததால் பரபரப்பு

author img

By

Published : Jun 13, 2020, 1:15 PM IST

Updated : Jun 13, 2020, 1:29 PM IST

ஈரோடு: தாளவாடி அரசு மருத்துவமனை மருத்துவரின் இருசக்கர வாகனத்தில் பாம்பு புகுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

Snake Inside Of Doctor Two Wheeler In Erode
Snake Inside Of Doctor Two Wheeler In Erode

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் புலிகள் காப்பத்தை அடுத்த தாளவாடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் விஜயகுமார் என்பவர் மருத்துவராகப் பணிபுரிந்து வருகிறார்.

இவர் தனது இருசக்கர வாகனத்தில் மருத்துவமனைக்கு வந்திருந்த நிலையில், பணி முடிந்த பின்னர் வீட்டுக்குப் புறப்பட்டுள்ளார். அப்போது, அவரின் இருசக்கர வாகனத்தில் பாம்பு படம் எடுத்து ஆடியதைக் கண்டு அதிர்ச்சியடைந்த மருத்துவர், சத்தம் போட்டுள்ளார். அதனைக் கேட்டு மருத்துவமனை ஊழியர்கள் விரைந்து வந்து, பாம்பு பிடி வீரர் ஹத்மத் என்பவருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த ஹத்மத், பாம்பைப் பிடித்து சாக்குப்பையில் போட்டு தாளவாடி வனப்பகுதியில் விட்டுள்ளார். இதனால், மருத்துவமனை வளாகத்தில் சிறிது நேரம் பதற்றமான சூழல் காணப்பட்டது.

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் புலிகள் காப்பத்தை அடுத்த தாளவாடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் விஜயகுமார் என்பவர் மருத்துவராகப் பணிபுரிந்து வருகிறார்.

இவர் தனது இருசக்கர வாகனத்தில் மருத்துவமனைக்கு வந்திருந்த நிலையில், பணி முடிந்த பின்னர் வீட்டுக்குப் புறப்பட்டுள்ளார். அப்போது, அவரின் இருசக்கர வாகனத்தில் பாம்பு படம் எடுத்து ஆடியதைக் கண்டு அதிர்ச்சியடைந்த மருத்துவர், சத்தம் போட்டுள்ளார். அதனைக் கேட்டு மருத்துவமனை ஊழியர்கள் விரைந்து வந்து, பாம்பு பிடி வீரர் ஹத்மத் என்பவருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த ஹத்மத், பாம்பைப் பிடித்து சாக்குப்பையில் போட்டு தாளவாடி வனப்பகுதியில் விட்டுள்ளார். இதனால், மருத்துவமனை வளாகத்தில் சிறிது நேரம் பதற்றமான சூழல் காணப்பட்டது.

Last Updated : Jun 13, 2020, 1:29 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.