ETV Bharat / briefs

அம்பானியிடமிருந்து ரூ.1200 கோடியை மீட்க என்.சி.எல்.டியை நாடும் எஸ்.பி.ஐ!

author img

By

Published : Jun 13, 2020, 6:54 PM IST

இது ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் (RCom) மற்றும் ரிலையன்ஸ் இன்ஃப்ராடெல் (RITL) ஆகிய நிறுவனங்களுக்காக வாங்கப்பட்ட கடனே தவிர, தனிநபர் கடன் கிடையாது என அனில் அம்பானியின் செய்தித் தொடர்பாளர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அனில் அம்பானி
அனில் அம்பானி

மும்பை: இந்தியாவின் மிகப் பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா, அனில் அம்பானியின் பல நிறுவனங்களுக்கு கோடி கணக்கில் கடன் கொடுத்துள்ளது.

அனில் அம்பானியின் நிறுவனங்களுக்கு, ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா கொடுத்திருக்கும் கடன்களை, அனில் அம்பானி கொடுத்து இருக்கும் தனிநபர் உத்தரவாதம் வழியாக வசூலித்துக் கொள்ள, தேசிய கம்பெனி சட்டத் தீர்ப்பாயத்தை (NCLT - Nationl Company Law Tribunal) நாடி இருக்கிறார்களாம்.

இந்த தனிநபர் உத்தரவாதத்தின் மூலம் பெற்ற கடனின் மதிப்பு சுமார் 1200 - 1300 கோடி ரூபாய் இருக்கும் எனவும் செய்திகள் வெளியாகி இருக்கின்றன.

எஸ்பிஐ வங்கியில் வீட்டிலிருந்தபடியே உடனடி சேமிப்புக் கணக்கு; ஆதார் அவசியம்!

அனில் அம்பானி தரப்பில் இருந்து "இது ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் & ரிலையன்ஸ் இன்ஃப்ராடெல் போன்ற கம்பெனிகளின் கடன். அனில் அம்பானியின் சொந்தக் கடன் அல்ல. இந்த இரு கம்பெனிகளுளின் தீர்மானத்துக்கான திட்டங்கள், கடன் கொடுத்தவர்களால் (வங்கிகளால்) மார்ச் 2020-லேயே அனுமதிக்கப்பட்டுவிட்டது.

தற்போது என்.சி.எல்.டி-யின் அனுமதிக்காக தீர்மானத்துக்கான திட்டம் கிடப்பில் இருக்கிறது" எனச் சொல்கிறார்கள். இந்த தீர்மானத் திட்டத்திலும் எஸ்பிஐ இருக்கிறது. அதான் ரெசல்யூஷன் திட்டம் இருக்கிறதே, அதற்கான அனுமதி வரட்டும் கடனை வசூலித்துக் கொள்ளலாம் என ஓயவில்லை எஸ்பிஐ.

தன் கடனை வசூலிக்க, அனில் அம்பானியின் தனிப்பட்ட உத்தரவாதத்தைக் கணக்கில் எடுத்துக் கொண்டு துரத்திக் கொண்டு இருக்கிறது. அந்த விஷயத்தில் எஸ்பிஐ வங்கியை நிச்சயம் பாராட்ட வேண்டும்.

அனில் அம்பானியின் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன், ரிலையன்ஸ் டெலிகாம் & ரிலையன்ஸ் இன்ஃப்ராடெல் போன்ற நிறுவனங்களின் சொத்துக்கள் ஜனவரி 2020-இலலேயே ஏலத்துக்கு வந்துவிட்டன. ஏலத்தில் அதிக தொகை கோரி இருப்பவர்களின் விவரங்களும் வெளியானது நினைவிருக்கலாம்.

காங்கிரஸால் வீழ்ந்த ஊதுபத்தி தொழிலுக்கு புத்துயிர் கொடுத்த பாஜக!

ரிலையன்ஸ் டெலிகாம் & ஆர் காம் நிறுவனத்தை யுவி அசெட் (UV Asset Reconstruction)என்கிற நிறுவனம் அனில் அம்பானியின் தகவல் மையங்கள் மற்றும் நிறுவனத்தின் சொத்துக்கள் போன்றைகளுக்கு அதிகபட்சமாக 16,000 கோடி ரூபாய்க்கு மேல் ஏலம் கோரியது.

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இன்ஃப்ராடெல் கம்பெனிக்கு அதிகபட்சமாக 3,609 கோடி ரூபாய் ஏலம் கோரினார்.

ரிலையன்ஸ் இன்ஃப்ராடெல்லுக்கு சொந்தமாக 22 டெலிகாம் கோட்டங்கள் இந்தியாவில் இருக்கின்றன. ரிலையன்ஸ் கம்யூனிகேஷனுக்கு சொந்தமாக இந்தியாவில் சுமார் 43,000 டெலிகாம் கோபுரங்கள், ஆப்டிக் ஃபைபர் லைன்கள் மற்றும் தகவல் மையங்கள் இருக்கின்றன என்றும் கூறப்படுகிறது.

இதையும் படிங்க: இ.எம்.ஐ. தவணை நீட்டிப்புக்குள் இத்தனை இரகசியங்களா?

மும்பை: இந்தியாவின் மிகப் பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா, அனில் அம்பானியின் பல நிறுவனங்களுக்கு கோடி கணக்கில் கடன் கொடுத்துள்ளது.

அனில் அம்பானியின் நிறுவனங்களுக்கு, ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா கொடுத்திருக்கும் கடன்களை, அனில் அம்பானி கொடுத்து இருக்கும் தனிநபர் உத்தரவாதம் வழியாக வசூலித்துக் கொள்ள, தேசிய கம்பெனி சட்டத் தீர்ப்பாயத்தை (NCLT - Nationl Company Law Tribunal) நாடி இருக்கிறார்களாம்.

இந்த தனிநபர் உத்தரவாதத்தின் மூலம் பெற்ற கடனின் மதிப்பு சுமார் 1200 - 1300 கோடி ரூபாய் இருக்கும் எனவும் செய்திகள் வெளியாகி இருக்கின்றன.

எஸ்பிஐ வங்கியில் வீட்டிலிருந்தபடியே உடனடி சேமிப்புக் கணக்கு; ஆதார் அவசியம்!

அனில் அம்பானி தரப்பில் இருந்து "இது ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் & ரிலையன்ஸ் இன்ஃப்ராடெல் போன்ற கம்பெனிகளின் கடன். அனில் அம்பானியின் சொந்தக் கடன் அல்ல. இந்த இரு கம்பெனிகளுளின் தீர்மானத்துக்கான திட்டங்கள், கடன் கொடுத்தவர்களால் (வங்கிகளால்) மார்ச் 2020-லேயே அனுமதிக்கப்பட்டுவிட்டது.

தற்போது என்.சி.எல்.டி-யின் அனுமதிக்காக தீர்மானத்துக்கான திட்டம் கிடப்பில் இருக்கிறது" எனச் சொல்கிறார்கள். இந்த தீர்மானத் திட்டத்திலும் எஸ்பிஐ இருக்கிறது. அதான் ரெசல்யூஷன் திட்டம் இருக்கிறதே, அதற்கான அனுமதி வரட்டும் கடனை வசூலித்துக் கொள்ளலாம் என ஓயவில்லை எஸ்பிஐ.

தன் கடனை வசூலிக்க, அனில் அம்பானியின் தனிப்பட்ட உத்தரவாதத்தைக் கணக்கில் எடுத்துக் கொண்டு துரத்திக் கொண்டு இருக்கிறது. அந்த விஷயத்தில் எஸ்பிஐ வங்கியை நிச்சயம் பாராட்ட வேண்டும்.

அனில் அம்பானியின் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன், ரிலையன்ஸ் டெலிகாம் & ரிலையன்ஸ் இன்ஃப்ராடெல் போன்ற நிறுவனங்களின் சொத்துக்கள் ஜனவரி 2020-இலலேயே ஏலத்துக்கு வந்துவிட்டன. ஏலத்தில் அதிக தொகை கோரி இருப்பவர்களின் விவரங்களும் வெளியானது நினைவிருக்கலாம்.

காங்கிரஸால் வீழ்ந்த ஊதுபத்தி தொழிலுக்கு புத்துயிர் கொடுத்த பாஜக!

ரிலையன்ஸ் டெலிகாம் & ஆர் காம் நிறுவனத்தை யுவி அசெட் (UV Asset Reconstruction)என்கிற நிறுவனம் அனில் அம்பானியின் தகவல் மையங்கள் மற்றும் நிறுவனத்தின் சொத்துக்கள் போன்றைகளுக்கு அதிகபட்சமாக 16,000 கோடி ரூபாய்க்கு மேல் ஏலம் கோரியது.

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இன்ஃப்ராடெல் கம்பெனிக்கு அதிகபட்சமாக 3,609 கோடி ரூபாய் ஏலம் கோரினார்.

ரிலையன்ஸ் இன்ஃப்ராடெல்லுக்கு சொந்தமாக 22 டெலிகாம் கோட்டங்கள் இந்தியாவில் இருக்கின்றன. ரிலையன்ஸ் கம்யூனிகேஷனுக்கு சொந்தமாக இந்தியாவில் சுமார் 43,000 டெலிகாம் கோபுரங்கள், ஆப்டிக் ஃபைபர் லைன்கள் மற்றும் தகவல் மையங்கள் இருக்கின்றன என்றும் கூறப்படுகிறது.

இதையும் படிங்க: இ.எம்.ஐ. தவணை நீட்டிப்புக்குள் இத்தனை இரகசியங்களா?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.