ETV Bharat / briefs

பணி முடிந்து வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த காவலருக்கு மாரடைப்பு!

author img

By

Published : Jun 26, 2020, 2:01 PM IST

திருவள்ளூர்: பணி முடிந்து வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த காவலர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார்.

பணி முடிந்து வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த காவலர் மாரடைப்பு ஏற்பட்டு மரணம்
பணி முடிந்து வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த காவலர் மாரடைப்பு ஏற்பட்டு மரணம்

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியை சேர்ந்தவர் சத்தியமூர்த்தி (வயது 56). இவர் சோழவரம் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வந்தார். கடந்த இரண்டு வாரமாக காய்கறி சந்தை பகுதியில் பணியில் இருந்தார்.

இந்நிலையில், பணி முடிந்து வீட்டிற்கு வந்து ஓய்வெடுத்துக் கொண்டிருந்த போது, அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது.

இதையடுத்து அவரை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே பரிதாபமாக இறந்துவிட்டார். சத்தியமூர்த்திக்கு சாந்தி என்ற மனைவியும் 2 மகள்களும் உள்ளனர்.

தகவலறிந்து பொன்னேரி காவல்துறையினர் சத்தியமூர்த்தியின் உடலை, உடற்கூறு ஆய்விற்காக பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தூங்கிக்கொண்டிருந்த காவலர் திடீரென மாரடைப்பால் மரணம் அடைந்தது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

இதையும் படிங்க: சிபிஎஸ்இ திட்டத்துக்கு உச்ச நீதிமன்றம் அனுமதி!

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியை சேர்ந்தவர் சத்தியமூர்த்தி (வயது 56). இவர் சோழவரம் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வந்தார். கடந்த இரண்டு வாரமாக காய்கறி சந்தை பகுதியில் பணியில் இருந்தார்.

இந்நிலையில், பணி முடிந்து வீட்டிற்கு வந்து ஓய்வெடுத்துக் கொண்டிருந்த போது, அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது.

இதையடுத்து அவரை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே பரிதாபமாக இறந்துவிட்டார். சத்தியமூர்த்திக்கு சாந்தி என்ற மனைவியும் 2 மகள்களும் உள்ளனர்.

தகவலறிந்து பொன்னேரி காவல்துறையினர் சத்தியமூர்த்தியின் உடலை, உடற்கூறு ஆய்விற்காக பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தூங்கிக்கொண்டிருந்த காவலர் திடீரென மாரடைப்பால் மரணம் அடைந்தது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

இதையும் படிங்க: சிபிஎஸ்இ திட்டத்துக்கு உச்ச நீதிமன்றம் அனுமதி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.