ETV Bharat / briefs

வெளியே சுற்றுபவர்கள் மீது குற்ற வழக்கு - ஆட்சியர் எச்சரிக்கை - Corona infection

பெரம்பலூர்: முழு ஊரடங்கு நாளை (ஜூலை 5) கடைபிடிக்கப்படுவதால் வெளியே சுற்றுபவர்களின் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு, குற்ற வழக்குப் பதிவு செய்யப்படும் என ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Perambalur district collector
Perambalur district collector
author img

By

Published : Jul 4, 2020, 4:50 PM IST

கரோனா நோய்த் தொற்று வேகமாக பரவி வரும் சூழ்நிலையில் தமிழ்நாடு முழுவதும் ஜூலை மாதம் அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்திருந்தது. அதன்படி, பெரம்பலூர் மாவட்டத்திலும் ஜூலை மாதத்தில் உள்ள அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என ஆட்சியர் சாந்தா செய்திக் குறிப்பு வெளியிட்டுள்ளார்.

இது குறித்து அவர் கூறியதாவது; "பெரம்பலூர் மாவட்டத்தில் ஜூலை 5ஆம் தேதி அன்று காலை 6 மணி முதல் ஜூலை ஆறாம் தேதி காலை 6 மணி வரை 144 தடை உத்தரவு அமல்படுத்தப்படும். மாவட்ட எல்லையில் சோதனைச் சாவடி ஏற்படுத்தப்பட்டு அரசுப் பணி நிமித்தமாக செல்லும் வாகனங்களைத் தவிர பிற வாகனங்கள் மாவட்டத்திற்குள் நுழைய அனுமதிக்கக் கூடாது.

ஊரடங்கு காலத்தில் தேவையின்றி வெளியில் சுற்றுபவர்களின் வாகனங்கள் பறிமுதல் செய்வதோடு குற்ற வழக்குப் பதிவு செய்யப்படும். அதேசமயம் ஊரடங்கு காலத்தில் மருத்துவமனைகள், மருந்தகங்கள் மட்டுமே செயல்படும். ஊரடங்கு காலத்தில் கடைகளை திறந்து வர்த்தகம் செய்வோரின் கடைகளுக்கு சீல் வைத்து குற்ற வழக்குப் பதிவு செய்யப்படும்.

ஊரடங்கு காலத்தில் பொதுமக்கள் தங்களுடைய இல்லங்களில் பாதுகாப்பாக இருக்க வேண்டும். கரோனா தொற்று குறித்து அரசு எடுக்கும் முயற்சிகளுக்கு ஒத்துழைக்க வேண்டும்" என்றார்.

கரோனா நோய்த் தொற்று வேகமாக பரவி வரும் சூழ்நிலையில் தமிழ்நாடு முழுவதும் ஜூலை மாதம் அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்திருந்தது. அதன்படி, பெரம்பலூர் மாவட்டத்திலும் ஜூலை மாதத்தில் உள்ள அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என ஆட்சியர் சாந்தா செய்திக் குறிப்பு வெளியிட்டுள்ளார்.

இது குறித்து அவர் கூறியதாவது; "பெரம்பலூர் மாவட்டத்தில் ஜூலை 5ஆம் தேதி அன்று காலை 6 மணி முதல் ஜூலை ஆறாம் தேதி காலை 6 மணி வரை 144 தடை உத்தரவு அமல்படுத்தப்படும். மாவட்ட எல்லையில் சோதனைச் சாவடி ஏற்படுத்தப்பட்டு அரசுப் பணி நிமித்தமாக செல்லும் வாகனங்களைத் தவிர பிற வாகனங்கள் மாவட்டத்திற்குள் நுழைய அனுமதிக்கக் கூடாது.

ஊரடங்கு காலத்தில் தேவையின்றி வெளியில் சுற்றுபவர்களின் வாகனங்கள் பறிமுதல் செய்வதோடு குற்ற வழக்குப் பதிவு செய்யப்படும். அதேசமயம் ஊரடங்கு காலத்தில் மருத்துவமனைகள், மருந்தகங்கள் மட்டுமே செயல்படும். ஊரடங்கு காலத்தில் கடைகளை திறந்து வர்த்தகம் செய்வோரின் கடைகளுக்கு சீல் வைத்து குற்ற வழக்குப் பதிவு செய்யப்படும்.

ஊரடங்கு காலத்தில் பொதுமக்கள் தங்களுடைய இல்லங்களில் பாதுகாப்பாக இருக்க வேண்டும். கரோனா தொற்று குறித்து அரசு எடுக்கும் முயற்சிகளுக்கு ஒத்துழைக்க வேண்டும்" என்றார்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.