ETV Bharat / briefs

தமிழ்நாட்டில், 3 மாதத்தில் ஆறு லட்சம் பேர் கைது!

author img

By

Published : Jun 22, 2020, 12:14 PM IST

சென்னை: கரோனா ஊரடங்கை மீறியதாக கடந்த மூன்று மாத்தில் ஆறு லட்சம் பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஊரடங்கை மீறியதாக தமிழ்நாட்டில் 90 நாட்களில் 6 லட்சத்துக்கும் மேற்பட்டோர் கைது
ஊரடங்கை மீறியதாக தமிழ்நாட்டில் 90 நாட்களில் 6 லட்சத்துக்கும் மேற்பட்டோர் கைது

கரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில் தமிழ்நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தற்போது, சில தளர்வுகளுடன் ஊரடங்கு பின்பற்றப்படுகிறது.

இந்நிலையில் மீண்டும் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட 4 மாவட்டங்களில் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் யாரும் அவசியமின்றி வெளியில் வரக்கூடாது என அரசு உத்தரவிட்டுள்ளது.

இந்த தடை உத்தரவை மீறுபவர்களை கண்காணித்து தமிழ்நாடு காவல்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. காவல் துறையின் தடை உத்தரவை மீறுபவர்கள் மீது வழக்குகள் பதிவு செய்து அவர்களை கட்டுப்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் ஊரடங்கு உத்தரவு அமுலுக்கு வந்த 90 நாள்களில் தடையை மீறியதாக ஆறு லட்சத்து 91 ஆயிரத்து 603 பேரை காவல்துறையினர் கைதுசெய்து ஜாமீனில் விடுவித்துள்ளனர்.

இவர்களிடமிருந்து ஐந்து லட்சத்து ஆறு ஆயிரத்து 352 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. 14 கோடியே 25 லட்சத்து 96 ஆயிரத்து 910 ரூபாய் அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது.

இந்தத் தகவல்கள் தமிழ்நாடு காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளன.

இதையும் படிங்க: காவல் துறை வாட்ஸ்அப்புக்கு ஆபாச வீடியோ அனுப்பி மாட்டிக்கொண்ட கோவை இளைஞர்!

கரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில் தமிழ்நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தற்போது, சில தளர்வுகளுடன் ஊரடங்கு பின்பற்றப்படுகிறது.

இந்நிலையில் மீண்டும் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட 4 மாவட்டங்களில் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் யாரும் அவசியமின்றி வெளியில் வரக்கூடாது என அரசு உத்தரவிட்டுள்ளது.

இந்த தடை உத்தரவை மீறுபவர்களை கண்காணித்து தமிழ்நாடு காவல்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. காவல் துறையின் தடை உத்தரவை மீறுபவர்கள் மீது வழக்குகள் பதிவு செய்து அவர்களை கட்டுப்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் ஊரடங்கு உத்தரவு அமுலுக்கு வந்த 90 நாள்களில் தடையை மீறியதாக ஆறு லட்சத்து 91 ஆயிரத்து 603 பேரை காவல்துறையினர் கைதுசெய்து ஜாமீனில் விடுவித்துள்ளனர்.

இவர்களிடமிருந்து ஐந்து லட்சத்து ஆறு ஆயிரத்து 352 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. 14 கோடியே 25 லட்சத்து 96 ஆயிரத்து 910 ரூபாய் அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது.

இந்தத் தகவல்கள் தமிழ்நாடு காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளன.

இதையும் படிங்க: காவல் துறை வாட்ஸ்அப்புக்கு ஆபாச வீடியோ அனுப்பி மாட்டிக்கொண்ட கோவை இளைஞர்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.