ETV Bharat / briefs

மின்வாரிய ஊழியர் மின்சாரம் பாய்ந்து உயிரிழப்பு

author img

By

Published : Jun 13, 2020, 6:34 PM IST

விழுப்புரம்: பரந்தாங்கல் கிராமத்தைச் சேர்ந்த மின் ஊழியர் ஒருவர், மின்சாரம் பாய்ந்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மின் ஊழியர் பலி
மின் ஊழியர் பலி

விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் அருகேயுள்ள பரந்தாங்கல் கிராமத்தைச் சேர்ந்தவர் அஜித்குமார். மின் ஊழியரான இவர், இன்று காலை அப்பகுதியில் உள்ள தெருவிளக்கு மின்கம்பத்தில் ஏற்பட்ட பழுதை சரி செய்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக திடீரென அஜித்குமார் மீது மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார்.

இதையடுத்து இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த அவலூர்பேட்டை காவல் துறையினர், அஜித்தின் சடலத்தை மீட்டு உடற் கூறாய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் காவல் துறையினர் இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் அருகேயுள்ள பரந்தாங்கல் கிராமத்தைச் சேர்ந்தவர் அஜித்குமார். மின் ஊழியரான இவர், இன்று காலை அப்பகுதியில் உள்ள தெருவிளக்கு மின்கம்பத்தில் ஏற்பட்ட பழுதை சரி செய்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக திடீரென அஜித்குமார் மீது மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார்.

இதையடுத்து இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த அவலூர்பேட்டை காவல் துறையினர், அஜித்தின் சடலத்தை மீட்டு உடற் கூறாய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் காவல் துறையினர் இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.