விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் அருகேயுள்ள பரந்தாங்கல் கிராமத்தைச் சேர்ந்தவர் அஜித்குமார். மின் ஊழியரான இவர், இன்று காலை அப்பகுதியில் உள்ள தெருவிளக்கு மின்கம்பத்தில் ஏற்பட்ட பழுதை சரி செய்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக திடீரென அஜித்குமார் மீது மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார்.
இதையடுத்து இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த அவலூர்பேட்டை காவல் துறையினர், அஜித்தின் சடலத்தை மீட்டு உடற் கூறாய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் காவல் துறையினர் இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.