புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டத்தில் கரோனா தொற்று பரவாமல் தடுக்க வணிக நிறுவனங்களுக்கும், கடைகளுக்கும் பல்வேறு கட்டுபாடுகளை மாவட்ட நிர்வாகம் விதித்துள்ளது.
இந்நிலையில், காரைக்காலில் செயல்பட்டுவரும் மிகப்பெரிய வணிக வளாகத்தில், அரசு அறிவுறுத்திய வழிமுறைகளை சரிவர கடைப்பிடிக்கவில்லை என்று அம்மாவட்ட அலுவலர்களுக்கு தகவல் கிடைத்தது.
இதனையடுத்து மாநகராட்சி அலுவலர்கள் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று ஊழியர்களையும், வாடிக்கையாளர்களையும் வெளியேற்றி, கடைக்கு சீல் வைத்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
இதையும் படிங்க:ஊரடங்கு மீறல்: சுமார் 13.5 கோடி ரூபாய் அபராதம் வசூல்