இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், "சென்னை தலைமைச் செயலகம், பொதுத் துறை, முதலமைச்சர் அலுவலக பிரிவில் முதுநிலை தனிச் செயலராக பணியாற்றி வந்த தாமோதரன், உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில், இன்று (ஜூன் 17) அதிகாலை காலமானார் என்ற செய்தியை அறிந்து மிகுந்த வேதனை அடைந்தேன்.
கரோனா தடுப்புப் பணியின் போது, அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்றிய தாமோதரனின் சேவை மகத்தானது. அவரது குடும்பத்துக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன். தாமோதரன் குடும்பத்தில் ஒருவருக்கு தகுதியின் அடிப்படையில் அரசு வேலை வழங்கப்படும்" இவ்வாறு முதலமைச்சர் தெரிவித்திருந்தார்.