தமிழ்நாடு முழுவதும் கரோனா தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனிடையே பெரம்பலூர் மாவட்டம் குன்னம் சட்டப்பேரவை உறுப்பினராக அதிமுகவைச் சேர்ந்த ஆர்.டி. ராமச்சந்திரன் உள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு இவருடைய தாயாருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் ஆர்.டி. ராமச்சந்திரன் தன்னை தன்மைப்படுத்திக்கொண்டார்.
இந்நிலையில், சிறுநீரக அறுவை சிகிச்சை செய்து கொண்ட இவர் மாதாந்திர பரிசோதனைக்காக கேரள மாநிலம் சென்றிருந்தபோது அங்கு ஆர்.டி. ராமச்சந்திரனுக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதன் முடிவில், தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது, கேரள மாநிலம் கொச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் ஆர்.டி. ராமச்சந்திரன் சிகிச்சைப் பெற்று வருகிறார்.