தஞ்சாவூர் மாவட்டத்தை பொறுத்தவரை நாளுக்கு நாள் கரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வருகிறது. இந்நிலையில், இன்று (செப்டம்பர் 8) மேலும் 128 நபர்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாவட்டத்தில் 7,691 நபர்கள் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தஞ்சை மருத்துவமனை மருத்துவக் கல்லூரியில் 1,041 நபர்கள் கரோனாவிற்கு சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
இதுவரை உயிரிழந்தோரின் எண்ணிக்கை 128ஆக உயர்ந்துள்ளது. இன்று 186 நபர்கள் குணமடைந்து வீடு திரும்பினர்.