ETV Bharat / briefs

முழு ஊரடங்கு புரளி: மிலிட்டரி கேன்டீனில் குவிந்த ராணுவ வீரர்களின் குடும்பத்தினர்

author img

By

Published : Jun 22, 2020, 4:38 PM IST

மதுரை: ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்ற புரளியால் மிலிட்டரி கேன்டீனில் பொருள்கள் வாங்க ஆயிரக்கணக்கில் ராணுவ வீரர்களின் குடும்பத்தார் குவிந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

ஊரடங்கு புரளி: மிலிட்டரி கேன்டினில் குவிந்த ராணுவ வீரர்களின் குடும்பத்தினர்
ஊரடங்கு புரளி: மிலிட்டரி கேன்டினில் குவிந்த ராணுவ வீரர்களின் குடும்பத்தினர்

மதுரையின் பல்வேறுப் பகுதிகளில் கரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக சென்னையைப் போன்றே மதுரையிலும் மீண்டும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்ற வதந்தியும் மிகத் தீவிரமாக பரவிவருகிறது. நாளை மறுநாள் (ஜூன் 24) முதல் ஊரடங்கு பிறப்பிக்க வாய்ப்பு இருப்பதாக சமூக வலைதளங்களில் செய்தி வெளியானது.

இந்தத் தகவலால், மதுரை தபால் தந்தி நகர் பகுதியில் உள்ள மத்திய அரசுக்கு சொந்தமான ராணுவ வீரர்களின் குடும்பத்திற்கு விற்பனை செய்யும் கேன்டீனில், பொருள்கள் வாங்க, சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ராணுவ வீரரின் குடும்பத்தினர்கள் காலை முதலே வாசலில் காத்திருந்தனர்.

தகுந்த இடைவெளியைப் பின்பற்றாமல் வரிசையில் நின்றதால், அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மாவட்ட ஆட்சியரின் சிறப்பு பறக்கும் படை அலுவலர்கள் உடனடியாக கேன்டீனை தற்காலிகமாக மூட உத்தரவிட்டனர்.

மேலும் அங்கிருந்த பொதுமக்களை கலைந்து செல்லுமாறும் அறிவுறுத்தினர்.

மதுரையின் பல்வேறுப் பகுதிகளில் கரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக சென்னையைப் போன்றே மதுரையிலும் மீண்டும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்ற வதந்தியும் மிகத் தீவிரமாக பரவிவருகிறது. நாளை மறுநாள் (ஜூன் 24) முதல் ஊரடங்கு பிறப்பிக்க வாய்ப்பு இருப்பதாக சமூக வலைதளங்களில் செய்தி வெளியானது.

இந்தத் தகவலால், மதுரை தபால் தந்தி நகர் பகுதியில் உள்ள மத்திய அரசுக்கு சொந்தமான ராணுவ வீரர்களின் குடும்பத்திற்கு விற்பனை செய்யும் கேன்டீனில், பொருள்கள் வாங்க, சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ராணுவ வீரரின் குடும்பத்தினர்கள் காலை முதலே வாசலில் காத்திருந்தனர்.

தகுந்த இடைவெளியைப் பின்பற்றாமல் வரிசையில் நின்றதால், அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மாவட்ட ஆட்சியரின் சிறப்பு பறக்கும் படை அலுவலர்கள் உடனடியாக கேன்டீனை தற்காலிகமாக மூட உத்தரவிட்டனர்.

மேலும் அங்கிருந்த பொதுமக்களை கலைந்து செல்லுமாறும் அறிவுறுத்தினர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.