ETV Bharat / briefs

பத்திரிகையாளர்களைத் தரக்குறைவாகப் பேசிய குஷ்பூ!

நடிகை குஷ்பு பத்திரிகையாளர்களைத் தரக்குறைவாகப் பேசியுள்ள ஆடியோ வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகிறது.

author img

By

Published : Jun 9, 2020, 10:14 PM IST

குஷ்பு
குஷ்பு

கரோனா ஊரடங்கு காரணமாக வெள்ளித்திரை, சின்னத்திரையில் படப்பிடிப்புகள் கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக நடைபெறவில்லை. இதையடுத்து தற்போது 60 பேருடன் சின்னத்திரை படப்பிடிப்பு நடத்திக்கொள்ள தமிழ்நாடு அரசு அனுமதி கொடுத்துள்ளது.

இதுதொடர்பாக சின்னத்திரை தயாரிப்பாளர் சங்கத்தின் செயலாளரும் நடிகை குஷ்பூவும் பேசிய ஆடியோ ஒன்று தற்போது இணையதளங்களில் வெளியாகியுள்ளது. அந்த ஆடியோவில் அவர் பேசியதாவது "கரோனா தவிர பத்திரிகைக்காரர்களுக்கு இப்போது எழுத எந்தச் செய்தியும் இல்லை. ஆகையால் இப்போது, எங்கேயாவது உட்கார்ந்து நம்மைப் போட்டோ எடுப்பதற்கும், வீடியோ எடுப்பதற்கும், நம்மைக் கிழிப்பதற்கும் யோசித்துக் கொண்டிருப்பார்கள்.

ஷூட்டிங் ஆரம்பித்தவுடன் நம்மைப் பற்றி எழுதுவதற்குக் காத்துக் கொண்டிருப்பார்கள். அதனால் ஜாக்கிரதையாக இருக்கவும்" என்று அந்த ஆடியோவில் பேசியுள்ளார். இந்நிலையில், பத்திரிகையாளர்களைத் தரக்குறைவாக பேசிய குஷ்புக்கு எதிராக பலரும் குரல் கொடுத்து வருகின்றனர்.

கரோனா ஊரடங்கு காரணமாக வெள்ளித்திரை, சின்னத்திரையில் படப்பிடிப்புகள் கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக நடைபெறவில்லை. இதையடுத்து தற்போது 60 பேருடன் சின்னத்திரை படப்பிடிப்பு நடத்திக்கொள்ள தமிழ்நாடு அரசு அனுமதி கொடுத்துள்ளது.

இதுதொடர்பாக சின்னத்திரை தயாரிப்பாளர் சங்கத்தின் செயலாளரும் நடிகை குஷ்பூவும் பேசிய ஆடியோ ஒன்று தற்போது இணையதளங்களில் வெளியாகியுள்ளது. அந்த ஆடியோவில் அவர் பேசியதாவது "கரோனா தவிர பத்திரிகைக்காரர்களுக்கு இப்போது எழுத எந்தச் செய்தியும் இல்லை. ஆகையால் இப்போது, எங்கேயாவது உட்கார்ந்து நம்மைப் போட்டோ எடுப்பதற்கும், வீடியோ எடுப்பதற்கும், நம்மைக் கிழிப்பதற்கும் யோசித்துக் கொண்டிருப்பார்கள்.

ஷூட்டிங் ஆரம்பித்தவுடன் நம்மைப் பற்றி எழுதுவதற்குக் காத்துக் கொண்டிருப்பார்கள். அதனால் ஜாக்கிரதையாக இருக்கவும்" என்று அந்த ஆடியோவில் பேசியுள்ளார். இந்நிலையில், பத்திரிகையாளர்களைத் தரக்குறைவாக பேசிய குஷ்புக்கு எதிராக பலரும் குரல் கொடுத்து வருகின்றனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.