ETV Bharat / briefs

வெளிநாடுகளில் சிக்கித்தவித்த 589 இந்தியர்கள் மீட்பு!

author img

By

Published : Jul 20, 2020, 1:11 PM IST

சென்னை: ஆஸ்திரேலியா, கிர்கிஸ்தான், கத்தார், துபாய் ஆகிய நாடுகளில் சிக்கித்தவிக்கும் இந்தியர்களில் 589 போ் மீட்கப்பட்டு, சென்னை அழைத்துவரப்பட்டனர்.

வெளிநாடுகளில் சிக்கித்தவித்த 589 இந்தியர்கள் 4 சிறப்பு விமானங்களில் மீட்பு
வெளிநாடுகளில் சிக்கித்தவித்த 589 இந்தியர்கள் 4 சிறப்பு விமானங்களில் மீட்பு

கத்தார் நாட்டிலுள்ள தோகாவிலிருந்து சிறப்பு மீட்பு விமானம் நேற்று இரவு 200 இந்தியர்களுடன் சென்னை வந்தது. அதேபோல கிர்கிஸ்தான், துபாய், ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளிலிருந்தும் சிறப்பு மீட்பு விமானங்கள் சென்னை வந்தடைந்தன. கிர்கிஸ்தானிலிருந்து 165 பேரும், துபாயிலிருந்து 172 பேரும், ஆஸ்திரேலியாவிலிருந்து 52 பேரும் இந்த விமானங்களில் வந்தனர்.

அனைவரையும் அரசு அலுவலர்கள் மலர் கொத்து அளித்து வரவேற்றனர். பின்னர், அவர்களைத் தனிமைப்படுத்தல் மையங்களுக்கு அனுப்பிவைத்தனர். 14 நாள்கள் தனிமைப்படுத்தலுக்குப் பின் தொற்று இல்லை என்று உறுதியானவர்கள் மட்டும் இம்மையங்களிலிருந்து அவரவர் சொந்த ஊர்களுக்குத் திரும்புவார்கள்.

கத்தார் நாட்டிலுள்ள தோகாவிலிருந்து சிறப்பு மீட்பு விமானம் நேற்று இரவு 200 இந்தியர்களுடன் சென்னை வந்தது. அதேபோல கிர்கிஸ்தான், துபாய், ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளிலிருந்தும் சிறப்பு மீட்பு விமானங்கள் சென்னை வந்தடைந்தன. கிர்கிஸ்தானிலிருந்து 165 பேரும், துபாயிலிருந்து 172 பேரும், ஆஸ்திரேலியாவிலிருந்து 52 பேரும் இந்த விமானங்களில் வந்தனர்.

அனைவரையும் அரசு அலுவலர்கள் மலர் கொத்து அளித்து வரவேற்றனர். பின்னர், அவர்களைத் தனிமைப்படுத்தல் மையங்களுக்கு அனுப்பிவைத்தனர். 14 நாள்கள் தனிமைப்படுத்தலுக்குப் பின் தொற்று இல்லை என்று உறுதியானவர்கள் மட்டும் இம்மையங்களிலிருந்து அவரவர் சொந்த ஊர்களுக்குத் திரும்புவார்கள்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.