ETV Bharat / briefs

இரு மாநிலங்களுக்கு கடத்த முயன்ற 226 கிலோ கஞ்சா பறிமுதல்: 5 பேர் கைது!

author img

By

Published : Sep 22, 2020, 8:57 PM IST

தேனி: கேரளா, கர்நாடகாவிற்கு கடத்த முயன்ற 226 கிலோ கஞ்சாவை காவல் துறையினர் பறிமுதல்செய்து 5 பேரை கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

5 arrested for Cannabis Trafficking to Kerala
5 arrested for Cannabis Trafficking to Kerala

தமிழ்நாடு – கேரள எல்லையில் அமைந்துள்ள தேனி மாவட்டத்தில் சட்டவிரோதமாக கஞ்சா கடத்தப்படுவது தொடர்கதையாகவே உள்ளது. இதனைக் கட்டுப்படுத்த காவல் துறையினர் நடவடிக்கை எடுத்துவந்த போதிலும் குறைந்தபாடில்லை.

இந்நிலையில், தேனி மாவட்டம் வீரபாண்டி அருகே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த காவல் துறையினர் சந்தேகத்திற்கிடமாக வந்த வாகனத்தை நிறுத்தி சோதனைசெய்தனர்.

அப்போது, வாகனத்தில் இருந்த சுரேஷ் என்பவர் தப்பியோடிவிட்டார். பின்னர் கூடலூரிலிருந்து கர்நாடக மாநிலம் பெங்களூருவுக்கு கடத்தவிருந்த 80 கிலோ கஞ்சா பறிமுதல்செய்யப்பட்டது.

மேலும் கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட வாகனத்தைப் பறிமுதல்செய்து கூடலூரைச் சேர்ந்த நவீன்குமார் (30), கேரளாவைச் சேர்ந்த பைசல் (24), ஸ்டார்வின் (28) ஆகிய மூவரை கைதுசெய்தனர்.

பின்னர் இது தொடர்பாக வீரபாண்டி காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து தப்பியோடிய நபரை தீவிரமாகத் தேடிவருகின்றனர்.

இதேபோல், கம்பம் அரசுப் போக்குரவத்து பணிமனை அருகே ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த காவல் துறையினர் சந்தேகத்திற்கிடமாக வந்த கார், மினி லாரி, இருசக்கர வாகனத்தை நிறுத்தி சோதனைசெய்தனர்.

அப்போது, ஆந்திராவிலிருந்து கம்பம் வழியாக கேரளாவிற்கு கடத்த முயன்ற 176 கிலோ கஞ்சாவை பறிமுதல்செய்து, கம்பம் உலகத்தேவர் தெருவைச் சேர்ந்த வேல்முருகன் (45), குபேந்திரன் (37) ஆகிய இருவரை கைதுசெய்தனர்.

மேலும் கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட வாகனங்கள் பறிமுதல்செய்யப்பட்டது.

இதனிடையே, வாகனத்தில் வந்த கம்பத்தைச் சேர்ந்த மலைச்சாமி, கண்ணன், காளி ஆகிய மூவர் தப்பியோடிவிட்டனர்.

இது குறித்து வடக்கு காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து தப்பியோடியவர்களை தீவிரமாகத் தேடிவருகின்றனர்.

தமிழ்நாடு – கேரள எல்லையில் அமைந்துள்ள தேனி மாவட்டத்தில் சட்டவிரோதமாக கஞ்சா கடத்தப்படுவது தொடர்கதையாகவே உள்ளது. இதனைக் கட்டுப்படுத்த காவல் துறையினர் நடவடிக்கை எடுத்துவந்த போதிலும் குறைந்தபாடில்லை.

இந்நிலையில், தேனி மாவட்டம் வீரபாண்டி அருகே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த காவல் துறையினர் சந்தேகத்திற்கிடமாக வந்த வாகனத்தை நிறுத்தி சோதனைசெய்தனர்.

அப்போது, வாகனத்தில் இருந்த சுரேஷ் என்பவர் தப்பியோடிவிட்டார். பின்னர் கூடலூரிலிருந்து கர்நாடக மாநிலம் பெங்களூருவுக்கு கடத்தவிருந்த 80 கிலோ கஞ்சா பறிமுதல்செய்யப்பட்டது.

மேலும் கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட வாகனத்தைப் பறிமுதல்செய்து கூடலூரைச் சேர்ந்த நவீன்குமார் (30), கேரளாவைச் சேர்ந்த பைசல் (24), ஸ்டார்வின் (28) ஆகிய மூவரை கைதுசெய்தனர்.

பின்னர் இது தொடர்பாக வீரபாண்டி காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து தப்பியோடிய நபரை தீவிரமாகத் தேடிவருகின்றனர்.

இதேபோல், கம்பம் அரசுப் போக்குரவத்து பணிமனை அருகே ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த காவல் துறையினர் சந்தேகத்திற்கிடமாக வந்த கார், மினி லாரி, இருசக்கர வாகனத்தை நிறுத்தி சோதனைசெய்தனர்.

அப்போது, ஆந்திராவிலிருந்து கம்பம் வழியாக கேரளாவிற்கு கடத்த முயன்ற 176 கிலோ கஞ்சாவை பறிமுதல்செய்து, கம்பம் உலகத்தேவர் தெருவைச் சேர்ந்த வேல்முருகன் (45), குபேந்திரன் (37) ஆகிய இருவரை கைதுசெய்தனர்.

மேலும் கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட வாகனங்கள் பறிமுதல்செய்யப்பட்டது.

இதனிடையே, வாகனத்தில் வந்த கம்பத்தைச் சேர்ந்த மலைச்சாமி, கண்ணன், காளி ஆகிய மூவர் தப்பியோடிவிட்டனர்.

இது குறித்து வடக்கு காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து தப்பியோடியவர்களை தீவிரமாகத் தேடிவருகின்றனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.