ராஜஸ்தான் மாநிலம், பிகானேர் மாவட்டத்தில் இருந்து மினிவேன் ஒன்று ஆள்களுடன் சென்று கொண்டிருந்தது. அப்போது, அவ்வழியாக எதிரே வந்த வாகனத்தின் மீது எதிர்பாராத விதமாக மினிவேன் மோதி விபத்துக்குள்ளானது.
இதில், 15 வயது சிறுமி உள்பட மூவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், நான்கு பேர் படுகாயமடைந்தனர். இதைக்கண்ட வாகன ஓட்டிகள், காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.
இதையடுத்து, உயிரிழந்தவர்களின் உடல்களை உடற்கூறாய்விற்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பட்டன. இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: காசி வழக்கு: 5 நாள்கள் காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடி-க்கு நீதிமன்றம் அனுமதி!