ETV Bharat / bharat

மகன் இறப்பு செய்திகேட்டு அதிர்ச்சியில் உயிர்விட்ட தந்தை!

author img

By

Published : Oct 3, 2022, 4:06 PM IST

மகாராஷ்டிராவில் மகன் உயிரிழந்த செய்திகேட்டு, அதிர்ச்சியில் தந்தையும் உயிர் விட்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

maha
maha

பால்கர்: மகாராஷ்டிர மாநிலம், பால்கர் மாவட்டத்தில் உள்ள விரார் நகரில் மணீஷ் (35) என்பவர், நவராத்திரியையொட்டி கர்பா நடனம் ஆடிக்கொண்டிருந்தபோது, திடீரென மயங்கி விழுந்தார்.

அவரை அவரது தந்தை நராப்ஜி சோனிக்ரா(66) மருத்துவமனையில் சேர்த்தார். ஆனால், மணீஷ் ஏற்கெனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதைக்கேட்ட தந்தை நராப்ஜி சோனிக்ரா அதிர்ச்சியடைந்தார். பிறகு சில நிமிடங்களில் சுருண்டு விழுந்து அங்கேயே உயிரிழந்தார்.

இருவரது உடலும் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மகன் இறந்த அதிர்ச்சியில் தந்தையும் உயிர்விட்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: மனைவியின் அன்பான சவால், தோளில் சுமந்து மலையேறிய கணவன்

பால்கர்: மகாராஷ்டிர மாநிலம், பால்கர் மாவட்டத்தில் உள்ள விரார் நகரில் மணீஷ் (35) என்பவர், நவராத்திரியையொட்டி கர்பா நடனம் ஆடிக்கொண்டிருந்தபோது, திடீரென மயங்கி விழுந்தார்.

அவரை அவரது தந்தை நராப்ஜி சோனிக்ரா(66) மருத்துவமனையில் சேர்த்தார். ஆனால், மணீஷ் ஏற்கெனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதைக்கேட்ட தந்தை நராப்ஜி சோனிக்ரா அதிர்ச்சியடைந்தார். பிறகு சில நிமிடங்களில் சுருண்டு விழுந்து அங்கேயே உயிரிழந்தார்.

இருவரது உடலும் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மகன் இறந்த அதிர்ச்சியில் தந்தையும் உயிர்விட்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: மனைவியின் அன்பான சவால், தோளில் சுமந்து மலையேறிய கணவன்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.