ETV Bharat / bharat

யோகாத்தான்-2023 கின்னஸ் சாதனை நிகழ்ச்சி: 4 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்பு!

author img

By

Published : Jan 16, 2023, 3:46 PM IST

கடந்த எட்டு மாதங்களாக, மாநில இளைஞர் சேவை மற்றும் விளையாட்டுத் துறை யோகாசனத்தின் சிறப்பு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்ய கடுமையாக உழைத்து, மாநிலம் முழுவதும் ஒரே நேரத்தில் 4,05,255 பேர் யோகாசனம் செய்து புதிய கின்னஸ் சாதனை படைத்துள்ளதாக கர்நாடக விளையாட்டுத்துறை அமைச்சர் கே.சி.நாராயண கவுடா தெரிவித்துள்ளார்.

யோகாத்தான்-2023 கின்னஸ் சாதனை நிகழ்ச்சி
யோகாத்தான்-2023 கின்னஸ் சாதனை நிகழ்ச்சி

தார்வாட்(கர்நாடகா): 26-வது தேசிய இளைஞர் விழாவின் ஒரு பகுதியாக யோகாத்தான் நடத்த முடிவு செய்து, மாநிலம் முழுவதும் இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டது. யோகாதானில் பங்கேற்க மாநிலத்தைச் சேர்ந்த 14 லட்சம் யோகிகளும்,யோகா ஆர்வலர்களும் தங்கள் பெயர்களைப் பதிவு செய்திருந்தனர் என கர்நாடக அமைச்சர் கே.சி.நாராயண கவுடா தெரிவித்தார்.

எந்ததெந்த இடத்தில் எத்தனை பேர்?: ’தார்வாட் வேளாண் பல்கலைக்கழக மைதானத்தில் 5904 பேர், கர்நாடக பல்கலைக்கழக மைதானத்தில் 3405 பேர், ஆர்என் ஷெட்டி மாவட்ட மைதானத்தில் 4769 பேர், வித்யாகிரி ஜேஎஸ்எஸ் கல்லூரி மைதானத்தில் 3769 பேர், ஹூப்ளி ரயில்வே கிரிக்கெட் மைதானத்தில் 6076 பேர் என மொத்தம் 5 இடங்களில் 23,923 பேர் என தார்வாட் மாவட்டத்தில் ஒரே நேரத்தில் அனைவரும் யோகா செய்தனர்.

பாகல்கோட் மாவட்டத்தில் உள்ள பிவிவிஎஸ் கல்லூரி மைதானத்தில் 16,632 பேரும், பெல்காமில் உள்ள ராணுவ கோல்ஃப் மைதானத்தில் 41,914 பேரும், சுவர்ணா சவுதாவுக்கு முன்புறம் 17,712 பேரும், பல்லாரி விமான நிலைய மைதானத்தில் 11,847 பேரும், பெங்களூரு, செயின்ட் கல்லூரியில் 4798 பேரும், காந்திரவா பல்கலைக்கழகத்தில் உள்ள ஸ்டேடியத்தில் 8,446 பேரும், சாமராஜநகர் மாவட்ட மைதானத்தில் 6,843 பேரும், சிக்கபள்ளாப்பூர் எஸ்ஜேசிஐடி கல்லூரி மைதானத்தில் 9256 பேரும் யோகாசனம் செய்தனர்.

சித்ரதுர்கா மாவட்ட ஸ்டேடியத்தில் 8,675 பேரும், தட்சிண கன்னடா மாவட்டத்தில் உள்ள மூட்பித்யா ஆல்வாஸ் கல்லூரி மைதானத்தில் 31,986 பேரும், தாவாங்கேரே மாவட்ட ஸ்டேடியத்தில் 11,808 பேரும், கடக் ஏஎஸ்எஸ் கலைக்கல்லூரி மைதானத்தில் 7842 பேரும், ஹாவேரி மாவட்டக் கல்லூரி மைதானத்தில் 6,544 பேரும், கலா போலீஸ் மைதானத்தில் 16,064 பேரும், கோலார் ஸ்ரீஎம்வி ஸ்டேடியத்தில் 16,451 பேரும், கொப்பல் மாவட்ட ஸ்டேடியத்தில் 9781 பேரும், மாண்டியா பிஇஎஸ் கிரிக்கெட் மைதானத்தில் 8,892 பேரும் யோகாசனம் செய்தனர்.

யோகாஹப் என்று அழைக்கப்படும் மைசூர் கோல்ஃப் மைதானத்தில் 41,042 பேரும், ராய்ச்சூர் மாவட்ட மைதானத்தில் 6,842 பேரும், ராமநகரா மாவட்ட விளையாட்டரங்கில் 5,654 பேரும், ஷிமோகா நேரு ஸ்டேடியத்தில் 11,743 பேரும், தும்கூர் மாவட்ட ஸ்டேடியத்தில் 10,083 பேரும், தும்கூரு மாவட்ட ஸ்டேடியத்தில் 10,083 பேரும் யோகா செய்தனர். உத்தர கன்னடா மாவட்டத்தில் 3,594 பேரும், விஜயபுரா சைனிக் பள்ளி மைதானத்தில் 36,644 பேரும், யாதகிரியோ மாவட்ட மைதானத்தில் 9,234 பேரும் கலந்து கொண்டனர்.

கின்னஸ் சாதனை: மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் 33 இடங்களில் மொத்தம் 4,05,255 பேர் யோகாசனம் செய்தனர். 2018ஆம் ஆண்டில், ராஜஸ்தானின் பல்வேறு இடங்களில் 1,00,984 பேர் ஒரே நேரத்தில் யோகா செய்து கின்னஸ் சாதனைப் படைத்துள்ளனர். இதற்கு முன், 2017ல், கர்நாடக மாநிலத்தின் மைசூர் நகரில், 55,524 பேர் ஒரே நேரத்தில் யோகா செய்து கின்னஸ் சாதனை படைத்தோம்.

ஆனால், தற்போது கர்நாடக மாநிலம் முழுவதும் 33 இடங்களில் ஒரே நேரத்தில் 4,05,255 பேர் யோகா செய்து, முந்தைய சாதனைகளை எல்லாம் முறியடித்து புதிய கின்னஸ் சாதனை படைத்துள்ளனர். ராஜஸ்தானில் யோகா செய்தவர்களை விட 3 மடங்கு அதிகமானோர் ஒரே நேரத்தில் ஒழுக்கமாகவும், அமைதியாகவும், விதிகளின் படியும் யோகா செய்ததாக’ கர்நாடக அமைச்சர் டாக்டர் கே.சி.நாராயண கவுடா தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: தமிழறிஞர்களுக்கு விருதுகள் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்

தார்வாட்(கர்நாடகா): 26-வது தேசிய இளைஞர் விழாவின் ஒரு பகுதியாக யோகாத்தான் நடத்த முடிவு செய்து, மாநிலம் முழுவதும் இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டது. யோகாதானில் பங்கேற்க மாநிலத்தைச் சேர்ந்த 14 லட்சம் யோகிகளும்,யோகா ஆர்வலர்களும் தங்கள் பெயர்களைப் பதிவு செய்திருந்தனர் என கர்நாடக அமைச்சர் கே.சி.நாராயண கவுடா தெரிவித்தார்.

எந்ததெந்த இடத்தில் எத்தனை பேர்?: ’தார்வாட் வேளாண் பல்கலைக்கழக மைதானத்தில் 5904 பேர், கர்நாடக பல்கலைக்கழக மைதானத்தில் 3405 பேர், ஆர்என் ஷெட்டி மாவட்ட மைதானத்தில் 4769 பேர், வித்யாகிரி ஜேஎஸ்எஸ் கல்லூரி மைதானத்தில் 3769 பேர், ஹூப்ளி ரயில்வே கிரிக்கெட் மைதானத்தில் 6076 பேர் என மொத்தம் 5 இடங்களில் 23,923 பேர் என தார்வாட் மாவட்டத்தில் ஒரே நேரத்தில் அனைவரும் யோகா செய்தனர்.

பாகல்கோட் மாவட்டத்தில் உள்ள பிவிவிஎஸ் கல்லூரி மைதானத்தில் 16,632 பேரும், பெல்காமில் உள்ள ராணுவ கோல்ஃப் மைதானத்தில் 41,914 பேரும், சுவர்ணா சவுதாவுக்கு முன்புறம் 17,712 பேரும், பல்லாரி விமான நிலைய மைதானத்தில் 11,847 பேரும், பெங்களூரு, செயின்ட் கல்லூரியில் 4798 பேரும், காந்திரவா பல்கலைக்கழகத்தில் உள்ள ஸ்டேடியத்தில் 8,446 பேரும், சாமராஜநகர் மாவட்ட மைதானத்தில் 6,843 பேரும், சிக்கபள்ளாப்பூர் எஸ்ஜேசிஐடி கல்லூரி மைதானத்தில் 9256 பேரும் யோகாசனம் செய்தனர்.

சித்ரதுர்கா மாவட்ட ஸ்டேடியத்தில் 8,675 பேரும், தட்சிண கன்னடா மாவட்டத்தில் உள்ள மூட்பித்யா ஆல்வாஸ் கல்லூரி மைதானத்தில் 31,986 பேரும், தாவாங்கேரே மாவட்ட ஸ்டேடியத்தில் 11,808 பேரும், கடக் ஏஎஸ்எஸ் கலைக்கல்லூரி மைதானத்தில் 7842 பேரும், ஹாவேரி மாவட்டக் கல்லூரி மைதானத்தில் 6,544 பேரும், கலா போலீஸ் மைதானத்தில் 16,064 பேரும், கோலார் ஸ்ரீஎம்வி ஸ்டேடியத்தில் 16,451 பேரும், கொப்பல் மாவட்ட ஸ்டேடியத்தில் 9781 பேரும், மாண்டியா பிஇஎஸ் கிரிக்கெட் மைதானத்தில் 8,892 பேரும் யோகாசனம் செய்தனர்.

யோகாஹப் என்று அழைக்கப்படும் மைசூர் கோல்ஃப் மைதானத்தில் 41,042 பேரும், ராய்ச்சூர் மாவட்ட மைதானத்தில் 6,842 பேரும், ராமநகரா மாவட்ட விளையாட்டரங்கில் 5,654 பேரும், ஷிமோகா நேரு ஸ்டேடியத்தில் 11,743 பேரும், தும்கூர் மாவட்ட ஸ்டேடியத்தில் 10,083 பேரும், தும்கூரு மாவட்ட ஸ்டேடியத்தில் 10,083 பேரும் யோகா செய்தனர். உத்தர கன்னடா மாவட்டத்தில் 3,594 பேரும், விஜயபுரா சைனிக் பள்ளி மைதானத்தில் 36,644 பேரும், யாதகிரியோ மாவட்ட மைதானத்தில் 9,234 பேரும் கலந்து கொண்டனர்.

கின்னஸ் சாதனை: மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் 33 இடங்களில் மொத்தம் 4,05,255 பேர் யோகாசனம் செய்தனர். 2018ஆம் ஆண்டில், ராஜஸ்தானின் பல்வேறு இடங்களில் 1,00,984 பேர் ஒரே நேரத்தில் யோகா செய்து கின்னஸ் சாதனைப் படைத்துள்ளனர். இதற்கு முன், 2017ல், கர்நாடக மாநிலத்தின் மைசூர் நகரில், 55,524 பேர் ஒரே நேரத்தில் யோகா செய்து கின்னஸ் சாதனை படைத்தோம்.

ஆனால், தற்போது கர்நாடக மாநிலம் முழுவதும் 33 இடங்களில் ஒரே நேரத்தில் 4,05,255 பேர் யோகா செய்து, முந்தைய சாதனைகளை எல்லாம் முறியடித்து புதிய கின்னஸ் சாதனை படைத்துள்ளனர். ராஜஸ்தானில் யோகா செய்தவர்களை விட 3 மடங்கு அதிகமானோர் ஒரே நேரத்தில் ஒழுக்கமாகவும், அமைதியாகவும், விதிகளின் படியும் யோகா செய்ததாக’ கர்நாடக அமைச்சர் டாக்டர் கே.சி.நாராயண கவுடா தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: தமிழறிஞர்களுக்கு விருதுகள் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.