ETV Bharat / bharat

திருமணமான அடுத்த நாளில் கிணற்றில் பிணமாக கண்டெடுக்கப்பட்ட பெண்

author img

By

Published : Feb 15, 2023, 8:22 PM IST

பிகார் மாநிலத்தில் திருமணமான அடுத்த நாளிலேயே இளம்பெண் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருமணமான அடுத்த நாளில் கிணற்றில் பிணமாக கண்டெடுக்கப்பட்ட பெண்
திருமணமான அடுத்த நாளில் கிணற்றில் பிணமாக கண்டெடுக்கப்பட்ட பெண்

ஜமுய்: பிகார் மாநிலம் ஜமுய் மாவட்டத்தில் உள்ள மௌரா கிராமத்தில் சல்மா என்னும் இளம்பெண் திருமணமான அடுத்த நாளிலேயே கிணற்றில் பிணமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார். இந்த உயிரிழப்புக்கு அவரது கணவரும், அவருடைய குடும்பத்தாருமே முக்கிய காரணம் என்று பெண்ணின் வீட்டார் போலீசாரிடம் புகார் அளித்துள்ளனர்.

மௌரா கிராமத்தை சல்மா அன்சாரி என்ற பெண்ணுக்கும், கட்டூன் கிராமத்தைச் சேர்ந்த சனாவுல் அன்சாரி என்பவருக்கும் நேற்று (பிப்.13) திருமணம் நடந்தது. அடுத்த நாள் காலையில் கட்டூன் கிராமத்தில் உள்ள கிணற்றில் சல்மா பிணமாக கிடந்துள்ளார். இதைக்கண்ட கிராம மக்கள் அவரது கணவன் வீட்டாருக்கும், பெண்ணின் வீட்டாருக்கும் தகவல் கொடுத்துள்ளனர்.

அதோடு போலீசாருக்கும் தகவல் சென்றுள்ளது. அதனடிப்படையில் சம்பவயிடத்துக்கு விரைந்த போலீசார் பெண்ணின் உடலை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனிடையே பெண்ணின் வீட்டார், இது தற்கொலை கிடையாது, கொலையாகும். சல்மாவின் கணவரும், அவருடைய குடும்பத்தாரும் சேர்ந்து கொலை செய்துவிட்டு உடலை கிணற்றில் வீசியுள்ளனர் என்று குற்றம்சாட்டினர்.

இதுகுறித்து போலீசாரிடமும் புகார் அளித்துள்ளனர். அதோடு, திருமணமான முதல் நாளிலேயே சனாவுல் அன்சாரி குடும்பத்தார் வரதட்சணையாக ரூ.1 லட்சம் வாங்கிவிட்டனர். அதன்பின் மேலும் பணம் கேட்டனர். பிறகு தருவதாக கூறியிருந்தோம். இதனால் அன்றிரவே கணவன் மனைவி இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

இருப்பினும் சமாதானம் பேசி இருவரையும் முதலிரவுக்கு அனுப்பி வைத்தோம். காலையில் சல்மா உயிரிழந்துள்ளார் என்றும் தெரிவித்தனர். இதுகுறித்து போலீசார் தரப்பில், இந்த திருமணம் காதல் திருமணமாகும். பெண்ணின் வீட்டார் குற்றம்சாட்டியது போல கொலையாக இருந்தால் உடற்கூராய்வின் முடிவில் தெரியவரும். இந்த அறிக்கைக்கு பின்பே உண்மை காரணம் தெரியும் என்று தெரிவித்தனர்.

இதையும் படிங்க: ஃபிரீசரில் இளம்பெண்ணின் சடலம் - தாபா உரிமையாளர் கைது

ஜமுய்: பிகார் மாநிலம் ஜமுய் மாவட்டத்தில் உள்ள மௌரா கிராமத்தில் சல்மா என்னும் இளம்பெண் திருமணமான அடுத்த நாளிலேயே கிணற்றில் பிணமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார். இந்த உயிரிழப்புக்கு அவரது கணவரும், அவருடைய குடும்பத்தாருமே முக்கிய காரணம் என்று பெண்ணின் வீட்டார் போலீசாரிடம் புகார் அளித்துள்ளனர்.

மௌரா கிராமத்தை சல்மா அன்சாரி என்ற பெண்ணுக்கும், கட்டூன் கிராமத்தைச் சேர்ந்த சனாவுல் அன்சாரி என்பவருக்கும் நேற்று (பிப்.13) திருமணம் நடந்தது. அடுத்த நாள் காலையில் கட்டூன் கிராமத்தில் உள்ள கிணற்றில் சல்மா பிணமாக கிடந்துள்ளார். இதைக்கண்ட கிராம மக்கள் அவரது கணவன் வீட்டாருக்கும், பெண்ணின் வீட்டாருக்கும் தகவல் கொடுத்துள்ளனர்.

அதோடு போலீசாருக்கும் தகவல் சென்றுள்ளது. அதனடிப்படையில் சம்பவயிடத்துக்கு விரைந்த போலீசார் பெண்ணின் உடலை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனிடையே பெண்ணின் வீட்டார், இது தற்கொலை கிடையாது, கொலையாகும். சல்மாவின் கணவரும், அவருடைய குடும்பத்தாரும் சேர்ந்து கொலை செய்துவிட்டு உடலை கிணற்றில் வீசியுள்ளனர் என்று குற்றம்சாட்டினர்.

இதுகுறித்து போலீசாரிடமும் புகார் அளித்துள்ளனர். அதோடு, திருமணமான முதல் நாளிலேயே சனாவுல் அன்சாரி குடும்பத்தார் வரதட்சணையாக ரூ.1 லட்சம் வாங்கிவிட்டனர். அதன்பின் மேலும் பணம் கேட்டனர். பிறகு தருவதாக கூறியிருந்தோம். இதனால் அன்றிரவே கணவன் மனைவி இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

இருப்பினும் சமாதானம் பேசி இருவரையும் முதலிரவுக்கு அனுப்பி வைத்தோம். காலையில் சல்மா உயிரிழந்துள்ளார் என்றும் தெரிவித்தனர். இதுகுறித்து போலீசார் தரப்பில், இந்த திருமணம் காதல் திருமணமாகும். பெண்ணின் வீட்டார் குற்றம்சாட்டியது போல கொலையாக இருந்தால் உடற்கூராய்வின் முடிவில் தெரியவரும். இந்த அறிக்கைக்கு பின்பே உண்மை காரணம் தெரியும் என்று தெரிவித்தனர்.

இதையும் படிங்க: ஃபிரீசரில் இளம்பெண்ணின் சடலம் - தாபா உரிமையாளர் கைது

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.