ETV Bharat / bharat

விலங்குகள் பக்தர்களுக்கு ஆசி வழங்கும் விநோதமான கோயில்கள்

author img

By

Published : Aug 22, 2022, 9:34 AM IST

முதலை, கரடி போன்ற விலங்குகள் மனிதர்களுக்கு ஆபத்தை தரக்கூடியவை என்று நாம் அறிந்திருப்போம். அதே மிருகங்கள் சாதுவாக காட்சியளிக்க மனிதர்கள். அதை வணங்கி தங்கள் குறைகளை கூறி வேண்டுகின்றனர் என்றால் நம்பமுடிகிறதா. அதுபோன்ற ஆச்சரியமான கோயில்களை இந்த தொகுப்பில் காணலாம்.

விலங்குகள் பக்தர்களுக்கு ஆசி வழங்கும் விநோதமான கோயில்கள்
விலங்குகள் பக்தர்களுக்கு ஆசி வழங்கும் விநோதமான கோயில்கள்

இந்திய துணை கண்டத்தின் பல்வேறு பகுதிகளில் வசிக்கும் மக்கள், விலங்குகள் ரூபம் கொண்ட கடவுள்களையும், பல இடங்களில் விலங்குகளையே கடவுளாகவும் வழிபட்டு வருகின்றனர். பெரும்பாலான கடவுள்கள் விலங்குகளையே தங்கள் வாகனங்களாக கொண்டிருக்கின்றன. அத்தகைய உயிரினங்களே கடவுள்களுக்கு பலியிடப்படும் முரண்பாடும் நிலவத்தான் செய்கிறது.

நாம் அஞ்சி ஓடும், நெருங்க விரும்பாத உயிரினங்களை சில கோயில்களில் பக்தர்கள் கொண்டாடுகின்றனர். இக்கோயில்களுக்குச் சென்றால், அங்கு முதலையை வேட்டையாடும் உயிரினமாக இல்லாமல், பக்தர்களுக்கு எந்தத் தீங்கும் செய்யாத நட்பான உயிரினமாக காணலாம். எலிகளை புனிதமானவையாக கருதி எலி குடித்த பாலை பக்தர்களுக்கு பிரசாதமாக தருவதை காணலாம்.

கேரளாவின் காசர்கோடில் உள்ள அனந்தபுரா ஏரி கோயிலில் அற்புதமான மனித-விலங்கு உறவைக் காணலாம். அந்த கோவிலில் உள்ள குளத்தில் வாழும் முதலை பூசாரி அழைத்தால் அமைதியாக 'அரிசி நிவேதம்' அல்லது பிரசாதம் சாப்பிடுகிறது. 75 வயது இருக்கும் என்று கருதப்படும் இந்த சாதுவான சைவ முதலையின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

கோயிலின் சன்னதியை மூடிய பிறகே ’பாபியா’ என்ற முதலை உள்ளே நுழைவதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். இருப்பினும், முதலையின் புகைப்படங்கள் வெளியாகும் வரை பக்தர்கள் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. அவர்கள் அதன் தோற்றத்தை தெய்வீகமாகக் கருதுகின்றனர் மற்றும் பாபியா என்ற முதலையின் சாட்சியத்தால் ஆசீர்வாதங்கள் மற்றும் அதிர்ஷ்டம் கிடைக்கும் என்று நம்பப்படுவதால், அது தோன்றும்போது பூசாரிகள் பிரார்த்தனை செய்கிறார்கள்.

இருப்பினும், கோவில்களில் விலங்குகள் மீதான இத்தகைய தனித்துவமான அன்பும் மரியாதையும் முதலையுடன் மட்டும் நின்றுவிடவில்லை. ராஜஸ்தானின் பிகானரின் தேஷ்நோக் நகரில் அமைந்துள்ள கர்னி மாதா கோயிலில், எலிகள் நோய் பரப்பும் உயிரினமாக கருதப்படாமல் போற்றப்படுகிறது. "கபாஸ்" என்று அழைக்கப்படும், சுமார் 20,000 கருப்பு எலிகள் கோயிலில் வசிக்கின்றன, பார்வையாளர்கள், பெரும்பாலும் அதிக தூரம் பயணித்து, தங்கள் வேண்டுதல்கள் நிறைவேற்றுவதற்காக இங்கு வந்து பிரார்த்தனை செய்கிறார்கள்.

இது மட்டுமின்றி, மனிதனின் உற்ற நண்பனான நாய் க்கு கர்நாடகாவின் சன்னபட்னா நகரில் உள்ள ஒரு கோவிலில் இடம் கிடைத்துள்ளது. அங்கு உள்ளூர்வாசிகள் நாய்களுக்கு கோவில் அமைத்து அங்கு இரண்டு நாய்களின் சிலைகளை வைத்து வழிபடுகின்றனர். சிலைகளில் ஒன்று ஆக்ரோஷமான தோரணையுடனும் மற்றொன்று அமைதியாகவும் காட்சியளிக்கிறது.

சத்தீஸ்கரில் உள்ள மற்றொரு கோவிலில், ஒவ்வொரு நாளும் ஆரத்தியின் போது சில கரடிகள் வளாகத்திற்கு வந்து பிரசாதத்தை சாப்பிடும் விசித்திரமான நிகழ்வு நடக்கிறது. பின்னர் இந்த கரடிகள் கோவிலை ஒன்பது முறை வலம் வந்து பக்தர்களுக்கு எந்த வித அச்சுறுத்தலும் ஏற்படுத்தாமல் அமைதியாக வெளியே சென்று விடுகிறது.

மதுரை மாவட்டத்தில் அழகர் கோவிலுக்கு பக்தர்கள் காளை கன்றுகள் மற்றும் பசுக்களை காணிக்கை செலுத்தும் தனித்துவமான மத பாரம்பரியத்தின் காரணமாக சேவல் மற்றும் காளைகள் அமைதியான தஞ்சம் அடைந்தன. பசு மடங்களில் பசுக்கள் பராமரிக்கப்படும் போது, ​​பக்தர்கள் உணவு வழங்குவதால், காளைகள் கோவில் வளாகத்திற்குள் சுற்றித் திரிகின்றன.

இதுகுறித்து விலங்குகள் ஆர்வலர் 'திருநகர்ப் பக்கம்' குழுவை சேர்ந்த விஷ்வா கூறுகையில், 'வசதி படைத்த பக்தர்கள் பசுமாடுகளை கோ தானமாக வழங்குவர். இவற்றை மடம் போன்று அமைத்து கோவில் நிர்வாகங்கள் பராமரித்து வருகின்றன. ஆனால் காளைமாடுகளைப் பொறுத்தவரை அந்தக் கோவிலைச் சுற்றியுள்ள பகுதிகளில் அவை சுற்றித் திரியும்.

கோவிலுக்கு வருகின்ற பக்தர்கள் அந்தக் காளைகளுக்கு உணவு வழங்குகின்றனர். ஆனால் எக்காரணத்தை முன்னிட்டும் அந்தக் கோவில் காளைகளை யாரும் துன்புறுத்துவதில்லை. தெய்வ குத்தமாகக் கருதுவதும் உண்டு' என்கிறார்.

கோவில்களுக்கு நேர்ந்து விடப்படுகின்ற காளைமாடுகள் அந்த ஊரைச்சுற்றி சர்வ சுதந்திரமாகத் திரிவது இயல்பான காட்சி. குறிப்பாக கோவில் மாடுகள் ஏதேனும் தோட்டத்திற்குள்ளோ வயற்காட்டிலோ புகுந்து இரை தேடினால், அவற்றை உள்ளூர் மக்கள் விரட்டுவதில்லை. காரணம், தெய்வமே தங்கள் நிலங்களுக்குள் வந்து உணவு உண்பதாகக் கருதுகின்றனர்.

மேலும் கோவில் காளைகள் உள்ளூர் பசுமாடுகளுடன் இணை சேரும் பொலிகாளைகளாகவும் திகழ்கின்றன. இந்த அடிப்படையில்தான், பொறுப்பற்று திரியும் ஆண் பிள்ளைகளைத் திட்டும்போது, 'அவுத்து விட்ட மாடு மாதிரி திரியுறான் பாரு..' என்ற வழக்குச் சொல் இப்போதும் புழக்கத்தில் உள்ளது.

மதுரை மாவட்டம் தேனூரைச் சேர்ந்த சமூக ஆர்வலர் கார்த்திகைக்குமரன் கூறுகையில், 'சமயநல்லூர் அருகேயுள்ள கட்டப்புளி கருப்பணசாமி கோவிலில் சேவல்களை பக்தர்கள் நேர்ந்துவிடுவது வழக்கம். இந்த நேர்த்திக்காக பக்தர்களால் கொண்டு வரப்படுகின்ற சேவல்கள் அனைத்தும் கால்கள் கட்டப்பட்டு கொண்டு வரப்படும். கோவில் பூசாரி உரிய வழிபாடுகளைச் செய்த பிறகு அதன் கால்கட்டுகளை அவிழ்த்து பறக்கவிட்டு விடுவார். பிறகு அந்த சேவல்கள் அந்த வளாகத்திலேயே சுதந்திரமாகத் திரியும்.

சில காலங்கள் முன்பு வரை சிவராத்திரிக்கு முதல்நாள் அந்த சேவல்களை ஏலம் விட்டார்கள். தற்போது அந்த நடைமுறையும் இல்லை. ஆகையால் அந்த சேவல்கள் வாழ்ந்து அவை இயற்கையாக இறக்கும் வரை அந்தக் கோவில் வளாகத்திலேயே திரியும்' என்றார்.

மதுரை மாவட்டத்தில் உள்ள ஒரு சில கருப்பசாமி மற்றும் முனியாண்டி கோவில்களில் ஆடுகளை நேர்த்திக்கடனாக விட்டுச் செல்வதுண்டு. ஆனால், அவை அனைத்தும் ஆண்டின் குறிப்பிட்ட ஒரு நாளில் மொத்தமாக அறுக்கப்பட்டு கோவிலிலேயே கறி விருந்து படைக்கப்படுவதும் நடைமுறையாக உள்ளது.

இதையும் படிங்க: அயோத்தி தீப உத்சவ்வில் லட்சக்கணக்கான தீபம் ஏற்றி கின்னஸ் சாதனைக்கு ஏற்பாடு

இந்திய துணை கண்டத்தின் பல்வேறு பகுதிகளில் வசிக்கும் மக்கள், விலங்குகள் ரூபம் கொண்ட கடவுள்களையும், பல இடங்களில் விலங்குகளையே கடவுளாகவும் வழிபட்டு வருகின்றனர். பெரும்பாலான கடவுள்கள் விலங்குகளையே தங்கள் வாகனங்களாக கொண்டிருக்கின்றன. அத்தகைய உயிரினங்களே கடவுள்களுக்கு பலியிடப்படும் முரண்பாடும் நிலவத்தான் செய்கிறது.

நாம் அஞ்சி ஓடும், நெருங்க விரும்பாத உயிரினங்களை சில கோயில்களில் பக்தர்கள் கொண்டாடுகின்றனர். இக்கோயில்களுக்குச் சென்றால், அங்கு முதலையை வேட்டையாடும் உயிரினமாக இல்லாமல், பக்தர்களுக்கு எந்தத் தீங்கும் செய்யாத நட்பான உயிரினமாக காணலாம். எலிகளை புனிதமானவையாக கருதி எலி குடித்த பாலை பக்தர்களுக்கு பிரசாதமாக தருவதை காணலாம்.

கேரளாவின் காசர்கோடில் உள்ள அனந்தபுரா ஏரி கோயிலில் அற்புதமான மனித-விலங்கு உறவைக் காணலாம். அந்த கோவிலில் உள்ள குளத்தில் வாழும் முதலை பூசாரி அழைத்தால் அமைதியாக 'அரிசி நிவேதம்' அல்லது பிரசாதம் சாப்பிடுகிறது. 75 வயது இருக்கும் என்று கருதப்படும் இந்த சாதுவான சைவ முதலையின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

கோயிலின் சன்னதியை மூடிய பிறகே ’பாபியா’ என்ற முதலை உள்ளே நுழைவதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். இருப்பினும், முதலையின் புகைப்படங்கள் வெளியாகும் வரை பக்தர்கள் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. அவர்கள் அதன் தோற்றத்தை தெய்வீகமாகக் கருதுகின்றனர் மற்றும் பாபியா என்ற முதலையின் சாட்சியத்தால் ஆசீர்வாதங்கள் மற்றும் அதிர்ஷ்டம் கிடைக்கும் என்று நம்பப்படுவதால், அது தோன்றும்போது பூசாரிகள் பிரார்த்தனை செய்கிறார்கள்.

இருப்பினும், கோவில்களில் விலங்குகள் மீதான இத்தகைய தனித்துவமான அன்பும் மரியாதையும் முதலையுடன் மட்டும் நின்றுவிடவில்லை. ராஜஸ்தானின் பிகானரின் தேஷ்நோக் நகரில் அமைந்துள்ள கர்னி மாதா கோயிலில், எலிகள் நோய் பரப்பும் உயிரினமாக கருதப்படாமல் போற்றப்படுகிறது. "கபாஸ்" என்று அழைக்கப்படும், சுமார் 20,000 கருப்பு எலிகள் கோயிலில் வசிக்கின்றன, பார்வையாளர்கள், பெரும்பாலும் அதிக தூரம் பயணித்து, தங்கள் வேண்டுதல்கள் நிறைவேற்றுவதற்காக இங்கு வந்து பிரார்த்தனை செய்கிறார்கள்.

இது மட்டுமின்றி, மனிதனின் உற்ற நண்பனான நாய் க்கு கர்நாடகாவின் சன்னபட்னா நகரில் உள்ள ஒரு கோவிலில் இடம் கிடைத்துள்ளது. அங்கு உள்ளூர்வாசிகள் நாய்களுக்கு கோவில் அமைத்து அங்கு இரண்டு நாய்களின் சிலைகளை வைத்து வழிபடுகின்றனர். சிலைகளில் ஒன்று ஆக்ரோஷமான தோரணையுடனும் மற்றொன்று அமைதியாகவும் காட்சியளிக்கிறது.

சத்தீஸ்கரில் உள்ள மற்றொரு கோவிலில், ஒவ்வொரு நாளும் ஆரத்தியின் போது சில கரடிகள் வளாகத்திற்கு வந்து பிரசாதத்தை சாப்பிடும் விசித்திரமான நிகழ்வு நடக்கிறது. பின்னர் இந்த கரடிகள் கோவிலை ஒன்பது முறை வலம் வந்து பக்தர்களுக்கு எந்த வித அச்சுறுத்தலும் ஏற்படுத்தாமல் அமைதியாக வெளியே சென்று விடுகிறது.

மதுரை மாவட்டத்தில் அழகர் கோவிலுக்கு பக்தர்கள் காளை கன்றுகள் மற்றும் பசுக்களை காணிக்கை செலுத்தும் தனித்துவமான மத பாரம்பரியத்தின் காரணமாக சேவல் மற்றும் காளைகள் அமைதியான தஞ்சம் அடைந்தன. பசு மடங்களில் பசுக்கள் பராமரிக்கப்படும் போது, ​​பக்தர்கள் உணவு வழங்குவதால், காளைகள் கோவில் வளாகத்திற்குள் சுற்றித் திரிகின்றன.

இதுகுறித்து விலங்குகள் ஆர்வலர் 'திருநகர்ப் பக்கம்' குழுவை சேர்ந்த விஷ்வா கூறுகையில், 'வசதி படைத்த பக்தர்கள் பசுமாடுகளை கோ தானமாக வழங்குவர். இவற்றை மடம் போன்று அமைத்து கோவில் நிர்வாகங்கள் பராமரித்து வருகின்றன. ஆனால் காளைமாடுகளைப் பொறுத்தவரை அந்தக் கோவிலைச் சுற்றியுள்ள பகுதிகளில் அவை சுற்றித் திரியும்.

கோவிலுக்கு வருகின்ற பக்தர்கள் அந்தக் காளைகளுக்கு உணவு வழங்குகின்றனர். ஆனால் எக்காரணத்தை முன்னிட்டும் அந்தக் கோவில் காளைகளை யாரும் துன்புறுத்துவதில்லை. தெய்வ குத்தமாகக் கருதுவதும் உண்டு' என்கிறார்.

கோவில்களுக்கு நேர்ந்து விடப்படுகின்ற காளைமாடுகள் அந்த ஊரைச்சுற்றி சர்வ சுதந்திரமாகத் திரிவது இயல்பான காட்சி. குறிப்பாக கோவில் மாடுகள் ஏதேனும் தோட்டத்திற்குள்ளோ வயற்காட்டிலோ புகுந்து இரை தேடினால், அவற்றை உள்ளூர் மக்கள் விரட்டுவதில்லை. காரணம், தெய்வமே தங்கள் நிலங்களுக்குள் வந்து உணவு உண்பதாகக் கருதுகின்றனர்.

மேலும் கோவில் காளைகள் உள்ளூர் பசுமாடுகளுடன் இணை சேரும் பொலிகாளைகளாகவும் திகழ்கின்றன. இந்த அடிப்படையில்தான், பொறுப்பற்று திரியும் ஆண் பிள்ளைகளைத் திட்டும்போது, 'அவுத்து விட்ட மாடு மாதிரி திரியுறான் பாரு..' என்ற வழக்குச் சொல் இப்போதும் புழக்கத்தில் உள்ளது.

மதுரை மாவட்டம் தேனூரைச் சேர்ந்த சமூக ஆர்வலர் கார்த்திகைக்குமரன் கூறுகையில், 'சமயநல்லூர் அருகேயுள்ள கட்டப்புளி கருப்பணசாமி கோவிலில் சேவல்களை பக்தர்கள் நேர்ந்துவிடுவது வழக்கம். இந்த நேர்த்திக்காக பக்தர்களால் கொண்டு வரப்படுகின்ற சேவல்கள் அனைத்தும் கால்கள் கட்டப்பட்டு கொண்டு வரப்படும். கோவில் பூசாரி உரிய வழிபாடுகளைச் செய்த பிறகு அதன் கால்கட்டுகளை அவிழ்த்து பறக்கவிட்டு விடுவார். பிறகு அந்த சேவல்கள் அந்த வளாகத்திலேயே சுதந்திரமாகத் திரியும்.

சில காலங்கள் முன்பு வரை சிவராத்திரிக்கு முதல்நாள் அந்த சேவல்களை ஏலம் விட்டார்கள். தற்போது அந்த நடைமுறையும் இல்லை. ஆகையால் அந்த சேவல்கள் வாழ்ந்து அவை இயற்கையாக இறக்கும் வரை அந்தக் கோவில் வளாகத்திலேயே திரியும்' என்றார்.

மதுரை மாவட்டத்தில் உள்ள ஒரு சில கருப்பசாமி மற்றும் முனியாண்டி கோவில்களில் ஆடுகளை நேர்த்திக்கடனாக விட்டுச் செல்வதுண்டு. ஆனால், அவை அனைத்தும் ஆண்டின் குறிப்பிட்ட ஒரு நாளில் மொத்தமாக அறுக்கப்பட்டு கோவிலிலேயே கறி விருந்து படைக்கப்படுவதும் நடைமுறையாக உள்ளது.

இதையும் படிங்க: அயோத்தி தீப உத்சவ்வில் லட்சக்கணக்கான தீபம் ஏற்றி கின்னஸ் சாதனைக்கு ஏற்பாடு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.