ருத்ரபிரயாக் (உத்தரகாண்ட்): உத்தரகாண்ட் மாநிலத்தில் 'சார்தாம் யாத்திரை' மிகவும் பிரபலமானது. இந்த ஆண்டு ஏப்ரல் 22ஆம் தேதியுடன் இந்த யாத்திரை தொடங்கியது. இந்த யாத்திரையில், உத்தரகாண்டில் உள்ள நான்கு புனிதத் தலங்களான யமுனோத்ரி, கங்கோத்ரி, கேதார்நாத் மற்றும் பத்ரிநாத்துக்கு யாத்திரை செல்வார்கள்.
இந்த யாத்திரையை இந்துக்கள் மிகவும் முக்கியமாக கருதுகின்றனர். ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் இந்த யாத்திரையை மேற்கொள்கின்றனர். இந்த யாத்திரையை கால்நடையாகவும், குதிரை சவாரி மூலமாகவும் மேற்கொள்கின்றனர். இந்த ஆண்டு சார்தாம் யாத்திரைக்காக சுமார் 16 லட்சம் பேர் முன்பதிவு செய்துள்ளதாகத் தெரிகிறது.
இந்த நிலையில், உத்தரகாண்டில் நடைபெற்ற ஒரு சம்பவம் வலைதளத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. கேதார்நாத் கோயிலுக்குச் செல்லும் வழியில், யாத்திரக்குப் பயன்படுத்தப்படும் குதிரைக்கு இருவர் கஞ்சாவை புகைக்க வைக்க கட்டாயப்படுத்திக் கொண்டிருந்து உள்ளனர். இது தொடர்பாக சுற்றுலாப் பயணி ஒருவர் எடுத்த வீடியோ, தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பகிரப்பட்டு வருகிறது.
-
#Uttrakhand Some people are making a horse smoke weed forcefully at the trek of Kedarnath temple.@uttarakhandcops @DehradunPolice @RudraprayagPol @AshokKumar_IPS
— Himanshi Mehra 🔱 (@manshi_mehra_) June 23, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
should look into this matter and find the culprit behind thispic.twitter.com/yyX1BNMiLk
">#Uttrakhand Some people are making a horse smoke weed forcefully at the trek of Kedarnath temple.@uttarakhandcops @DehradunPolice @RudraprayagPol @AshokKumar_IPS
— Himanshi Mehra 🔱 (@manshi_mehra_) June 23, 2023
should look into this matter and find the culprit behind thispic.twitter.com/yyX1BNMiLk#Uttrakhand Some people are making a horse smoke weed forcefully at the trek of Kedarnath temple.@uttarakhandcops @DehradunPolice @RudraprayagPol @AshokKumar_IPS
— Himanshi Mehra 🔱 (@manshi_mehra_) June 23, 2023
should look into this matter and find the culprit behind thispic.twitter.com/yyX1BNMiLk
குதிரையை கஞ்சா புகைக்க இருவர் கட்டாயப்படுத்தும் அந்த வீடியோ வலைதளங்களில் வைரலானதை அடுத்து, உத்தரகாண்ட் போலீசார் நடவடிக்கையைத் தொடங்கி உள்ளனர். மேலும் இது குறித்து உத்தரகாண்ட் போலீசார் பதிவிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “குதிரையை கட்டாயப்படுத்தி புகை பிடிக்கச் செய்யும் வீடியோவில் உள்ளவர்கள் குறித்து விசாரித்து வருகிறோம். இது போன்ற சம்பவங்கள் குறித்து தெரிவிக்கவும், உடனடி நடவடிக்கைக்காகவும் 112 என்ற எண்ணை அழைக்கவும்” என பதிவிட்டு உள்ளனர்.