ETV Bharat / bharat

சிவசேனா யாருக்கு... ஏக்நாத் VS உத்தவ்... வழக்கை அரசியலமைப்பு அமர்விற்கு அனுப்பிய உச்ச நீதிமன்றம்

author img

By

Published : Aug 23, 2022, 6:44 PM IST

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான அமர்வு சிவசேனா கட்சியின் உரிமை குறித்த வழக்கின் மனு மீது எந்த உத்தரவும் பிறப்பிக்க வேண்டாம் என தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட்டது.

Etv Bharatசிவசேனா யாருக்கு? ஏக்நாத் VS உத்தவ்; வழக்கை அரசியலமைப்பு அமர்விற்கு அனுப்பிய உச்ச நீதிமன்றம்
Etv Bharatசிவசேனா யாருக்கு? ஏக்நாத் VS உத்தவ்; வழக்கை அரசியலமைப்பு அமர்விற்கு அனுப்பிய உச்ச நீதிமன்றம்

டெல்லி: மகாராஷ்டிர முன்னாள் முதலமைச்சர் உத்தவ் தாக்ரே மற்றும் தற்போதைய முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டேவிற்கும் இடையேயான அரசியல் சலசலப்பின் உச்சகட்டமாக இருதரப்பும் உச்ச நீதிமன்றத்தில் கட்சியின் உரிமை கோரி வழக்குத்தொடர்ந்தன. மகாராஷ்டிர முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே மற்றும் அவரின் ஆதரவு எம்.எல்.ஏக்கள் ஆகியோர் கட்சி விலகல், மற்றும் சிவசேனாவின் தலைமையின் தகுதி நீக்கம் தொடர்பான பல அரசியல் சட்ட கேள்விகளை எழுப்பி தாக்கல் செய்த மனுக்களை 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரிக்குமாறு உச்சநீதிமன்றம் இன்று(ஆகஸ்ட் 23) பரிந்துரை செய்தது.

தலைமை நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான அமர்வு, அரசியல் சாசன பெஞ்ச் முன் வரும் வியாழக்கிழமை இந்த மனுக்களை பட்டியலிட உத்தரவிட்டது. இதனையடுத்து உண்மையான சிவசேனா என்று கருதி கட்சியின் தேர்தல் சின்னத்தை வழங்க வேண்டும் என்ற ஷிண்டே தரப்பினரின் மனு மீது எந்த உத்தரவும் பிறப்பிக்கவேண்டாம் என்று தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட்டது.

"இந்த வழக்கை நாளை மறுநாள் அரசியலமைப்பு பெஞ்ச் முன் பட்டியலிடவும், தொடக்கத்தில் தேர்தல் ஆணையம் தொடர்பான சின்னம் குறித்து பெஞ்ச் முடிவு செய்யும்" என்று நீதிபதிகள் கிருஷ்ணா முராரி மற்றும் ஹிமா கோஹ்லி ஆகியோர் அடங்கிய அமர்வு கூறியது. இந்த அமர்வு மகாராஷ்டிராவில் மகா விகாஸ் அகாடி (எம்விஏ) கூட்டணி அரசாங்கத்தின் வீழ்ச்சிக்குக் காரணமான சமீபத்திய அரசியல் நெருக்கடி தொடர்பான நிலுவையில் உள்ள வழக்குகளை விசாரித்து வருகிறது.

இதையும் படிங்க:பில்கிஸ் பானோ வழக்கு... 11 பேர் விடுதலையை எதிர்த்த மனு பரிசீலனை...

டெல்லி: மகாராஷ்டிர முன்னாள் முதலமைச்சர் உத்தவ் தாக்ரே மற்றும் தற்போதைய முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டேவிற்கும் இடையேயான அரசியல் சலசலப்பின் உச்சகட்டமாக இருதரப்பும் உச்ச நீதிமன்றத்தில் கட்சியின் உரிமை கோரி வழக்குத்தொடர்ந்தன. மகாராஷ்டிர முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே மற்றும் அவரின் ஆதரவு எம்.எல்.ஏக்கள் ஆகியோர் கட்சி விலகல், மற்றும் சிவசேனாவின் தலைமையின் தகுதி நீக்கம் தொடர்பான பல அரசியல் சட்ட கேள்விகளை எழுப்பி தாக்கல் செய்த மனுக்களை 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரிக்குமாறு உச்சநீதிமன்றம் இன்று(ஆகஸ்ட் 23) பரிந்துரை செய்தது.

தலைமை நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான அமர்வு, அரசியல் சாசன பெஞ்ச் முன் வரும் வியாழக்கிழமை இந்த மனுக்களை பட்டியலிட உத்தரவிட்டது. இதனையடுத்து உண்மையான சிவசேனா என்று கருதி கட்சியின் தேர்தல் சின்னத்தை வழங்க வேண்டும் என்ற ஷிண்டே தரப்பினரின் மனு மீது எந்த உத்தரவும் பிறப்பிக்கவேண்டாம் என்று தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட்டது.

"இந்த வழக்கை நாளை மறுநாள் அரசியலமைப்பு பெஞ்ச் முன் பட்டியலிடவும், தொடக்கத்தில் தேர்தல் ஆணையம் தொடர்பான சின்னம் குறித்து பெஞ்ச் முடிவு செய்யும்" என்று நீதிபதிகள் கிருஷ்ணா முராரி மற்றும் ஹிமா கோஹ்லி ஆகியோர் அடங்கிய அமர்வு கூறியது. இந்த அமர்வு மகாராஷ்டிராவில் மகா விகாஸ் அகாடி (எம்விஏ) கூட்டணி அரசாங்கத்தின் வீழ்ச்சிக்குக் காரணமான சமீபத்திய அரசியல் நெருக்கடி தொடர்பான நிலுவையில் உள்ள வழக்குகளை விசாரித்து வருகிறது.

இதையும் படிங்க:பில்கிஸ் பானோ வழக்கு... 11 பேர் விடுதலையை எதிர்த்த மனு பரிசீலனை...

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.