ETV Bharat / bharat

ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகள் இருவர் கைது!

author img

By

Published : Aug 9, 2021, 8:55 PM IST

ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகள் இருவர் கைதுசெய்யப்பட்டனர்.

Two militants arrested in Jammu's Kishtwar district
Two militants arrested in Jammu's Kishtwar district

ஜம்மு : ஹிஸ்புல்-முஹாகிதீன் பயங்கரவாதிகள் இருவரை கைதுசெய்துள்ளதாக ஜம்மு காஷ்மீர் போலீசார் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து மாநில போலீசார் அளித்துள்ள தகவலில், “ஜம்மு காஷ்மீர் கிஷ்த்வார் மாவட்டத்தில் பயங்கரவாதிகள் சிலர் பதுங்கியிருப்பதாக உளவு தகவல் கிடைத்தது.

இந்தத் தகவலின் அடிப்படையில் அங்கு காவலர்கள் தீவிர சோதனை நடத்தினார்கள். அப்போது ஹிஸ்புல் முஹாகீதின் பயங்கரவாத இயக்கத்தைச் சேர்ந்த இரு இளைஞர்கள் யாஷிர் உசேன், உஸ்மான் காதிர் ஆகிய இருவர் கைது செய்யப்பட்டனர்.

அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டுவருகிறது. அவர்கள் பயங்கரவாத இயக்கத்துக்கு ஆள் சேர்க்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

அவர்களிடம் இது தொடர்பாக விசாரணை நடத்திவருகிறோம். இந்த விசாரணைக்கு பின்னர் பல்வேறு தகவல்கள் தெரியவரும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : பந்திபோரா தாக்குதல்: இரண்டு பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

ஜம்மு : ஹிஸ்புல்-முஹாகிதீன் பயங்கரவாதிகள் இருவரை கைதுசெய்துள்ளதாக ஜம்மு காஷ்மீர் போலீசார் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து மாநில போலீசார் அளித்துள்ள தகவலில், “ஜம்மு காஷ்மீர் கிஷ்த்வார் மாவட்டத்தில் பயங்கரவாதிகள் சிலர் பதுங்கியிருப்பதாக உளவு தகவல் கிடைத்தது.

இந்தத் தகவலின் அடிப்படையில் அங்கு காவலர்கள் தீவிர சோதனை நடத்தினார்கள். அப்போது ஹிஸ்புல் முஹாகீதின் பயங்கரவாத இயக்கத்தைச் சேர்ந்த இரு இளைஞர்கள் யாஷிர் உசேன், உஸ்மான் காதிர் ஆகிய இருவர் கைது செய்யப்பட்டனர்.

அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டுவருகிறது. அவர்கள் பயங்கரவாத இயக்கத்துக்கு ஆள் சேர்க்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

அவர்களிடம் இது தொடர்பாக விசாரணை நடத்திவருகிறோம். இந்த விசாரணைக்கு பின்னர் பல்வேறு தகவல்கள் தெரியவரும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : பந்திபோரா தாக்குதல்: இரண்டு பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.