ETV Bharat / bharat

திரிபுரா முதலமைச்சருக்கு கோவிட்-19 உறுதி

author img

By

Published : Apr 7, 2021, 3:24 PM IST

திரிபுரா மாநில முதலமைச்சர் தனக்கு கோவிட்-19 பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகக் கூறியுள்ளார்.

Biplab Kumar Deb
Biplab Kumar Deb

திரிபுரா முதலமைச்சர் பிப்லாப் குமார் தேப்க்கு கோவிட்-19 தொற்று உறுதியாகியுள்ளது. அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், தனக்கு கோவிட்-19 பாதிப்பு ஏற்பட்டுள்ளது. எனவே, மருத்துவர்களின் அறிவுறுத்தலின் பேரில் நான் வீட்டில் தனிமைபடுத்திக்கொண்டேன். எனவே, அனைவரும் கோவிட் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி பாதுகாப்பாக இருக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.

மேலும், தன்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் அனைவரும் விரைந்து பரிசோதனை செய்துகொள்ள வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். கடந்த டிசம்பர் மாதத்திற்குப்பின் திரிபுராவில் கோவிட்-19 பாதிப்பு குறைந்த நிலையில், கடந்த 15 நாள்களாக மீண்டும் தொற்று அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.

அந்த மாநிலத்தில் இதுவரை மொத்தம் 33 ஆயிரத்து 575 பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. 392 உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன.

இதையும் படிங்க: ஒரே நாளில் 1.15 லட்சம் பேருக்கு கரோனா: புதிய உச்சத்தைத் தொட்ட இந்தியா

திரிபுரா முதலமைச்சர் பிப்லாப் குமார் தேப்க்கு கோவிட்-19 தொற்று உறுதியாகியுள்ளது. அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், தனக்கு கோவிட்-19 பாதிப்பு ஏற்பட்டுள்ளது. எனவே, மருத்துவர்களின் அறிவுறுத்தலின் பேரில் நான் வீட்டில் தனிமைபடுத்திக்கொண்டேன். எனவே, அனைவரும் கோவிட் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி பாதுகாப்பாக இருக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.

மேலும், தன்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் அனைவரும் விரைந்து பரிசோதனை செய்துகொள்ள வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். கடந்த டிசம்பர் மாதத்திற்குப்பின் திரிபுராவில் கோவிட்-19 பாதிப்பு குறைந்த நிலையில், கடந்த 15 நாள்களாக மீண்டும் தொற்று அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.

அந்த மாநிலத்தில் இதுவரை மொத்தம் 33 ஆயிரத்து 575 பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. 392 உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன.

இதையும் படிங்க: ஒரே நாளில் 1.15 லட்சம் பேருக்கு கரோனா: புதிய உச்சத்தைத் தொட்ட இந்தியா

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.