ETV Bharat / bharat

தமிழ்நாட்டுக்கு 1 கோடி கோவிட் தடுப்பூசி - மத்திய அமைச்சரிடம் டி.ஆர்., பாலு வலியுறுத்தல்

author img

By

Published : May 22, 2021, 6:17 AM IST

தமிழ்நாட்டுக்குக் குறைந்தபட்சம் 1 கோடி கோவிட் தடுப்பூசிகள் வழங்க வேண்டும் என, திமுக பொருளாளரும், நாடாளுமன்ற திமுக குழுத் தலைவருமான டி.ஆர்.பாலு, மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தனை நேரில் சந்தித்து வலியுறுத்தியுள்ளார்.

'தமிழ்நாட்டுக்கு குறைந்த பட்சம் 1 கோடி கோவிட் தடுப்பூசி வேண்டும்'
'தமிழ்நாட்டுக்கு குறைந்த பட்சம் 1 கோடி கோவிட் தடுப்பூசி வேண்டும்'

டெல்லி: தமிழ்நாட்டுக்குக் குறைந்தபட்சம் 1 கோடி கோவிட் தடுப்பூசிகள் வழங்க வேண்டும் என, மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர். ஹர்ஷ்வர்தனை, டி.ஆர்.பாலு எம்.பி நேரில் சந்தித்து தமிழ்நாடு அரசின் சார்பில் வேண்டுகோள் வைத்துள்ளார்

தடுப்பூசி ஒதுக்கீடு: தமிழ்நாட்டுக்குக் மிகவும் குறைவு

இது தொடர்பாக, திமுக தலைமை அலுவலகம் இன்று (மே 21) வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, "கரோனா தொற்று இரண்டாவது அலை வேகமாக பரவி வரும் இந்த சவாலான நிலையில் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆட்சி பொறுப்பேற்றுள்ள திமுக அரசு பல்வேறு பணிகளை அதிவேகத்துடன் மேற்கொண்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக 18 முதல் 44 வயதுக்கு உட்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தும் செயல்திட்டத்தை தமிழ்நாடு அரசு தொடங்கி உள்ளது. இதற்காக மத்திய அரசு வெறும் 13.85 லட்சம் ஊசிகளையே ஒதுக்கீடு செய்துள்ளது. இந்த ஒதுக்கீடு மிகவும் குறைவானது.

1 கோடி தடுப்பூசி வேண்டும்

எனவே, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுரைப்படி திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவர் டி.ஆர்.பாலு, மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் டாக்டர் ஹர்ஷ்வர்த்தனை நேற்று (மே.20) மாலை நேரில் சந்தித்து தமிழ்நாட்டுக்கு உடனடியாக குறைந்தபட்சம் ஒரு கோடி தடுப்பூசிகளை வழங்க வேண்டும் என்ற கோரிக்கை அடங்கிய கடிதம் ஒன்றினை அளித்தார்.

செங்கல்பட்டு ஆலையில் தடுப்பூசி தயாரிப்பு துவக்கிடுக:

மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகத்துக்கு சொந்தமான செங்கல்பட்டில் உள்ள எச்.எல்.எல். நிறுவனம் ரூ.750 கோடியில் ஊசி தயாரிக்கும் ஆலையை அமைத்துள்ளது. தற்சமயம் இந்த ஆலை தடுப்பூசி உற்பத்தியில் ஈடுபடாமல் உள்ளது. இங்கு கரோனா தடுப்பூசி உற்பத்தி செய்ய கூடுதலாக ரூ.300 கோடி முதலீடு செய்ய வேண்டும். இந்தியாவில், குறிப்பாக தமிழ்நாட்டில் தடுப்பூசி தேவையைக் கருத்தில் கொண்டு உடனடியாக எச்.எல்.எல். ஆலையில் கூடுதல் முதலீடு செய்திட தேவையான நடவடிக்கைளை மேற்கொள்ளவும் கோரிக்கை விடுத்துள்ளார்.

'தமிழ்நாட்டுக்கு குறைந்த பட்சம் 1 கோடி கோவிட் தடுப்பூசி வேண்டும்' - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்
'தமிழ்நாட்டுக்கு குறைந்த பட்சம் 1 கோடி கோவிட் தடுப்பூசி வேண்டும்' - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்

மத்திய அமைச்சர் ஹர்ஷ்வர்தன் பதில் அளித்திடும் போது, டவயது 18 முதல் 44 வயது உடையோருக்கான ஜூன், ஜூலை ஆகிய இரண்டு மாதத்திற்கான தடுப்பூசி எண்ணிக்கை மாதம் ஒன்றுக்கு 11 லட்சத்து 51 ஆயிரத்து 760 ஆக இருக்கும் எனவும் 45 வயதிற்கு மேற்பட்டோருக்கு ஜூன் மாதத்திற்காக 6 லட்சத்து 55 ஆயிரத்து 330 (ஜூன் மாதம் முதல் 15 நாட்களுக்கு) ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதைப் போலவே ஜூன் மாதம் இரண்டு, மூன்றாவது வாரங்களுக்கும் ஒதுக்கீடு செய்யப்படும் என்று உறுதியளித்தார்.

விரைவில் நல்ல முடிவு

செங்கல்பட்டில் அமைந்துள்ள எச்.எல்.எல். தடுப்பூசி தயாரிக்கும் தொழிற்சாலையை புனரமைக்கும் பணியை துரிதப்படுத்த அனைத்து நடவடிக்கைகளையும் தான் மேற்கொண்டுள்ளதாகவும், விரைவில் பூர்வாங்கமாக நல்ல முடிவினை மத்திய அரசு மேற்கொள்ளும் என முதலமைச்சர் அவர்களிடம் தெரிவிக்குமாறு மத்திய அமைச்சர் ஹர்ஷ்வர்தன் உறுதி அளித்துடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்க்கு தனது நல்வாழ்த்துகளையும் தெரிவிக்குமாறு டி.ஆர். பாலு தெரிவித்தார்" இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

டெல்லி: தமிழ்நாட்டுக்குக் குறைந்தபட்சம் 1 கோடி கோவிட் தடுப்பூசிகள் வழங்க வேண்டும் என, மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர். ஹர்ஷ்வர்தனை, டி.ஆர்.பாலு எம்.பி நேரில் சந்தித்து தமிழ்நாடு அரசின் சார்பில் வேண்டுகோள் வைத்துள்ளார்

தடுப்பூசி ஒதுக்கீடு: தமிழ்நாட்டுக்குக் மிகவும் குறைவு

இது தொடர்பாக, திமுக தலைமை அலுவலகம் இன்று (மே 21) வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, "கரோனா தொற்று இரண்டாவது அலை வேகமாக பரவி வரும் இந்த சவாலான நிலையில் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆட்சி பொறுப்பேற்றுள்ள திமுக அரசு பல்வேறு பணிகளை அதிவேகத்துடன் மேற்கொண்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக 18 முதல் 44 வயதுக்கு உட்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தும் செயல்திட்டத்தை தமிழ்நாடு அரசு தொடங்கி உள்ளது. இதற்காக மத்திய அரசு வெறும் 13.85 லட்சம் ஊசிகளையே ஒதுக்கீடு செய்துள்ளது. இந்த ஒதுக்கீடு மிகவும் குறைவானது.

1 கோடி தடுப்பூசி வேண்டும்

எனவே, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுரைப்படி திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவர் டி.ஆர்.பாலு, மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் டாக்டர் ஹர்ஷ்வர்த்தனை நேற்று (மே.20) மாலை நேரில் சந்தித்து தமிழ்நாட்டுக்கு உடனடியாக குறைந்தபட்சம் ஒரு கோடி தடுப்பூசிகளை வழங்க வேண்டும் என்ற கோரிக்கை அடங்கிய கடிதம் ஒன்றினை அளித்தார்.

செங்கல்பட்டு ஆலையில் தடுப்பூசி தயாரிப்பு துவக்கிடுக:

மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகத்துக்கு சொந்தமான செங்கல்பட்டில் உள்ள எச்.எல்.எல். நிறுவனம் ரூ.750 கோடியில் ஊசி தயாரிக்கும் ஆலையை அமைத்துள்ளது. தற்சமயம் இந்த ஆலை தடுப்பூசி உற்பத்தியில் ஈடுபடாமல் உள்ளது. இங்கு கரோனா தடுப்பூசி உற்பத்தி செய்ய கூடுதலாக ரூ.300 கோடி முதலீடு செய்ய வேண்டும். இந்தியாவில், குறிப்பாக தமிழ்நாட்டில் தடுப்பூசி தேவையைக் கருத்தில் கொண்டு உடனடியாக எச்.எல்.எல். ஆலையில் கூடுதல் முதலீடு செய்திட தேவையான நடவடிக்கைளை மேற்கொள்ளவும் கோரிக்கை விடுத்துள்ளார்.

'தமிழ்நாட்டுக்கு குறைந்த பட்சம் 1 கோடி கோவிட் தடுப்பூசி வேண்டும்' - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்
'தமிழ்நாட்டுக்கு குறைந்த பட்சம் 1 கோடி கோவிட் தடுப்பூசி வேண்டும்' - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்

மத்திய அமைச்சர் ஹர்ஷ்வர்தன் பதில் அளித்திடும் போது, டவயது 18 முதல் 44 வயது உடையோருக்கான ஜூன், ஜூலை ஆகிய இரண்டு மாதத்திற்கான தடுப்பூசி எண்ணிக்கை மாதம் ஒன்றுக்கு 11 லட்சத்து 51 ஆயிரத்து 760 ஆக இருக்கும் எனவும் 45 வயதிற்கு மேற்பட்டோருக்கு ஜூன் மாதத்திற்காக 6 லட்சத்து 55 ஆயிரத்து 330 (ஜூன் மாதம் முதல் 15 நாட்களுக்கு) ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதைப் போலவே ஜூன் மாதம் இரண்டு, மூன்றாவது வாரங்களுக்கும் ஒதுக்கீடு செய்யப்படும் என்று உறுதியளித்தார்.

விரைவில் நல்ல முடிவு

செங்கல்பட்டில் அமைந்துள்ள எச்.எல்.எல். தடுப்பூசி தயாரிக்கும் தொழிற்சாலையை புனரமைக்கும் பணியை துரிதப்படுத்த அனைத்து நடவடிக்கைகளையும் தான் மேற்கொண்டுள்ளதாகவும், விரைவில் பூர்வாங்கமாக நல்ல முடிவினை மத்திய அரசு மேற்கொள்ளும் என முதலமைச்சர் அவர்களிடம் தெரிவிக்குமாறு மத்திய அமைச்சர் ஹர்ஷ்வர்தன் உறுதி அளித்துடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்க்கு தனது நல்வாழ்த்துகளையும் தெரிவிக்குமாறு டி.ஆர். பாலு தெரிவித்தார்" இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.