ETV Bharat / bharat

பிணத்தை வைத்து அரசியல் செய்கிறார் மம்தா - மோடி குற்றச்சாட்டு

author img

By

Published : Apr 17, 2021, 8:54 PM IST

சொந்த அரசியல் ஆதாயத்திற்காக பிணத்தை வைத்து மம்தா அரசியல் செய்துவருகிறார். மேற்கு வங்க மக்களுக்கும், மத்திய அரசுக்கும் இடையே சுவர் போல் அவர் தடையாக இருப்பதாக பிரதமர் மோடி தேர்தல் பரப்புரை கூட்டத்தில் தெரிவித்தார்.

PM modi election campaign
பிரதமர் மோடி தேர்தல் பரப்புரை

அசன்சோல்: நான்கு கட்ட வாக்குப்பதிவுக்கு பின்னர் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியில் பிளவு ஏற்பட்டுள்ள நிலையில், அனைத்து கட்ட வாக்குப்பதிவுக்கு பின்னர் அந்த கட்சியே காணாமல் போய்விடும் என்று அசன்சோல் நகரில் நடைபெற்ற தேர்தல் பரப்புரை கூட்டத்தில் பிரதமர் மோடி பேசினார்.

மேற்குவங்க மாநிலத்தில், 8 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறும் நிலையில், இன்று (ஏப்.17) ஐந்தாம் கட்ட வாக்குப்பதிவு 45 தொகுதிகளுக்கு நடைபெறகிறது.

இதற்கிடையே மேற்கு பர்தாமன் மாவட்டத்திலுள்ள தொழில் நகரமான அசன்சோல் பகுதியில் நடைபெற்ற தேர்தல் பரப்புரை கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்று பேசினார். அப்போது அவர் கூறியதாவது:

திரிணமூல் காங்கிரஸ் கட்சி தலைவருக்கு பிணத்தை வைத்து அரசியல் செய்யும் பழைய பழக்கம் உள்ளது. ஏப்ரல் 10ஆம் தேதி கூச் பெகர் மாவட்டத்திலுள்ள சிடல்குன்சி நகரில், எதிர்பாராமல் நிகழ்ந்த துப்பாக்கி சூட்டில் இறந்தவர்களை வைத்து அரசியல் ஆதாயம் தேட முயற்சிக்கிறார்.

நான்கு கட்ட வாக்குப்பதிவுக்கு பின்னர் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியில் பிளவு ஏற்பட்டுள்ளது. வாக்குப்பதிவு முழுவதுமாக முடிந்த பின்னர் மம்தாவையும், அவரது மருமகனையும் மொத்தமாக மக்கள் தோற்கடித்து விடுவார்கள்.

மற்றவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பு அளிக்காத மம்தாவின் போக்கு கூச் பெகார் பகுதியில் துப்பாக்கி சூடு நடப்பதற்கு காரணமாக அமைந்தது எனத் தெளிவாக தெரிகிறது.

இப்படியொரு துயர சம்பவத்துக்கு பிறகும் தேர்தல் பரப்புரையை தொடருமாறு கூச் பெகர் மாவட்ட தலைவர் பார்தா பிரதீம் ராயிடம், மம்தா கூறுவது போல் ஆடியோ வெளியாகியுள்ளது.

தனது சொந்த அரசியல் ஆதாயத்துக்காக பிணத்தை வைத்து அரசியல் செய்யும் பழக்கத்தை கடைபிடித்துள்ளார். மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் நடத்தும் கூட்டத்தில் பங்கேற்பதை தொடர்ந்து தவிர்த்து வந்த அவர், சமீபத்தில் கரோனா அச்சுறுத்தலுக்கு இடையே நடைபெற்ற இரண்டு கூட்டங்களிலும் பங்கேற்காமல் தவிர்த்தார்.

மத்திய அரசின் நலத்திட்டங்களுக்கும், மேற்கு வங்க மக்களுக்கும் இடையே மம்தா சுவர் போல் தடையாக இருக்கிறார். இதன் காரணமாக பிஎம் கிஷான், ஆயூஷ்மான் பாரத் போன்ற திட்டங்கள் மக்களுக்கு சென்றடையவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

கொல்கத்தாவுக்கு பிறகு அதிக மக்கள் தொகை கொண்ட நகரமான அசன்சோல் உள்ளிட்ட 36 தொகுதிகளில் 7ஆம் கட்டமாக ஏப்ரல் 26ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.

இதையும் படிங்க: கும்பமேளா ஏன் இன்னும் நிறுத்தப்படவில்லை?

அசன்சோல்: நான்கு கட்ட வாக்குப்பதிவுக்கு பின்னர் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியில் பிளவு ஏற்பட்டுள்ள நிலையில், அனைத்து கட்ட வாக்குப்பதிவுக்கு பின்னர் அந்த கட்சியே காணாமல் போய்விடும் என்று அசன்சோல் நகரில் நடைபெற்ற தேர்தல் பரப்புரை கூட்டத்தில் பிரதமர் மோடி பேசினார்.

மேற்குவங்க மாநிலத்தில், 8 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறும் நிலையில், இன்று (ஏப்.17) ஐந்தாம் கட்ட வாக்குப்பதிவு 45 தொகுதிகளுக்கு நடைபெறகிறது.

இதற்கிடையே மேற்கு பர்தாமன் மாவட்டத்திலுள்ள தொழில் நகரமான அசன்சோல் பகுதியில் நடைபெற்ற தேர்தல் பரப்புரை கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்று பேசினார். அப்போது அவர் கூறியதாவது:

திரிணமூல் காங்கிரஸ் கட்சி தலைவருக்கு பிணத்தை வைத்து அரசியல் செய்யும் பழைய பழக்கம் உள்ளது. ஏப்ரல் 10ஆம் தேதி கூச் பெகர் மாவட்டத்திலுள்ள சிடல்குன்சி நகரில், எதிர்பாராமல் நிகழ்ந்த துப்பாக்கி சூட்டில் இறந்தவர்களை வைத்து அரசியல் ஆதாயம் தேட முயற்சிக்கிறார்.

நான்கு கட்ட வாக்குப்பதிவுக்கு பின்னர் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியில் பிளவு ஏற்பட்டுள்ளது. வாக்குப்பதிவு முழுவதுமாக முடிந்த பின்னர் மம்தாவையும், அவரது மருமகனையும் மொத்தமாக மக்கள் தோற்கடித்து விடுவார்கள்.

மற்றவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பு அளிக்காத மம்தாவின் போக்கு கூச் பெகார் பகுதியில் துப்பாக்கி சூடு நடப்பதற்கு காரணமாக அமைந்தது எனத் தெளிவாக தெரிகிறது.

இப்படியொரு துயர சம்பவத்துக்கு பிறகும் தேர்தல் பரப்புரையை தொடருமாறு கூச் பெகர் மாவட்ட தலைவர் பார்தா பிரதீம் ராயிடம், மம்தா கூறுவது போல் ஆடியோ வெளியாகியுள்ளது.

தனது சொந்த அரசியல் ஆதாயத்துக்காக பிணத்தை வைத்து அரசியல் செய்யும் பழக்கத்தை கடைபிடித்துள்ளார். மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் நடத்தும் கூட்டத்தில் பங்கேற்பதை தொடர்ந்து தவிர்த்து வந்த அவர், சமீபத்தில் கரோனா அச்சுறுத்தலுக்கு இடையே நடைபெற்ற இரண்டு கூட்டங்களிலும் பங்கேற்காமல் தவிர்த்தார்.

மத்திய அரசின் நலத்திட்டங்களுக்கும், மேற்கு வங்க மக்களுக்கும் இடையே மம்தா சுவர் போல் தடையாக இருக்கிறார். இதன் காரணமாக பிஎம் கிஷான், ஆயூஷ்மான் பாரத் போன்ற திட்டங்கள் மக்களுக்கு சென்றடையவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

கொல்கத்தாவுக்கு பிறகு அதிக மக்கள் தொகை கொண்ட நகரமான அசன்சோல் உள்ளிட்ட 36 தொகுதிகளில் 7ஆம் கட்டமாக ஏப்ரல் 26ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.

இதையும் படிங்க: கும்பமேளா ஏன் இன்னும் நிறுத்தப்படவில்லை?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.